இந்தியா

பா.ஜ.க MLA-வை கைது செய்ய உத்தரவிட்ட நீதிமன்றம் : காரணம் என்ன?

கர்நாடக அமைச்சர் மனைவி குறித்து சர்ச்சை கருத்து தெரிவித்த பா.ஜ.க MLA-வை கைது செய்ய நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

பா.ஜ.க MLA-வை கைது செய்ய உத்தரவிட்ட நீதிமன்றம் : காரணம் என்ன?
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

கர்நாடக மாநிலத்தில் பா.ஜ.க சட்டமன்ற உறுப்பினராக இருப்பவர் பசன கௌடா பாட்டீல். இவர் அமைச்சர் தினேஷ் குண்டுராவின் மனைவி குறித்து சர்ச்சை கருத்து ஒன்றை தெரிவித்துள்ளார்.

அதாவது,தினேஷ் குண்டுராவின் குடும்பத்தில் பாதி பாகிஸ்தான் உள்ளது என்று, அமைச்சர் மனைவி இஸ்லாமிய சமூகத்தை சேர்ந்தவர் என்பதை குறிப்பிடும் வகையில் பேசியுள்ளார்.

இவரது பேச்சுக்கு கண்டனம் தெரிவித்து, மாநில மகளிர் ஆணையத்தில் அமைச்சர் தினேஷ் குண்டுராவின் மனைவி தபஸ்ஸம் ராவ் புகார் அளித்துள்ளார்.

இது தொடர்பான வழக்கு பெண்கள் சிறப்பு நீதிமன்றத்தில் நடந்து வருகிறது. விசாரணைக்கு பசன கௌடா பாட்டீல் நீதிமன்றத்தில் ஆஜராக உத்தரவிடப்பட்டது. ஆனால் அவர் விசாரணைக்கு ஆஜராகவில்லை.

இதனைத் தொடர்ந்து பா.ஜ.க சட்டமன்ற உறுப்பினர் பசன கௌடா பாட்டீலை கைது செய்ய நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

banner

Related Stories

Related Stories