உலகம்

புலம்பெயர்ந்தோர் தங்க வைக்கப்பட்டிருந்த முகாமில் இஸ்ரேல் தாக்குதல் : 90க்கும் மேற்பட்டோர் உயிரிழப்பு !

புலம்பெயர்ந்தோர் தங்க வைக்கப்பட்டிருந்த இடத்தில் இஸ்ரேல் தாக்குதல் நடத்தியதில் 90-க்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

புலம்பெயர்ந்தோர் தங்க வைக்கப்பட்டிருந்த முகாமில் இஸ்ரேல் தாக்குதல் : 90க்கும் மேற்பட்டோர் உயிரிழப்பு !
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Praveen
Updated on

இஸ்ரேல் -பாலஸ்தீனம் இடையே கடந்த பல ஆண்டுகளாக பிரச்சனை இருந்து வருகிறது. பாலஸ்தீன பகுதியில் இஸ்ரேல் தொடர்ந்து மேற்கொண்டு வந்த குடியேற்றம் மற்றும் அல்- அக்ஸா மசூதி பகுதியில் இஸ்ரேல் மேற்கொண்ட ஆக்கிரமிப்பு போன்றவற்றால் அங்கு பரபரப்பு ஏற்பட்டு வந்தது.

இந்த சூழலில் கடந்த ஆண்டு அக்டோபர் 7-ம் தேதி, இஸ்ரேலின் நடவடிக்கைக்கு பதிலடி கொடுக்கும் வகையில் ஹமாஸ் அமைப்பு இஸ்ரேலை நோக்கி ஏவுகணைகளை அனுப்பி தாக்குதல் நடத்தியது. மேலும், இஸ்ரேலின் பல பகுதியில் நுழைந்து ஹமாஸ் அமைப்பினர் தாக்குதல் நடத்தினர். இதில் நூற்றுக்கணக்கான இஸ்ரேல் குடிமக்கள் மற்றும் வெளிநாட்டினர் கொல்லப்பட்டனர். அதோடு ஏராளமானோரை ஹமாஸ் அமைப்பு பணயக்கைதிகளாக பிடித்து வைத்தது.

ஹமாஸ் அமைப்பின் இந்த நடவடிக்கைக்கு பதிலடியாக இஸ்ரேல் ராணுவம் காசா பகுதியில் ராணுவத்தை அனுப்பியுள்ளது. அதோடு இஸ்ரேல் விமானங்கள் மூலமும், ஏவுகணைகளை அனுப்பியும் காசாவின் மீது தாக்குதல் நடத்தி வருகின்றனர். தற்போதைய நிலையில், 90 சதவீத காசாவின் பரப்பு இஸ்ரேலில் கட்டுப்பாட்டில் உள்ளது. இந்த தாக்குதல் இதுவரை 39 ஆயிரத்துக்கும் அதிகமான அப்பாவி பாலஸ்தீன குடிமக்கள் உயிரிழந்துள்ளதாக ஹமாஸ் அமைப்பு அறிவித்துள்ளது.

புலம்பெயர்ந்தோர் தங்க வைக்கப்பட்டிருந்த முகாமில் இஸ்ரேல் தாக்குதல் : 90க்கும் மேற்பட்டோர் உயிரிழப்பு !

இந்த நிலையில், புலம்பெயர்ந்தோர் தங்க வைக்கப்பட்டிருந்த இடத்தில் இஸ்ரேல் தாக்குதல் நடத்தியதில் 90க்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அக்டோபர் 7 தாக்குதலுக்கு காரணமான ஹமாஸ் அமைப்பின் ராணுவப் பிரிவு தலைமைத் தளபதி முகமது டேயிஃபைக் குறிவைத்து இந்த தாக்குதல் நடந்ததாக இஸ்ரேல் ராணுவம் தெரிவித்துள்ளது.

அதே நேரம் போரிலிருந்து தப்புவதற்காக இடம் பெயா்ந்த பாலஸ்தீனா்கள் வைக்கப்பட்டிருந்த முகாம்களில் இந்தத் தாக்குதல் நடந்ததாகவும், இதில் 91 போ் உயிரிழந்த நிலையில். 289 போ் காயமடைந்தனா் என்றும் காசா சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

banner

Related Stories

Related Stories