தமிழ்நாடு

"மகளிர் மேம்பாட்டுக்கான பொற்காலமாக திகழும் திராவிட மாடல் ஆட்சி" - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பெருமிதம் !

"மகளிர் மேம்பாட்டுக்கான பொற்காலமாக திகழும் திராவிட மாடல் ஆட்சி" - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பெருமிதம் !
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Praveen
Updated on

‘தி இந்து' குழுமம் பெண்கள் மாநாடு ஒன்றினை ஏற்பாடு செய்துள்ளது. இதில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் காணொலி காட்சி வாயிலான உரையாற்றினார். அதில் பேசிய முதலமைச்சர், " 'தி இந்து' நடத்தும், தமிழ்நாட்டுப் பெண்கள் மாநாட்டுக்கு முதலில் என்னுடைய வாழ்த்துகளையும் பாராட்டுகளையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

பெண்கள் முன்னேற்றத்துக்கு இந்தியாவிலேயே முன்னோடியான மாநிலம் என்றால் அது, நமது தமிழ்நாடுதான்! சாதி - மத சடங்குகள் பெயரால் அடக்கப்பட்ட பெண்கள், தங்களுடைய உரிமைகளுக்காகக் குரல் கொடுத்துப் போராடி முன்னேறிய வரலாறு, தமிழ்நாட்டுக்கும் திராவிட இயக்கத்துக்குமே உரியது! இந்தியாவிலேயே முதன்முறையாகப் பெண்களுக்குச் சொத்தில் சம உரிமை வழங்கியது 1989-இல் இருந்த தலைவர் கலைஞர் தலைமையிலான தி.மு.க. அரசுதான். அதுமட்டுமல்ல, உள்ளாட்சித் துறையை என்னிடம் ஒப்படைத்தபோதுதான் மகளிர் சுய உதவிக் குழுக்கள் மூலமாக இலட்சக்கணக்கான பெண்களுக்குச் சுழல்நிதி வழங்கி மகளிர் தொழில் செய்வதில் தமிழ்நாடுதான் முதன்மை மாநிலம் என்ற நிலையை ஏற்படுத்தினேன்! இப்போது நான் முதலமைச்சராகப் பொறுப்பேற்ற பிறகு, பெண்களுக்குத்தான், எல்லாத் திட்டங்களிலும் முன்னுரிமை கொடுத்துள்ளேன்.

பெண்களைத் தற்சார்புள்ளவர்களாக மாற்றும் இலவச விடியல் பயணம், அவர்களின் குடும்பத் தேவைகளைப் பூர்த்தி செய்யத் தாய்வீட்டுச் சீராகப்பெண்களுக்கு மாதம் 1000 ரூபாய் வழங்கும் கலைஞர் மகளிர் உரிமைத் திட்டம். பெண்கள் உயர்கல்வி பயில எந்தத் தடையும் இருக்கக் கூடாது என மாதம் ஆயிரம் ரூபாய் வழங்கும் 'புதுமைப்பெண்' திட்டத்தைத் தொடங்கியிருக்கிறேன்.

"மகளிர் மேம்பாட்டுக்கான பொற்காலமாக திகழும் திராவிட மாடல் ஆட்சி" - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பெருமிதம் !

'முதலமைச்சரின் காலை உணவுத் திட்டம்' மூலமாக, குழந்தைகளும் பெண்களும் பயனடைகிறார்கள். பணிக்காக நகரங்களுக்குப் போகும் பெண்கள் பாதுகாப்பாகத் தங்கத் 'தோழி' விடுதிகள். இன்னும் நிறைய திட்டங்கள் உள்ளன. நமது திட்டங்களை இந்தியாவில் இருக்கும் எல்லா மாநிலங்களும் பின்பற்றுகிறார்கள். இப்போது போடப்பட்ட ஒன்றிய அரசின் பட்ஜெட்டிலும் நமது திட்டங்கள் நிறைய இடம்பெற்றிருக்கின்றன. இப்படி, இந்தியாவிலேயே பெண்கள் முன்னேற்றத்துக்கான முன்னோடித் திட்டங்களை நாம் செயல்படுத்துவதால்தான், பெண்கள் அதிகம் வேலைக்குப் போகும் மாநிலமாகத் தமிழ்நாடு உயர்ந்திருக்கிறது. பெண்கள் தலைமையேற்று நடத்தும் 4,400 ஸ்டார்ட்அப் நிறுவனங்கள் தமிழ்நாட்டில் பதிவு செய்யப்பட்டிருக்கின்றன.

நாம் ஆட்சிக்கு வந்ததில் இருந்து, 23 ஆயிரத்து 431 பெண்களுக்குப் பயிற்சி கொடுத்து, அவர்களைத் தொழில்முனைவோர்களாக ஆக்கியுள்ளோம். 13 ஆயிரத்து 473 பெண் தொழில் முனைவோர்களுக்கு 1,056 கோடி ரூபாய் கடனுதவி வழங்கப்பட்டிருக்கிறது. 366 கோடி ரூபாய் மானியமாக வழங்கப்பட்டிருக்கிறது. இப்படி, மகளிர் மேம்பாட்டுக்கான பொற்காலமாக நமது திராவிட மாடல் ஆட்சி திகழ்கிறது! இப்படிப்பட்ட சூழலில் இந்த பெண்கள் மாநாட்டைப் பாரம்பரியமிக்க தி இந்து குழுமம் ஏற்பாடு செய்துள்ளது எனக்கு மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது"என்று கூறினார்.

banner

Related Stories

Related Stories