சினிமா

தொடர் பாலியல் புகார்... மலையாள திரை பிரபலங்கள் ரஞ்சித், சித்திக் மீது பாய்ந்த வழக்கு !

தொடர் பாலியல் புகார்... மலையாள திரை பிரபலங்கள் ரஞ்சித், சித்திக் மீது பாய்ந்த வழக்கு !
  • Twitter
  • Facebook
  • WhatsApp
KL Reshma
Updated on

கேரளாவில் கடந்த சில ஆண்டுகளுக்கு முன் நடிகை பாவனா காரில் கடத்தப்பட்டு பாலியல் வன்கொடுமைக்கு ஆளான சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்திய நிலையில், இந்த விவகாரத்தில் பிரபல நடிகர் திலீப் கைது செய்யப்பட்டார். இந்த சம்பவத்தை தொடர்ந்து மலையாள திரையுலகில் நடிகைகள் உள்ளிட்ட பெண்கள் சந்திக்கும் பிரச்னைகள் குறித்து ஆய்வு செய்ய 2017 ஆம் ஆண்டு ஓய்வு பெற்ற உயர் நீதிமன்ற நீதிபதி ஹேமா தலைமையில் ஒரு குழு அமைக்கப்பட்டது.

இந்த குழுவின் அறிக்கை சில காரணமாக வெளியிடாமல் இருந்த நிலையில், கடந்த வாரம் வெளியானது. சுமார் 233 பக்கம் கொண்ட அந்த அறிக்கையில் திரையுலகில் வாய்ப்புகளைப் பெற பெண்கள் பாலியல் ரீதியாக சுரண்டப்படுவதும், மலையாளத் திரையுலகம் மாஃபியா பிடியில் சிக்கி உள்ளதும் தெரியவந்தது. பல நடிகர்கள் திரைப்பட வாய்ப்புக்காக சமரசம் செய்து கொள்ளுமாறு பெண்களை வற்புறுத்துவதாகவும், ஒத்துழைப்பவர்கள், ஒத்துழைக்காதவர்கள் என்று முத்திரை குத்தி படவாய்ப்புகள் வழங்கப்படுவதாகும் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

தொடர் பாலியல் புகார்... மலையாள திரை பிரபலங்கள் ரஞ்சித், சித்திக் மீது பாய்ந்த வழக்கு !

மேலும் பாலியல் துன்புறுத்தல் குறித்து அந்த பெண் வாய் திறந்தால், அவர் பிரச்னைக்குரியவராக கருதப்பட்டு, அவருக்கு பட வாய்ப்புகள் இல்லாமல் போகலாம் என்பதால் அவர்கள் மவுனம் காக்கின்றனர் என்றும் அந்த அறிக்கை சுட்டிக்காட்டியுள்ளது. இந்த அறிக்கை கேரள சினிமா துறையை தாண்டி இந்தியா முழுக்க பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், பல மாநிலங்களில் இதுபோல் குழு அமைத்து விசாரிக்க நடிகைகள் மத்தியில் கோரிக்கை எழுந்து வருகிறது.

தொடர் பாலியல் புகார்... மலையாள திரை பிரபலங்கள் ரஞ்சித், சித்திக் மீது பாய்ந்த வழக்கு !

இந்த சூழலில் மலையாளத்தில் பிரபல நடிகையும் மாடல் அழகியுமான ரேவதி சம்பத், கடந்த 21 ஆண்டுகளுக்கு முன், தான் அறிமுக நடிகையாக திரைத்துறைக்கு வந்தபோது, நடிகர் சித்திக் தனக்கு பாலியல் தொல்லை அளித்ததாக தொலைக்காட்சி பேட்டியில் தெரிவித்திருந்தார். இந்த நிகழ்வால் தனது 16 வயதில் தான் உடலளவிலும் மனதளவிலும் கடுமையாக பாதிக்கப்பட்டதாகவும் ரேவதி சம்பத் குறிப்பிட்டிருந்தார்.

தொடர் பாலியல் புகார்... மலையாள திரை பிரபலங்கள் ரஞ்சித், சித்திக் மீது பாய்ந்த வழக்கு !

இந்த புகார் பூதாகரமான நிலையில், மலையாள நடிகர் சங்க பொதுச் செயலாளர் பதவியில் இருந்து நடிகர் சித்திக் ராஜினாமா செய்தார். ரேவதி சம்பத்தை தொடர்ந்து கேரளா திரைப்பட அகாடமியின் தலைவரான இயக்குநர் ரஞ்சித் மீதும் வங்காள நடிகையான ஸ்ரீலேகா மித்ரா வெளிப்படையாக புகார் தெரிவித்துள்ளார். சில ஆண்டுகளுக்கு முன்னர் மலையாள படத்தில் நடிக்க வைப்பதாக கூறி தன்னிடம் முறைகேடாக நடந்து கொண்டதாகவும், இதனால் அன்று இரவே வாய்ப்பை உதறிவிட்டு கொல்கத்தா திரும்பியதாகவும் தெரிவித்திருந்தார்.

இந்த குற்றச்சாட்டை தொடர்ந்து இயக்குநர் ரஞ்சித்தும் கேரளா திரைப்பட அகாடமியின் பதவியில் இருந்து ராஜினாமா செய்தார். தொடர்ந்து பல்வேறு நடிகைகள், பல நடிகர்கள் தங்கள் மீது பாலியல் ரீதியாக தொல்லைகள் கொடுத்ததாக பேட்டியளித்தும், புகார் தெரிவித்தும் வருகின்றனர். இந்த விவகாரம் இந்திய திரையுலகினர் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தொடர் பாலியல் புகார்... மலையாள திரை பிரபலங்கள் ரஞ்சித், சித்திக் மீது பாய்ந்த வழக்கு !

இந்த சூழலில் வங்காள நடிகை மித்ரா அளித்த புகாரின் பேரில் மலையாள இயக்குனர் ரஞ்சித் மீது நேற்று வழக்குப்பதிவு செய்யப்பட்ட நிலையில், நடிகை ரேவதி சம்பத் அளித்த பேட்டியை தொடர்ந்து, கேரளா டி.ஜிபியிடம் எழுத்து மூலம் புகாரளித்த நிலையில், நடிகர் சித்திக் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. தொடர்ந்து நடிகர் முகேஷ் மீது நடிகை மினு முனிர் காவல்துறையில் புகார் தெரிவித்துள்ளார்.

மலையாள திரையுலகில் அடுத்தடுத்து பாலியல் புகார்கள் எழுந்து வரும் நிலையில், மலையாள நடிகர் சங்கம் (AMMA) முற்றிலுமாக கலைக்கப்பட்டுள்ளது. அதன் தலைவர் மோகன்லால் உள்ளிட்ட 16 நிர்வாகிகள் கூண்டோடு தங்கள் பதவியை ராஜினாமா செய்து, நடிகர் சங்கத்தை கலைத்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

banner

Related Stories

Related Stories