இந்தியா

ம.பி.யில் கொடூரம் : 9 வயது தங்கையை வன்கொடுமை செய்து கொன்ற சிறுவன் : உண்மையை மறைத்த தாய், சகோதரிகள் !

ம.பி.யில் கொடூரம் : 9 வயது தங்கையை வன்கொடுமை செய்து கொன்ற சிறுவன் : உண்மையை மறைத்த தாய், சகோதரிகள் !
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Praveen
Updated on

மத்திய பிரதேச மனிதம் ரேவா பகுதியில் ஒரு வீட்டில் ஒன்பது வயது சிறுமி இறந்ததாக காவல்துறைக்கு தகவல் தரப்பட்டுள்ளது. அதன்படி போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து சிறுமியை பிரேத பரிசோதனைக்கு அனுப்பியுள்ளனர். மேலும் சிறுமியின் வீட்டில் இருந்தவர்களிடம் விசாரித்துள்ளனர்.

அதில் விசபூச்சு கடித்து சிறுமி இறந்ததாக கூறப்பட்ட நிலையில், பிரேத பரிசோதனையில் சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கழுத்து நெரித்து கொல்லப்பட்டது தெரியவந்தது. தொடர்ந்து இது குறித்து வழக்கு பதிவு செய்து வீட்டில் இருந்தவர்களிடம் விசாரித்தபோது பெரும் அதிர்ச்சி உண்மை ஒன்று தெரியவந்துள்ளது.

ம.பி.யில் கொடூரம் : 9 வயது தங்கையை வன்கொடுமை செய்து கொன்ற சிறுவன் : உண்மையை மறைத்த தாய், சகோதரிகள் !

வீட்டில் 9 வயது சிறுமியும், 13 வயது சகோதரனும் ஒன்றாக உறங்கியுள்ளனர். சிறுவன் தனது மொபைலில் ஆபாச படம் பார்த்து அங்கு தூங்கிக்கொண்டிருந்த தனது தங்கையை பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். அதன்பின்னர் சிறுமி யாரிடம் இதனை சொல்லக்கூடாது என்பதற்காக அவரை கழுத்தை நெரித்து கொலை செய்துள்ளார்.

பின்னர் இது குறித்து அறிந்த சிறுவனின் பெற்றோர் மற்றும் இரண்டு சகோதரிகள் இதனை யாரிடமும் கூறாமல் மறைத்துள்ளனர். அதனைத் தொடர்ந்து அவர்களை கைது செய்த போலிஸார் விரைவில் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தவுள்ளனர்.

banner

Related Stories

Related Stories