உலகம்

ஹமாஸ் தலைவர் இஸ்மாயில் ஹனியே கொலையில் ஈரான் ராணுவம் ? பின்னணியில் இஸ்ரேல் உளவுத்துறையான மொசாட் !

ஈரான் ராணுவத்தின் உயர் பிரிவான இஸ்லாமிய புரட்சிகர படையினரே ஹமாஸ் தலைவர் இஸ்மாயில் ஹனியே கொல்லப்பட்ட தாக்குதலை நடத்தியதாக செய்திகள் வெளியாகியுள்ளது.

ஹமாஸ் தலைவர் இஸ்மாயில் ஹனியே கொலையில் ஈரான் ராணுவம் ? பின்னணியில் இஸ்ரேல் உளவுத்துறையான மொசாட் !
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Praveen
Updated on

இஸ்ரேல் -பாலஸ்தீனம் இடையே கடந்த பல ஆண்டுகளாக பிரச்சனை இருந்து வருகிறது. பாலஸ்தீன பகுதியில் இஸ்ரேல் தொடர்ந்து மேற்கொண்டு வந்த குடியேற்றம் மற்றும் அல்- அக்ஸா மசூதி பகுதியில் இஸ்ரேல் மேற்கொண்ட ஆக்கிரமிப்பு போன்றவற்றால் அங்கு பரபரப்பு ஏற்பட்டு வந்தது.

இந்த சூழலில் கடந்த ஆண்டு அக்டோபர் 7-ம் தேதி, இஸ்ரேலின் நடவடிக்கைக்கு பதிலடி கொடுக்கும் வகையில் ஹமாஸ் அமைப்பு இஸ்ரேலை நோக்கி ஏவுகணைகளை அனுப்பி தாக்குதல் நடத்தியது. மேலும், இஸ்ரேலின் பல பகுதியில் நுழைந்து ஹமாஸ் அமைப்பினர் தாக்குதல் நடத்தினர். இதில் நூற்றுக்கணக்கான இஸ்ரேல் குடிமக்கள் மற்றும் வெளிநாட்டினர் கொல்லப்பட்டனர். அதோடு ஏராளமானோரை ஹமாஸ் அமைப்பு பணயக்கைதிகளாக பிடித்து வைத்தது.

ஹமாஸ் அமைப்பின் இந்த நடவடிக்கைக்கு பதிலடியாக இஸ்ரேல் ராணுவம் விமானங்கள் மூலமும், ஏவுகணைகளை அனுப்பியும் காசாவின் மீது தாக்குதல் நடத்தி வருகின்றது. இந்த தாக்குதல் இதுவரை 39 ஆயிரத்துக்கும் அதிகமான அப்பாவி பாலஸ்தீன குடிமக்கள் உயிரிழந்துள்ளதாக ஹமாஸ் அமைப்பு அறிவித்துள்ளது.

ஹமாஸ் தலைவர் இஸ்மாயில் ஹனியே கொலையில் ஈரான் ராணுவம் ? பின்னணியில் இஸ்ரேல் உளவுத்துறையான மொசாட் !

இதனிடையே ஈரான் புதிய அதிபர் மசூத் பெசெஸ்கியனின் பதவியேற்பு விழாவுக்காக இஸ்மாயில் ஹனியே ஈரான் தலைநகர் தெக்ரான் சென்றிருந்தபோது நடத்தப்பட்ட வெடிகுண்டு தாக்குதலில் அவர் கொல்லப்பட்டார். இந்த தாக்குதல் குறித்து இஸ்ரேல் கருத்து ஏதும் தெரிவிக்காத நிலையில், ஈரான் ராணுவத்தின் உயர் பிரிவான இஸ்லாமிய புரட்சிகர படையினரே இந்த தாக்குதலை நடத்தியதாக செய்திகள் வெளியாகியுள்ளது.

இது குறித்து அமெரிக்காவின் நியூயார்க் டைம்ஸ் நாளிதழ் வெளியிட்டுள்ள செய்தியில் , இஸ்லாமிய புரட்சிகர படையின் (ஐஆர்ஜிசி) கட்டுப்பாட்டில் உள்ள விருந்தினர் மாளிகையில் இஸ்மாயில் ஹனியே தங்கியிருந்தபோதே இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இதில் இஸ்லாமிய புரட்சிகர படையினர் சிலர் இஸ்ரேல் உளவுப்பிரிவான மொசாத்தின் ஏஜெண்டுகளாக செயல்பட்டு வந்துள்ளனர். அவர்களே இந்த தாக்குதலை நடத்தியுள்ளனர் என்று கூறியுள்ளது. இந்த கருத்துக்கு வலு சேர்க்கும் வகையில் இஸ்லாமிய புரட்சிகர படையை சேர்ந்த அதிகாரிகள், வீரர்கள் உட்பட 24 பேர் கைது செய்யப்பட்டிருப்பதாக ஈரான் ஊடகங்கள் செய்திகள் வெளியிட்டுள்ளது என்பதும் கவனிக்கத்தக்கதாக மாறியுள்ளது.

banner

Related Stories

Related Stories