தமிழ்நாடு

சிவகாசி பட்டாசு ஆலை விபத்து : 2 பேர் உயிரிழப்பு - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல் மற்றும் நிதியுதவி !

சிவகாசி பட்டாசு ஆலை விபத்து : 2 பேர் உயிரிழப்பு - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல் மற்றும் நிதியுதவி !
  • Twitter
  • Facebook
  • WhatsApp
KL Reshma
Updated on

விருதுநகர் மாவட்டம், சிவகாசியின் காளையார்குறிச்சி கிராமத்தில் இன்று காலை பட்டாசு ஆலையில் நிகழ்ந்த விபத்தில் 2 பேர் உயிரிழந்தனர். இந்த சூழலில் இந்த நிகழ்வுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்ததோடு, உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு நிதியுதவியும் அறிவித்துள்ளார்.

இதுகுறித்து வெளியான பத்திரிகை செய்தி வருமாறு :

விருதுநகர் மாவட்டம், சிவகாசி வட்டம், காளையார்குறிச்சி கிராமத்தில் இயங்கிவரும் தனியாருக்குச் சொந்தமான பட்டாசு ஆலையில் இன்று (09-07-2024) காலை 09.15 மணியளவில் எதிர்பாராதவிதமாக ஏற்பட்ட வெடிவிபத்தில் விருதுநகர் மாவட்டம், வெள்ளூர், சிதம்பராபுரத்தைச் சேர்ந்த மாரியப்பன் (வயது 45) த/பெ.பெருமாள் மற்றும் முத்துமுருகன்(வயது 45) த/பெ.பரமசிவம் ஆகிய இருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர் என்ற துயரமான செய்தியைக் கேட்டு மிகுந்த வருத்தமும் வேதனையும் அடைந்தேன்.

சிவகாசி பட்டாசு ஆலை விபத்து : 2 பேர் உயிரிழப்பு - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல் மற்றும் நிதியுதவி !

மேலும், இவ்விபத்தில் பலத்த காயமடைந்து விருதுநகர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் எம்.புதுப்பட்டியைச் சேர்ந்த திரு.சங்கரவேல் (வயது 52) த/பெ.கூடலிங்கம் மற்றும் திருமதி.சரோஜா (வயது 50) க/பெ. கொடக்காரசின்னு ஆகிய இருவருக்கும் சிறப்புச் சிகிச்சை அளிக்கவும் உத்தரவிட்டுள்ளேன்.

சிவகாசி பட்டாசு ஆலை விபத்து : 2 பேர் உயிரிழப்பு - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல் மற்றும் நிதியுதவி !

இந்த விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கும் அவர்களது உறவினர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும், ஆறுதலையும் தெரிவித்துக் கொள்வதோடு, அவர்களது குடும்பத்தினருக்கு தலா மூன்று இலட்சம் ரூபாயும், பலத்த காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்களுக்கு தலா ஒரு இலட்சம் ரூபாயும் முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து வழங்கிடவும் உத்தரவிட்டுள்ளேன்.

banner

Related Stories

Related Stories