தமிழ்நாடு

வீட்டில் பதுக்கிய கோவில் சிலைகள் - 4 பேர் கைது : நடந்தது என்ன?

சென்னையில் சிலைக்கடத்தலில் ஈடுபட்ட 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

வீட்டில் பதுக்கிய கோவில் சிலைகள் - 4 பேர் கைது : நடந்தது என்ன?
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

சென்னை அடையாறு சாஸ்திரி நகரில் குடியிருக்கும் சுமதி என்பவர் வீட்டில், சிலைகள் சந்தேகத்திற்கு இடமான முறையில் பதுக்கி வைக்கப்பட்டுள்ளதாக சிலை திருட்டு தடுப்புப்பிரிவுக்கு தகவல் கிடைத்தது.

இதனைத் தொடர்ந்து சிலை திருட்டு தடுப்புப்பிரிவு தலைமையக காவல் ஆய்வாளரும் தனிப்படையினரும் உடனே விரைந்து சென்று மேற்கண்ட இடத்தில் சோதனை நடத்தினார்கள்.

அப்போது அங்கு,நாகாத்தம்மன் உலோகச் சிலையும் உலோக உடைவாள் ஒன்றும் இருந்தன. இது குறித்து சுமதியிடம் விசாரித்ததில் சென்னை முகப்பேரைச் சேர்ந்த கலியமூர்த்தி , தங்கராஜ், சேலம் மாவட்டம், கொங்கணாபுரத்தை சேர்ந்த ராஜேஷ்கண்ணன் ஆகிய மூவரும் மேற்கண்ட சிலைகள். ஒரு கோவிலிலிருந்து திருடப்பட்டதாகவும் மிகவும் சக்தி வாய்ந்தது என்று சொன்னதாகவும், இந்த சிலைகளை பாதுகாப்பாக வைத்திருந்தால் சரியான நேரத்தில் கோடிக் கணக்கான ரூபாய்க்கு விற்கலாம் என்று உறுதி அளித்ததாகவும் தெரிவித்தார்.

பின்னர் சுமதியும் அவரது கணவர் பிரகாசும் சிலை குறித்து எந்த ஆவணங்களையும் முகாந்திரத்தையும் சமர்ப்பிக்காத காரணத்தினால் மேற்கண்ட சிலைகள் தனிப்படையினரால் கைப்பற்றப்பட்டது.

இது குறித்து வழக்கு பதிவு செய்யப்பட்டடு மதி மற்றும் பிரகாஷ், ஆகியோர் ஜூலை 19 ஆம்தேதி கைது செய்யப்பட்டனர்.அவர்கள் அளித்த தகவலின் பேரில் முகப்பேரைச் சேர்ந்த கலியமூர்த்தி என்பவரும் தங்கராஜ் என்பவரும் கைது செய்யப்பட்டார்கள். இதில் தங்கராஜிடமிருந்து மற்றொரு அம்மன் சிலை கைப்பற்றப்பட்டது.மேற்படி நான்கு பேரும் எழும்பூர் மாண்புமிகு பெருநகர தலைமை குற்றவியல் நடுவர் முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்டு சென்னை புழல் சிறையில் அடைக்கப்பட்டனர்.

இந்த வழக்கில் சம்மந்தப்பட்ட மேலும் ஓர் எதிரியான ராஜேஷ்கண்ணன் என்பவர் சிலை திருட்டு தடுப்பு காவல்நிலைய குற்ற எண். 06/2024 வழக்கில் ஏற்கனவே கைது செய்யப்பட்டு திருச்சி மத்திய சிறையில் உள்ளார். இவரை நீதிமன்ற காவலில் எடுத்து விசாரிக்க வேண்டி உள்ளது.

மேலும் இந்த சிலைகள் எந்த கோவிலில் இருந்து எடுக்கப்பட்டன. இதில் மேலும் யார் சம்மந்தப்பட்டிருக்கிறார்கள் என்பதைப் பற்றி புலன் விசாரணை தொடர்ந்து நடைபெற்றுக்கொண்டிருக்கிறது.

banner

Related Stories

Related Stories