தமிழ்நாடு

உருது மொழியை யாரும் திணிக்கவில்லை - உங்களின் கனவுகள் தமிழ்நாட்டில் எடுபடாது: தமிழிசைக்கு அமைச்சர் பதிலடி!

உருது மொழியை யாரும் திணிக்கவில்லை! நீங்கள் எங்கெல்லாம் வாய்ப்பு கிடைக்கிறதோ அங்கெல்லாம் இந்தி மொழியை திணிக்கிறீர்கள் என தமிழிசை சௌந்தர்ராஜனுக்கு அமைச்சர் அன்பில் மகேஸ் காட்டமான பதில் தெரிவித்துள்ளார்.

உருது மொழியை யாரும் திணிக்கவில்லை - உங்களின் கனவுகள் தமிழ்நாட்டில் எடுபடாது: தமிழிசைக்கு அமைச்சர் பதிலடி!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Prem Kumar
Updated on

பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி 234 தொகுதிகளுக்கும் நேரடியாக சென்று ஆய்வு நடத்தி வருகின்றார். அந்தவகையில் கடந்த 09 ஆம் தேதியன்று ஆம்பூர் தொகுதிக்குட்பட்ட அரசு உதவி பெறும் மஸாருல் உலூம் உருது மேல்நிலைப் பள்ளியில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். உருது மொழிப்பாட வகுப்பில் அமர்ந்து கற்றல் கற்பித்தல் குறித்து ஆய்வு மேற்கொண்டார்.

தொடர்ந்து தனது ‘அன்பில்’ எனும் பெயரை உருது மொழியில் எழுதி உருது பயிலும் மாணவர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்து, அதை வாசித்துக் காண்பிக்கச் சொன்னார். உருது கற்பிக்கும் ஆசிரியர் அமைச்சரின் முழுப்பெயரை உருது மொழியில் எழுதி அமைச்சருக்கு வாழ்த்துகளையும் நன்றிகளையும் தெரிவித்தார்.

இந்நிலையில், தமிழ்நாட்டில் இருமொழிக் கொள்கையா மும்மொழிக் கொள்கையா? இது கழகத்தின் பொய்மொழி கொள்கையா என்பதை பொய்யாமொழி அவர்கள்தான் விளக்க வேண்டும் என தமிழிசை சௌந்தரராஜன் தெரிவித்திருந்தார்.

உருது மொழியை யாரும் திணிக்கவில்லை - உங்களின் கனவுகள் தமிழ்நாட்டில் எடுபடாது: தமிழிசைக்கு அமைச்சர் பதிலடி!

இதனையடுத்து உருது மொழியை யாரும் திணிக்கவில்லை! நீங்கள் எங்கெல்லாம் வாய்ப்பு கிடைக்கிறதோ அங்கெல்லாம் இந்தி மொழியை திணிக்கிறீர்கள் என தமிழிசை சௌந்தர்ராஜனுக்கு அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி காட்டமான பதில் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அமைச்சர் அன்பில் மகேஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில், “தமிழ்நாட்டில் இருமொழிக் கொள்கையா மும்மொழிக் கொள்கையா என தமிழிசை சௌந்தரராஜன் என்னை பார்த்து கேள்வி கேட்கின்றார். இது கழகத்தின் பொய்மொழி கொள்கையா என்பதை பொய்யாமொழி அவர்கள்தான் விளக்க வேண்டும் என்கிறார் தமிழிசை சௌந்தரராஜன்.

சிறுபான்மையினரை மட்டுமல்ல, சிறுபான்மையினர் பேசும் மொழிகளையும் காப்பாற்ற வேண்டிய கடமை எங்களுக்கு உள்ளது. அதை உணர்ந்துதான் உருது மொழி எங்கே கற்றுக் கொடுக்கப்படுகின்றதோ அந்த அரசு பள்ளிக்கு சென்று அன்பில்' என்னும் எனது பெயரை உருது மொழியில் எழுதினேன். சிறுபான்மையினருக்கு கழக அரசு அரணாக உள்ளது என்பதை நீங்கள் ஒத்துக் கொள்ள முடியுமா?

உருது மொழியை யாரும் திணிக்கவில்லை - உங்களின் கனவுகள் தமிழ்நாட்டில் எடுபடாது: தமிழிசைக்கு அமைச்சர் பதிலடி!

சிறுபான்மையினரின் உடமைகளை மட்டுமல்ல அவர்கள் உயிராக கருதக்கூடிய அவர்களின் உருது மொழியையும் காக்க வேண்டிய கடமை எங்களுக்கு உள்ளது என்பதை நாங்கள் நன்கு அறிந்து உள்ளோம். உருது மொழி கற்கும் அனைத்து மாணவர்களும் உருது மொழியில் கல்வி கற்க்கிறார்கள் என்பது எங்களுக்கு பெருமையாக உள்ளது.

மொழியை ஒரு காரணமாக வைத்து உருது மொழி கல்வி கிடைக்கவில்லை எனும் காரணத்தினால் அவர்கள் கல்வி அமைப்பிலிருந்து வெளியே போய் விடக்கூடாது என்பதற்காக உருது மொழி கல்வி நடைபெறுகிறது. உருது மொழியில் படிக்க "மாணவர்கள் விரும்பினால் அவர்கள் உருது மொழியில் எல்லா பாடங்களையும் படிக்கட்டும். அதற்கு நாங்கள் துணை நிற்கின்றோம்" என சொல்கின்றோம்.

உருது மொழியை யாரும் திணிக்கவில்லை! நீங்கள் எங்கெல்லாம் வாய்ப்பு கிடைக்கிறதோ அங்கெல்லாம் இந்தி மொழியை திணிக்கிறீர்கள். ஆனால் உருது மொழியை யாரும் திணிக்கவில்லை. சிறுபான்மையினர் பேசும் மொழியை நாங்கள் பாதுகாப்போம்.

சிறுபான்மையினர் என்றாலே உங்களின் கண்ணை உறுத்தும். ஏதாவது சீண்டிக்கொண்டே இருப்பீர்கள். அந்த சீண்டல் எல்லாம் தமிழ்நாட்டில் எடுபடாது. இதை 2019 தேர்தலிலும் நிரூபித்து விட்டோம். 2024 தேர்தலிலும் நிரூபித்து விட்டோம். உங்களின் கனவுகள் எல்லாம் எடுபடாத இந்தியாவின் ஒரே மாநிலம் திராவிட மாடல் அரசை நடத்திக் கொண்டிருக்கும் தமிழ்நாடுதான்!” எனத் தெரிவித்துள்ளார்.

banner

Related Stories

Related Stories