தமிழ்நாடு

"எக்காரணம் கொண்டும் போக்குவரத்துக் கழகம் தனியார் மயமாக்கப்படாது" - போக்குவரத்துத்துறை அமைச்சர் உறுதி !

அரசு போக்குவரத்துக் கழகம் தனியார் மயம் ஆக்கப்பட மாட்டாது என போக்குவரத்துத்துறை அமைச்சர் சிவசங்கர் கூறியுள்ளார்.

"எக்காரணம் கொண்டும் போக்குவரத்துக் கழகம் தனியார் மயமாக்கப்படாது" - போக்குவரத்துத்துறை அமைச்சர் உறுதி !
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Praveen
Updated on

அரசு போக்குவரத்துக் கழகம் தனியார் மயமாக்கப்படும் என எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி முதல் பலரும் அவதூறு பரப்பி வரும் நிலையில், போக்குவரத்துக் கழகம் தனியார் மயம் ஆக்கப்பட மாட்டாது என போக்குவரத்துத்துறை அமைச்சர் சிவசங்கர் தெளிவுபடுத்தியுள்ளார்.

கடலூரில் போக்குவரத்து துறை அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், "போக்குவரத்து துறை எக்காரணத்தைக் கொண்டும் தனியார்மயமாக்க படாது. ஏனென்றால் தமிழ்நாடு முதலமைச்சர் உத்தரவின் பேரில் தற்போது 7200 புதிய அரசு பேருந்துகள் வாங்குவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு உள்ளது. இதில் முதற்கட்டமாக ஆயிரம் புதிய பேருந்துகள் வாங்கப்பட்டு, ஒவ்வொரு மாவட்டங்களாக பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றது.

கடந்த சில மாதங்களுக்கு முன்பு ஓட்டுநர், நடத்துனர் பணிக்கு 685 பேர் பணிக்கு எடுத்து அவர்கள் பணியில் சேர்ந்து பணியாற்றி வருகின்றனர். மேலும் மற்ற போக்குவரத்து பணிமனைக்கும் பணியாளர்கள் தேர்வு செய்யும் பணி தொடங்கப்பட்டு உள்ளது. முதலமைச்சர் தலைமையில் சிறப்பான ஆட்சி நடைபெற்று வருவதால் அரசியல் காரணங்களுக்காக ஏதேனும் ஒரு புகார் தெரிவிக்க வேண்டும் என்பதால் அரசியல் கட்சியினர் புகார் தெரிவித்து வருகின்றனர்.

"எக்காரணம் கொண்டும் போக்குவரத்துக் கழகம் தனியார் மயமாக்கப்படாது" - போக்குவரத்துத்துறை அமைச்சர் உறுதி !

கடந்த அதிமுக ஆட்சி காலத்தில் அரசு ஊழியர்களின் ஓய்வு பெறும் காலம் 58 வயதில் இருந்து 60 வயதாக உயர்த்தி விட்டனர். ஏனென்றால் ஓய்வு காலத்தில் சரியான முறையில் அவர்களுக்கு சேர வேண்டிய பண பலன்கள் உள்ளிட்ட எந்த ஒரு பலன்களும் அவர்களுக்கு வழங்க முடியாத நிலையில் அதிமுக அரசு செயல்பட்டு இருந்தது. தற்போது மே மாதம் அதிகளவில் போக்குவரத்து துறையில் ஊழியர்கள் ஓய்வு பெற்று உள்ளனர். இதனை சமாளிக்கும் விதமாக இடைக்கால நிவாரணமாக ஒப்பந்த அடிப்படையில் ஓட்டுனர் மற்றும் நடத்துனர் நியமிக்கப்பட்டனர்.

இதன் காரணமாக கடந்த கோடைகாலத்தில் வழக்கத்தை விட அதிக அளவில் பேருந்துகள் இயக்கப்பட்டு அரசுக்கு கூடுதல் வருவாய் கிடைத்துள்ளது. இதனை தொடர்ந்து கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்திற்கு அதிக அளவில் மக்கள் சென்று வருவதால், தற்போது பேருந்துகள் இயக்கம் அதிகரித்து வருகின்றது. சென்னை நகர் பகுதி மற்றும் புறநகர் பகுதி தொடர்ந்து வளர்ச்சி அடைந்து வருவதால் அந்தந்த பகுதிகளுக்கு தேவையான பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றது. இது மட்டுமின்றி தற்போது மின்சார ரயில் சேவை நிறுத்தப்பட்டுள்ளதால் சிறப்பு பேருந்துகள் கூடுதலாக இயக்கப்பட்டு வருகின்றது.

"எக்காரணம் கொண்டும் போக்குவரத்துக் கழகம் தனியார் மயமாக்கப்படாது" - போக்குவரத்துத்துறை அமைச்சர் உறுதி !

போக்குவரத்து துறை பல்வேறு நடவடிக்கைகள் எடுத்து வரும் நிலையில் , கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு டிடிவி தினகரன் போக்குவரத்து துறை தனியார்மயமாக்கப்படுகின்றது என தெரிவித்து இருந்தார். அதனை பார்த்த எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிச்சாமி தானும் சொல்லாமல் இருக்க கூடாது என்ற நோக்கில் போக்குவரத்து துறை தனியார் மயமாக்க பட முயற்சி செய்கின்றனர் என தெரிவித்து உள்ளார். ஆனால் டிடிவி தினகரன் அரசு தொடர்பாக என்ன நடைபெறும் என தெரியாமல் பேசி உள்ளார். ஆனால் எடப்பாடி பழனிச்சாமி முதலமைச்சராக இருந்து உள்ள நிலையில் கடந்த ஆட்சி காலத்தில் ஒரு ஓட்டுனர், நடத்துனர் புதிதாக பணிக்கு எடுக்கவில்லை. ஆனால் தற்போதைய திமுக ஆட்சிக்காலத்தில் 685 அரசு விரைவு போக்குவரத்து கழகத்தில் பணியாளர்கள் எடுக்கப்பட்டு உள்ளோம். ஆகையால் எடப்பாடி பழனிச்சாமி அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாக இது போன்று பேசி வருகின்றார்.

இந்த அறிக்கைகள் வந்து ஒரு மாதம் கழித்து தூங்கி எழுந்து பேசுவது போல் சீமான் போக்குவரத்து துறை தனியார் மயமாக்கப்படுகின்றது என தெரிவித்துள்ளார். ஆனால் அவருக்கு தெரிந்தது இலங்கை மற்றும் ஈழத்தில் நடக்கும் பிரச்சனை மட்டுமே. ஆனால் தமிழகத்தில் நடக்கும் பிரச்சனைகள் குறித்து பேச வேண்டுமானால் அதற்கு முன்பாக ஆட்சியில் என்னென்ன நடக்கின்றது என்பதனை தெரிந்து கொண்டு பேச வேண்டும். தற்போது ஒரு சில தொழிற்சங்கங்கள் தங்களை அடையாளப்படுத்திக் கொள்ள வேண்டும் என்பதால் தனியார் மயமாக்கப்படுகின்றது என தொடர்ந்து குற்றம் சாட்டை வைத்து வருகின்றனர். அதன் அடிப்படையில் சீமான் உள்ளிட்ட அரசியல் கட்சியினர் தொடர்ந்து பேசி வருகின்றனர்"என்று தெரிவித்தார்.

banner

Related Stories

Related Stories