தமிழ்நாடு

மோசடி செய்த நிறுவனங்கள் மீது எடுத்த நடவடிக்கை என்ன ? - பொருளாதார குற்றப்பிரிவு போலீஸ் விளக்கம் !

மோசடி செய்த நிறுவனங்கள் மீது எடுத்த நடவடிக்கை என்ன ? - பொருளாதார குற்றப்பிரிவு போலீஸ் விளக்கம் !
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Praveen
Updated on

திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசியை சேர்ந்த ரமேஷ் லட்சுமிபதி என்பவர் தமிழ்நாட்டில் நடைப்பெற்ற நிதி நிறுவன மோசடி வழக்குகளின் விசாரணையில் முன்னேற்றம் இல்லை என சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.இது தொடர்பாக அவர் தொடர்ந்த மனுவில், அதிக வட்டி தருவதாக கூறி ஹிஜாவு நிதி நிறுவனம், ஆருத்ரா கோல்டு, எல்என்எஸ் நிதி நிறுவனம், சாய் எண்டர்பிரைஸ், ஆம்ரோ அசோஷியேஷன், உள்ளிட்ட 7 நிதி நிறுவனங்கள் பொதுமக்களின் பணத்தை மோசடி செய்து, அதன் உரிமையாளர்கள் பலர் வெளிநாடுகளுக்கு தப்பி சென்றுள்ளதாக தெரிவித்துள்ளார்.

மேலும் மக்களை ஏமாற்றி ஹிஜாவு நிறுவனம் 1500 கோடி ரூபாய் மோசடியும், எல் என் எஸ் நிறுவனம் 6000 கோடியும், ஆரூத்ரா கோல்டு நிறுவனம் 8000 கோடியும், சாய் எண்டர்பிரைசஸ் 350 கோடி ரூபாயை வெளிநாடுகளுக்கு சட்டவிரோதமாக கொண்டு சென்றுள்ளதாகவும் மனுவில் தெரிவித்துள்ளார்.

மோசடி செய்த பணம் வெளிநாடுகளுக்கு கடத்தப்படுவதால் இதில் ஹவாலா, கருப்பு பணம் விவகாரமும் உள்ளதால் நிதி நிறுவன மோசடி வழக்குகளை சிபிஐ விசாரணைக்கு மாற்ற உத்தரவிடக் கோரியிருந்தார். இந்த வழக்கு பொறுப்பு தலைமை நீதிபதி டி.கிருஷ்ணகுமார் அமர்வில் விசாரணைக்கு வந்தது.

மோசடி செய்த நிறுவனங்கள் மீது எடுத்த நடவடிக்கை என்ன ? - பொருளாதார குற்றப்பிரிவு போலீஸ் விளக்கம் !

அப்போது இந்த வழக்குகளை விசாரித்துவரும் மாநில பொருளாதார குற்றப்பிரிவு காவல்துறை சார்பில் இன்று நீதிமன்றத்தில் பதில் மனு தாக்கல் செய்யப்பட்டது. அதில், நிதி நிறுவன மோசடி தொடர்பாக கடந்த 2021 ஆண்டு முதல் 2024 ம் வரை மொத்தமாக 216 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு 141.29 கோடி ரூபாய் மீட்டிருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மோசடி தொடர்பாக 90 பேர் கைது செய்யப்பட்டிருப்பதாகவும், 59 பேர் தலைமறைவாகி இருப்பதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளதுமேலும் மோசடியில் ஈடுப்பட்ட 1524 வங்கி கணக்கில் இருந்த 180.70 கோடி ரூபாய் முடக்கப்பட்டுள்ளதாகவும், மோசடி செய்த நிதி நிறுவனங்களுக்கு சொந்தமான 1118.46 கோடி ரூபாய் மதிப்பிலான3,264 அசையும் அசையா சொத்துகள் கண்டறியப்பட்டு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக பொருளாதார குற்ற வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்தில் 659 வழக்குகளில் 676.6 கோடி ரூபாய் உரியவர்களுக்கு பெற்றுக் கொடுக்கப்பட்டுள்ளதாக பதில் மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது. வெளிநாடுகளுக்கு தப்பி சென்ற நிதி நிறுவன உரிமையாளர்கள், இயக்குனர்களுக்கு லுக் அவுட் நோட்டீஸ் அனுப்பப்பட்டு தேடப்பட்டு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நிதி நிறுவன மோசடி தொடர்பாக பொருளாதார குற்றப்பிரிவு காவல்துறை எடுக்கும் நடவடிக்கைகளை ஒரு குறிப்பிட்ட கால இடைவெளியில் நீதிமன்றத்தில் தெரிவித்து வருவதால், சிபிஐக்கு மாற்றக் கோரிய வழக்கை தள்ளுபடி செய்ய வேண்டும் எனவும் பதில் மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.இந்த வழக்கில் சிபிஐ தரப்பில் யாரும் ஆஜராகவில்லை என்பதால் வழக்கு 2 வாரங்களுக்கு ஒத்தி வைக்கப்பட்டது.

banner

Related Stories

Related Stories