உலகம்

உக்ரைன் மீது ரஷ்யா ஏவுகணை தாக்குதல்... மோடியை விளாசிய ரஷ்ய அதிபர் செலன்ஸ்கி ? - பின்னணி என்ன?

உக்ரைன் மீது ரஷ்யா ஏவுகணை தாக்குதல்... மோடியை விளாசிய ரஷ்ய அதிபர் செலன்ஸ்கி ? - பின்னணி என்ன?
  • Twitter
  • Facebook
  • WhatsApp
KL Reshma
Updated on

கடந்த 2022 ஆம் ஆண்டு ரஷ்யா - உக்ரைன் இடையேயான போர் தொடங்கிய நிலையில், தற்போது இரண்டு ஆண்டுகளை கடந்துள்ளது. இந்த போருக்கு உலக நாடுகள் தங்கள் எதிர்ப்பை தெரிவித்த போதிலும், தற்போதும் உக்கிரமான நடந்து வருகிறது. வான்வழி, கடல்வழி மற்றும் தரைவழி என மும்முனை தாக்குதலை நடத்துவதால் பெரும் உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளன.

உக்ரைன் நாட்டின் ஏராளமான இராணுவ இலக்குகளை ரஷ்யப் படைகள் தாக்கி அழித்துள்ளன. அதேபோல் உக்ரைன் தங்களைத் தற்காத்துக்கொள்ள, ரஷ்யப் படைகளுக்குப் பதிலடி கொடுத்து வருகிறது. எனினும் உக்ரைனின் மேற்கு பகுதியில் பெரும்பாலான பகுதிகள் ரஷ்ய கட்டுப்பாட்டின் கீழ் வந்துள்ளன. போர் தொடங்கியதிலிருந்து அமெரிக்கா உள்ளிட்ட மேற்கத்திய நாடுகள் உக்ரைனுக்கு ஆதரவாக ஆயுதங்களை வழங்கி வருகின்றன.

உக்ரைன் மீது ரஷ்யா ஏவுகணை தாக்குதல்... மோடியை விளாசிய ரஷ்ய அதிபர் செலன்ஸ்கி ? - பின்னணி என்ன?

இந்த போர் இத்தனை மாதம் கடந்தும் இவ்வளவும் நாட்கள் தொடர உக்ரைனுக்கு அமெரிக்கா மற்றும் நேட்டோ நாடுகள் அளித்துவரும் பொருளாதார மற்றும் ஆயுத உதவி முக்கிய காரணமாக இருந்து வருகிறது. தற்போது வரை அமெரிக்கா உக்ரைனுக்கு பல பில்லியன் டாலர் அளவுக்கு ஆயுத, பொருளாதார உதவிகளை செய்துள்ளது. எனினும் உக்ரைனின் பல பகுதிகளை ரஷ்ய ராணுவம் தனது கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வந்துள்ளது.

இந்த போரில் லட்சக்கணக்கான மக்கள் உயிரிழந்துள்ளனர். மேலும் பலரும் படுகாயமடைந்து சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த சூழலில் நேற்று (ஜூலை 9) உக்ரைன் மருத்துவமனை மீது ரஷ்யா நடத்திய ஏவுகணை தாக்குதலில் குழந்தைகள் உட்பட சுமார் 37 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் 150- க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்துள்ளனர்.

பொதுவாக இரு நாடுகளுக்கு இடையே நடைபெறும் போரில் மருத்துவமனையை தாக்கக்கூடாது என்று நியதி உள்ளது. ஆனால் அதையும் மீறி ரஷ்யா, உக்ரைனின் மருத்துவமனை மீது தாக்குதல் நடத்தியுள்ளது. இதுபோன்ற தாக்குதல் இதற்கு முன்பு நடைபெற்றாலும், இந்த தாக்குதலுக்கு ரஷ்யாவுக்கு கண்டனங்கள் குவிந்து வருகிறது.

உக்ரைன் மீது ரஷ்யா ஏவுகணை தாக்குதல்... மோடியை விளாசிய ரஷ்ய அதிபர் செலன்ஸ்கி ? - பின்னணி என்ன?

மேலும் குழந்தைகள் மருத்துவமனை, மகப்பேறு மையம், வீடுகள், வணிக வளாகம் என 100க்கும் மேற்பட்ட கட்டிடங்கள் சேதமடைந்துள்ளன. ரஷ்ய பயங்கரவாதிகள் இதற்கு பதிலளிக்க வேண்டும். எங்கள் தரப்பில் ரஷ்யாவிற்கு நாங்கள் சரியான பதிலடி வழங்குவோம் என உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி தெரிவித்துள்ளார். இப்படி இந்த கொடூர தாக்குதல் நடைபெறும் சூழலில், இந்திய பிரதமர் மோடி ரஷ்யாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டார்.

ரஷ்யா சென்ற மோடி, அந்நாட்டின் அதிபர் புதினுடன் கலந்து பேசி, இரு நாட்டு உறவுகள், சர்வதேச விவகாரங்கள் உள்ளிட்டவையை கலந்தாலோசித்தார். மேலும் அவருடன் உணவு உண்டு நெருக்கமாக இருந்துள்ளார். அதோடு மோடியும் புதினும் கட்டியணைத்து தங்கள் நட்பை பரிமாறிக்கொண்டனர். ரஷ்யா - உக்ரைன் போர் நடைபெற்ற பிறகு, பிரதமர் மோடி ரஷ்யா செல்வது இதுவே முதல்முறை.

உக்ரைன் மீது ரஷ்யா ஏவுகணை தாக்குதல்... மோடியை விளாசிய ரஷ்ய அதிபர் செலன்ஸ்கி ? - பின்னணி என்ன?

இந்த நிலையில், மோடியும் புதினும் கட்டியணைத்து நட்பை பரிமாறிக்கொண்டதை மறைமுகமாக குறிப்பிட்டு உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி விமர்சித்துள்ளார். இதுகுறித்து அவரது சமூக வலைதள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், "ரஷ்யாவின் ஏவுகணை தாக்குதலால் குழந்தைகள் உள்பட 37 பேர் பலியாகியுள்ளனர். 170 பேர் படுகாயமடைந்துள்ளனர்.

இந்த தாக்குதலில் பலரும் இடிபாடுகளில் சிக்கியுள்ளனர். ஆனால் அதே நாளில் உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாட்டின் தலைவர், உலகின் மிகப்பெரிய குற்றவாளியை கட்டியணைப்பதை காணும்போது அமைதியை நிலநாட்டுவதற்கான முயற்சி தோற்றது போல் உள்ளது." என்று குறிப்பிட்டுள்ளார்.

banner

Related Stories

Related Stories