உலகம்

”இந்தியாவில் சிறுபான்மையினருக்கு எதிரான வெறுப்புப் பேச்சு அதிகரிப்பு” : அமெரிக்கா வேதனை!

சிறுபான்மையினருக்கு எதிரான வெறுப்புப் பேச்சு இந்தியாவில் அதிகரித்துள்ளதாக அமெரிக்கா கவலை தெரிவித்துள்ளது.

”இந்தியாவில் சிறுபான்மையினருக்கு எதிரான வெறுப்புப் பேச்சு அதிகரிப்பு” : அமெரிக்கா வேதனை!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

இந்­தி­யா­வில் சிறு­பான்­மை­யி­ன­ருக்கு எதி­ரான மத­மாற்­றச் சட்டங்­கள் மற்­றும் வெறுப்­புப் பேச்­சு­கள் அதி­க­ரித்­தி­ருப்­பது கவலை­ய­ளிப்­ப­தாக அமெ­ரிக்க வெளி­யு­ற­வுத் துறை அமைச்­சர் ஆன்­டனி பிளிங்­கன் தெரி­வித்­தார்.

‘சர்­வ­தேச மதச் சுதந்­தி­ரத்­துக்­கான ஆண்­ட­றிக்­கையை’ அவர் புதன்கிழமை வெளி­யிட்­டார். அதில் கூறப்­பட்­டுள்­ள­தா­வது:

இந்­தி­யா­வில் உள்ள 28 மாநி­லங்­க­ளில் 10 மாநி­லங்­க­ளில் மதமாற்றத்­துக்கு எதி­ரான சட்­டங்­கள் நடை­மு­றை­யில் உள்­ளன. சில மாநி­லங்­க­ளில் திரு­ம­ணத்­துக்­காக வலுக்­கட்­டா­ய­மாக மதமாற்­றம் செய்­ப­வர்­க­ளுக்கு அப­ரா­தம் விதிக்­கும் சட்­டங்­க­ளும் இயற்­றப்­பட்­டுள்­ளன.

வலுக்­கட்­டா­ய­மாக மத­மாற்­றம் செய்­வ­தைத் தடுக்­கும் சட்­டத்­தின் கீழ் பொய் வழக்­கு­கள் மூலம் கிறிஸ்­த­வர்­கள் மற்­றும் இஸ்லாமியர்­கள் கைது செய்­யப்­ப­டு­வ­தா­க­வும் சிறுபான்மையினர் புகார் கூறு­கின்­ற­னர் என ஆண்டறிக்­கை­யில் குறிப்­பி­டப்­பட்­டுள்­ளது.

இந்த அறிக்கை தொடர்­பாக ஆன்­டனி பிளிங்­கன் பேசி­ய­தா­வது: ”மதச் சுதந்­தி­ரத்­தைப் பாது­காக்க உல­க­ள­வில் பல்­வேறு தரப்பினரும் தொடர்ந்து கடி­ன­மா­கப் போராடி வரு­கின்­ற­னர். ஆனால், இந்­தி­யா­வில் சிறு­பான்­மை­ யி­ன­ருக்கு எதி­ரான நடவடிக்கை­கள் அதி­க­ரித்­துள்­ளன.

மத­மாற்­றத்­துக்கு எதி­ரான சட்­டங்­கள், வெறுப்­புப் பேச்­சு­கள், சிறுபான்­மை­யி­ன­ரின் வழி­பாட்­டுத் தலங்­கள் மற்­றும் அவர்­க­ளின் வீடு­களை இடித்­தல் போன்ற சம்­ப­வங்­கள் தொடர்ந்து அதி­க­ரித்து வரு­வது கவ­லை­ய­ளிக்­கி­றது என்­றார்.

இந்­தி­யா­வில் மனித உரி­மை­கள் மீறல் சம்­ப­வங்­கள் அதி­க­ரித்து வரு­வ­தாக அமெ­ரிக்கா கடந்த ஆண்டு வெளி­யிட்ட அறிக்­கை­யில் தெரி­விக்­கப்­பட்­டி­ருந்­தது. இதை இந்­தியா ஏற்­கெ­னவே நிராகரித்தது. மேலும், தவ­றான தக­வல்­கள் மற்­றும் சரி­யான புரிதல் இன்­மை­யால் இது­போன்ற அறிக்­கை­க­ளைத் தயா­ரித்து சில அமெ­ரிக்க அதி­கா­ரி­கள் வெளி­யி­டு­கின்­ற­னர். அமெரிக்காவுட­னான உறவை நாங்­கள் மதிக்­கி­றோம். உண்மையா­கவே கவ­னத்­தில் கொள்­ள­வேண்­டிய விவ­கா­ரங்களில் நாங்­கள் ­வெ­ளிப்­ப­டைத்­தன்­மை­யு­டன் செயல்­ப­டு­வோம்’ என இந்தியா தெரி­வித்­தி­ருந்­தது குறிப்­பி­டத்­தக்­கது.

banner

Related Stories

Related Stories