அரசியல்

பாஜக உடன் கூட்டணி வைத்துள்ள பாமக சமூக நீதியை பற்றி பேசலாமா ? - செல்வப்பெருந்தகை கேள்வி !

பாஜக உடன் கூட்டணி வைத்துள்ள பாமக சமூக நீதியை பற்றி பேசலாமா என செல்வப்பெருந்தகை கேள்வி எழுப்பியுள்ளார்.

பாஜக உடன் கூட்டணி வைத்துள்ள பாமக சமூக நீதியை பற்றி பேசலாமா ? - செல்வப்பெருந்தகை கேள்வி !
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Praveen
Updated on

சென்னை சத்தியமூர்த்தி பவனில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை தலைமையில் தமிழ்நாடு இளைஞர் காங்கிரஸ் மாநில செயற்குழு கூட்டமானது நடைபெற்றது. இந்த ஆலோசனை கூட்டத்தின் நிறைவாக செய்தியாளர்களை செல்வப்பெருந்தகை சந்தித்தார்.

அப்போது பேசிய அவர், "காங்கிரஸ் ஆட்சியில் ரயில்வேக்கு நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்து கொண்டிருந்தோம். ஆனால், பாஜக ஆட்சியில் ரயில்வே துறைக்கு என்ற நிதி நிலை அறிக்கையை எடுத்து விட்டார்கள்.‌ மாநில வாரியாக மக்கள் தொகை அடிப்படையில் ரயில்வே துறைக்கு நிதிநிலை ஒதுக்குவார்கள். இன்று ரயில்வே துறையில் தமிழ்நாடு புறக்கணிக்கப்பட்டிருக்கிறது.

ரயில் விபத்து தொடர் கதையாக நாடு முழுவதும் நடைபெற்று வருகிறது. இதை ஏன் கட்டுப்படுத்த முடியவில்லை. மோடி அரசு இதில் ஏன் கவனம் செலுத்தவில்லை? ரயில்வே பாதுகாப்புக்காக ஒதுக்கப்பட்ட நிதியை பாதுகாப்பு பணிகளில் செயல்படுத்தாமல் அதிகாரிகள் பங்கலா கட்டிக் கொள்கிறார்கள் என்று இந்தாண்டு சிஏஜி அறிக்கை கூறுகிறது. 10.5 சதவீதம் அதிமுக எதற்காக கொடுத்தது? எதற்காக பாமக பெற்றுக் கொண்டார்கள். சமூக நீதிக்காக ஆரம்பிக்கப்பட்டது பாமக இன்று சமூக நீதிக்காக செயல்படுகிறதா.? ஒரு சாமானியனாக நான் கேட்கிறேன் பாஜக உடன் கூட்டணி வைத்துள்ள பாமக சமூக நீதியை பற்றி பேசலாமா ?

பாஜக உடன் கூட்டணி வைத்துள்ள பாமக சமூக நீதியை பற்றி பேசலாமா ? - செல்வப்பெருந்தகை கேள்வி !

சாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்பை நடத்தினால்தான் சமூக நீதியை வென்றெடுக்க முடியும் என்று சாதாரண மனிதர்களுக்கும் தெரியும். சாதி வாரி கணக்கெடுப்பும் மக்கள் தொகை கணக்கெடுப்பும் நடத்துவதற்கு பாஜக எதிராக இருக்கிறது. 2011 இல் காங்கிரஸ் மக்கள் தொகை கணக்கெடுப்பை நடத்தினோம். 2021 இல் மோடி அரசு ஏன் மக்கள் தொகை கணக்கெடுப்பை நடத்தவில்லை? இதை பாமக நிறுவனர், தலைவர் பாஜகவிடம் கேட்பாரா ?

பாஜக ஆர்.எஸ்.எஸ் சித்தாந்தம் சமூக நீதிக்கு எதிரான சித்தாந்தம். கலைஞர் ஆட்சியில் உள் ஒதுக்கீடு, இட ஒதுக்கீடு கொடுத்திருக்கிறார். முறையாக எந்த நீதிமன்றத்திற்கு சென்றாலும் அது செல்லுபடியாகும். மக்களை ஏமாற்ற கூடாது என்று ஓய்வுபெற்ற நீதியரசர் குழுவைத்து குழு விசாரணை செய்து அறிக்கை கொடுத்தது அந்த அறிக்கையின் அடிப்படையில் இட ஒதுக்கீட்டை கலைஞர் திமுக ஆட்சியில் கொண்டு வந்தார். ஆனால் எடப்பாடி ஆட்சியில் தேர்தல் கடைசி நேரத்தில் எந்தவித குழுவும் அமைக்காமல் 10.5% கொடுப்பதாக அறிவித்தார். ஆனால் நீதிமன்றம் இந்த 10.5% இட ஒதுக்கீட்டிற்கு என்ன ஆதாரம் என்று கேட்டார்கள். அதனால்தான் உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்தது. இதற்கு பாமக கட்சி தலைவர் மூழுப் பொறுப்பை ஏற்க வேண்டும்.10.5 சதவீதம் அதிமுக அரசியல் காரணங்களுக்காக வழங்கப்பட்டது. அரசியல் காரணங்களுக்காக பாமக பெற்றது.

இவர் எப்படி முதலமைச்சரை குறை சொல்ல முடியும். காரியம் ஆக வேண்டும் என்றால் பாமக வீட்டுக்கு செல்வார்கள். கலைஞர் இட ஒதுக்கீடு கொடுத்தவுடன் பாமக திண்டிவனம் கூட்டத்தில் கலைஞர்க்கு மகாராஜா நாற்காலியை போட்டனர். கலைஞர் உட்கார மறுத்தார். சமூகநீதி வென்றெடுத்த நாயகன் என்று சொன்ன அந்த வாய் இப்போ வேற வாயா? கலைஞர் இல்லை என்றால் எங்கள் சமூகத்திற்கு விடியல் இல்லை என்று பேசினார். திண்டிவனம் கலைஞர்க்கு பாராட்டு விழா உரையை திரும்பிப் பார்க்க வேண்டும். பரந்தூர் விமானநிலையத்திற்கு என் நிலைப்பாடு என்றைக்கும் சட்டமன்ற தொகுதி உறுப்பினராகவும் என்ற முறையில் ஆதரவு மக்கள் பக்கம் தான்"என்று கூறினார்.

banner

Related Stories

Related Stories