தமிழ்நாடு

“சிருங்கேரி மடம் குறித்து பேச வேண்டியிருக்கும்” - அண்ணாமலைக்கு செல்வப்பெருந்தகை எச்சரிக்கை!

“சிருங்கேரி மடம் குறித்து பேச வேண்டியிருக்கும்” - அண்ணாமலைக்கு செல்வப்பெருந்தகை எச்சரிக்கை!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
KL Reshma
Updated on

சென்னை இராயப்பேட்டையில் உள்ள சத்தியமூர்த்தி பவனில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை செய்தியாளர்களை சந்தித்தார்.

அப்போது அவர் பேசியதாவது, "ஆந்திரா முன்னாள் முதலமைச்சர் ஒய்.எஸ் ராஜசேகர் ரெட்டி சிலை எரிப்புக்கு தமிழக காங்கிரஸ் கட்சி எதிர்ப்பை பதிவு செய்கிறது. தமிழ்நாட்டு மக்களால் புறக்கணிக்கப்பட்ட பின், வெறுப்பு அரசியலை துப்பி வருகிறது ஒரு தேசிய கட்சி. முதலமைச்சரை அவதூறாக பேசுவதும் அரசியல் கட்சியை பழிவாங்கும் எண்ணத்தோடும் அவர் செயல்படுகிறார்.

தமிழ்நாட்டில் எத்தனையோ அரசியல் கட்சிகள் உள்ளது. யாராவது வெறுப்பு அரசியல் செய்கிறார்களா? அவதூறுகள் பேசுகிறார்களா? ஆரோக்கியமான விவாதங்கள் செய்கிறார்கள். ஆனால் ஒரு கட்சி மட்டும் வெறுப்பு அரசியலையும் விவாதங்களையும் சகதி போல் இறைத்து வருகிறார்கள். திமிருக்கும் ஆணவத்திற்கும் இறுமாப்பிற்கும் மிகப்பெரிய கடிவாளத்தை போட்டு வைத்திருக்கிறார்கள்.

“சிருங்கேரி மடம் குறித்து பேச வேண்டியிருக்கும்” - அண்ணாமலைக்கு செல்வப்பெருந்தகை எச்சரிக்கை!

தமிழ்நாட்டிற்குள் நுழைய வாய்ப்பு இல்லை என்று தெரிவிக்கப்பட்ட போதும், அநாகரிக அரசியல் செய்வதை அவர்கள் நிறுத்திக் கொள்ளவில்லை. இதனை உடனடியாக நிறுத்த வேண்டும். இந்திரா காந்தி பற்றியும் தமிழ்நாட்டு காங்கிரஸ் பற்றியும் தமிழக காங்கிரஸ் தலைவருக்கு தெரியாது என்று சொல்கிறார். அனைத்து அரசியலையும் படித்துவிட்டு தான் வந்துள்ளோம்.

நான் வாதம் செய்ய தயாராக உள்ளேன். உண்மையில் அண்ணாமலைக்கு தைரியம் இருந்தால் நான் காங்கிரஸ் பற்றி பேசுகிறேன். அவர் இந்து மகாசபை தெரிந்து, பாஜக பற்றி பேச தயாராக உள்ளாரா?. ஆருத்ரா கோல்ட் முறைகேடு பற்றி நாங்கள் பேசமாட்டோம். பெண்களுக்கு பாதுகாப்பு இல்லாமல் கட்சி நடத்துகிறார்கள்.

முதலில் அண்ணாமலை தமிழ்நாட்டிற்கும் தமிழக மக்களுக்கும் துரோகம் செய்வதை நிறுத்த வேண்டும். அவர் இன்னும் கன்னடிகா மனநிலையில் உள்ளார். தமிழ் விரோத போக்குடன் உள்ளார். நான் ஒரு தமிழனாக இருந்தாலும் காவிரி பிரச்சினையில் கன்னட மக்களுக்கு தான் உதவி செய்வேன். நான் ஆதாரத்தை வெளியிட்டால் அரசியல் பொதுவாழ்வில் இருந்து வெளியேறிக்கொள்வாரா?

சிருங்கேரி மடத்தில் யார் தவம் இருந்தார்? யார் உங்களை உருவாக்கினார்? என்றெல்லாம் பேச வேண்டியிருக்கும். அண்ணாமலை மகாத்மா காந்தி, அம்பேத்கர் யாரை பற்றியும் படிக்கவில்லை. அடிமை என்ற வார்த்தை எஜமான் இடம் தான் வரும். எந்த அடிப்படையில் அவரை மாநில தலைவராக்கினார்கள்? ஒரு வட்ட செயலாளராக கூட அவருக்கு தகுதி இல்லை.

“சிருங்கேரி மடம் குறித்து பேச வேண்டியிருக்கும்” - அண்ணாமலைக்கு செல்வப்பெருந்தகை எச்சரிக்கை!

நான் திமுகவில் இருந்து வந்தேனா அதிமுகவிலிருந்து வந்தேனா ஆண்டாண்டு காலமாக விடுதலைக்கு போராடிவரும் விளிம்பு நிலைக்கு உழைத்து வரும் தலித் இயக்கத்தில் பணியாற்றிய உண்மை கூட தெரியவில்லை. கஷ்டப்பட்டு அரசியல் அங்கீகாரம் பெற்றுள்ளது ஒரு தலித் அரசியல். அவர்கள் கட்சி சார்ந்த கல்யாணராமன், தமிழிசைக்கு பதில் சொல்ல சொல்லுங்கள்.

அருவருப்பான அகங்கார ஆணவ அரசியல் பேசினால் அண்ணாமலைக்கு தினமும் பதிலடி கொடுப்போம். முதலமைச்சர் வெளிநாடு போவதற்கு வெள்ளை அறிக்கை கேட்கிறார். அதற்கு நான் சாட்சி எவ்வளவு முதலீடுகளை தமிழ்நாட்டுக்கு கொண்டு வந்துள்ளார், எவ்வளவு பேருக்கு வேலை வாய்ப்பு கிடைத்துள்ளது என்று சொல்லுவோம்.

இருந்த வேலைவாய்ப்பை ஒழித்தவர்கள் பாஜக, தமிழக மக்கள் எவ்வளவு காலம் உங்களை நம்புவார்கள். பாஜக மாநில தலைவர் அண்ணாமலை படிப்புக்கு லண்டன் செல்வதாக கேள்விப்பட்டேன். அமெரிக்க அதிபராக முயற்சிக்கும் அண்ணாமலைக்கு வாழ்த்துகள். தமிழக மக்களுக்கு விசுவாசமாக இருக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறோம், அறிவுரை வழங்குகிறோம்.

விவாதிக்க தயாராக இருக்கும் நாங்கள் அரசியல் என்றால் என்ன?, பண்பு, இனிமை என்றால் என்ன என்று அண்ணாமலைக்கு சொல்லித் தருகிறோம். வெறுப்பு அரசியல் கான நடைபயணம் அல்ல தமிழ்நாட்டு கட்டமைப்பை அதிகப்படுத்த, வெறுப்பு அரசியலை அகற்ற, தமிழக மக்களுடன் கலந்துரையாட நடைபயணம் மேற்கொள்ள உள்ளோம்.

“சிருங்கேரி மடம் குறித்து பேச வேண்டியிருக்கும்” - அண்ணாமலைக்கு செல்வப்பெருந்தகை எச்சரிக்கை!

நீங்கள் என்ன செய்தாலும் நாங்கள் அதற்கு தயாராக உள்ளோம். வீட்டிற்கு போகவும் சரி சிறைக்குப் போகவும் சரி எல்லாவற்றிற்கும் தயாரக உள்ளோம். எங்கள் தலைவர்கள் யாரும் மன்னிப்பு கடிதம் எழுதிக் கொடுத்தவர்கள் இல்லை பிரிட்டிஷ்காரன் காலில் விழுந்தவர்கள் இல்லை. நேற்று முளைத்த காளான் இல்லை.

அக்டோபர் 2ஆம் தேதி மகாத்மா காந்தி பிறந்த நாளன்று அந்தந்த தொகுதி சட்டமன்ற உறுப்பினர்கள் நடைபயணம் செய்ய திட்டமிடப்பட்டுள்ளது.

நாடாளுமன்ற உறுப்பினர்கள் புது டெல்லியில் இருந்து தலைவர்கள் வந்து நடைப்பயணம் தொடர்ந்து நடக்கும். ராஜீவ் காந்தி நினைவிடத்தில் இருந்து தொடங்க வாய்ப்பு உள்ளது விரைவில் முழு தகவலை தெரிவிப்போம் என கூறினார். அடிமை வம்சத்திலிருந்து வந்தவர்களுக்கு தெரிய வாய்ப்பில்லை. அண்ணாமலை, ஆளுநர் தமிழகத்தில் இருந்தால்தான் இந்தியா கூட்டணிக்கு நல்லது. சாதி மோதல்களை தவிர்க்கவும் இன மோதல்களை தவிர்க்கவும் மதவாத சக்திகளை அகற்றவும் பிரச்சாரமாக இந்த நடை பயணம் அமையும்.

நல்ல தலைவர்கள் இல்லாமலா நல்லாட்சி நடக்கிறது? எல்லோரும் நல்ல தலைவர்கள் தான், விஜய் சொல்வது அவர் கருத்து. ஆப்கானிஸ்தான் தான் போதை பொருட்கள் பிறப்பிடம், குஜராத் வழியாக தான் போதை பொருட்கள் உள்ளே வருகிறது. அங்கு உள்ள இரண்டு துறைமுகங்கள் வாயிலாக தான் போதை பொருட்கள் உள்ளே வர வேண்டும். அது அதானி குழுமத்திற்கு சொந்தமானது.

இந்திய ராணுவம், இந்தோ திபெத் ராணுவத்திற்கு யாருக்கும் தெரியாமல் போதை பொருட்கள் எப்படி உள்ளே வரும். சிபிஐக்கு மாற்ற வேண்டும் என்று அண்ணாமலை அமித்ஷாவுக்கு கடிதம் எழுதுகிறார், எவ்வளவு பெரிய அதிகார துஷ்பிரயோகம் அவர் என்ன தமிழக முதலமைச்சரா? புதிய சட்டங்கள் கொண்டு வந்திருப்பதை காங்கிரஸ் கண்டிக்கிறது. புதிய விவசாய சட்டங்களை கொண்டு வந்து அவசரகதியில் நிறைவேற்றி திரும்ப பெற்றார்களே, அதை போல் இதையும், யாரிடமும் கலந்துரையாடாமல் கொண்டு வந்துள்ளார்கள்." என்றார்.

banner

Related Stories

Related Stories