உலகம்

பிரான்ஸ் நாடாளுமன்ற தேர்தல் : இடதுசாரி கூட்டணி வெற்றி... மூன்றாம் இடத்துக்கு தள்ளப்பட்ட வலதுசாரிகள் !

பிரான்ஸ் நாடாளுமன்ற தேர்தலில் இடதுசாரிகள் கூட்டணியான New Popular Front அதிக வாக்குகளை பெற்றுள்ளது.

பிரான்ஸ் நாடாளுமன்ற தேர்தல் : இடதுசாரி கூட்டணி வெற்றி... மூன்றாம் இடத்துக்கு தள்ளப்பட்ட வலதுசாரிகள் !
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Praveen
Updated on

பிரான்சில் தற்போது நாடாளுமன்ற தேர்தல் நடைபெற்று வருகிறது. இந்த தேர்தலில் ஆரம்பத்தில் இருந்தே இடதுசாரிகள் கூட்டணி New Popular Frontக்கும் - ஜனாதிபதி இம்மானுவேல் மேக்கரானின் மையவாத Ensemble கூட்டணிக்கும் போட்டி இருந்து வந்தது.

ஆனால், கடந்த சில நாட்களுக்கு முன்னர் வெளியான முதல்சுற்று வாக்குகளில், தீவிர வலதுசாரி கூட்டணியான National rally முன்னிலை பெற்றது. இடதுசாரிகள் கூட்டணியான New Popular Front இரண்டாம் இடத்தை பிடித்த நிலையில், இம்மானுவேல் மேக்கரானின் மையவாத கூட்டணியாக Ensemble மூன்றாம் இடத்துக்கு தள்ளப்பட்டது.

வலதுசாரி கூட்டணியின் இந்த முன்னிலை உலகளவில் பெரும் பரபரப்பை ஏற்ப்படுத்தியது. தொடர்ந்து இரண்டாம் கட்ட வாக்குப்பதிவுக்கு முன்னதாக வலதுசாரி கூட்டணி வெற்றிபெற்றால் நாடு பெரும் சீரழிவை சந்திக்கும் என்றும், அதனால் மோசமான பாதிப்புகள் ஏற்படும் என்றும் பலரும் கருத்து தெரிவித்தனர்.

பிரான்ஸ் நாடாளுமன்ற தேர்தல் : இடதுசாரி கூட்டணி வெற்றி... மூன்றாம் இடத்துக்கு தள்ளப்பட்ட வலதுசாரிகள் !

தொடர்ந்து இரண்டாம் சுற்று வாக்குப்பதிவு நேற்று நடைபெற்ற நிலையில், அதன் முடிவுகள் தற்போது வெளிவந்துள்ளது. அதில், இடதுசாரிகள் கூட்டணியான New Popular Front அதிக வாக்குகளை பெற்றுள்ளது. இம்மானுவேல் மேக்கரானின் Ensemble கூட்டணி இரண்டாம் இடத்துக்கு முன்னேறியுள்ளது.

அதே நேரம் முதல் சுற்றில் முன்னிலை பெற்ற தீவிர வலதுசாரி கூட்டணியான National rally இரண்டாம் கட்ட வாக்குப்பதிவில் மூன்றாம் இடத்துக்கு தள்ளப்பட்டுள்ளது. இடதுசாரி கூட்டணிக்கு 180 இடங்களும், மையவாத கூட்டணியாக Ensemble-க்கு 159 இடங்களும், வலதுசாரி கூட்டணியான National rallyக்கு 142 இடங்களும் கிடைத்துள்ளது.

அதே நேரம் பெரும்பான்மைக்கு தேவையான 289 இடங்களில் யாரும் வெற்றிபெறாத நிலையில் அங்கு தொங்கு நாடாளுமன்றம் ஏற்பட்டுள்ளது. இந்த தேர்தல் தோல்வியால் ஜனாதிபதி இம்மானுவேல் மேக்கரான் பதிவு விலகுவார் என்று கூறப்பட்ட நிலையில், அவர் தான் பதவியில் தொடரவுள்ளதாக கூறியுள்ளார். அதே நேரம் அவர் எதிர்க்கட்சியை சேர்ந்த பிரதமரை எவ்வாறு எதிர்கொள்ளப்போகிறார் என்ற கேள்வி எழுந்துள்ளது.

banner

Related Stories

Related Stories