தமிழ்நாடு

ரூ.37 கோடியில் படகு அணையும் தளம் : 20 முக்கிய அறிவிப்புகளை வெளியிட்ட அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன்!

இன்றைய சட்டப்பேரவையில் அமைச்சர் அனிதா ஆர்.ராதாகிருஷ்ணன் 20 அறிவிப்புகளை வெளியிட்டுள்ளார்.

ரூ.37 கோடியில் படகு அணையும் தளம் : 20 முக்கிய அறிவிப்புகளை வெளியிட்ட அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

தமிழ்நாடு சட்டப்பேரவை கடந்த ஜூன் 20 ஆம் தேதி தொடங்கி மானியக் கோரிக்கைகள் மீதான விவாதங்கள் நடைபெற்று வருகிறது. நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை மானியக் கோரிக்கை மீதான விவாதம் நடைபெற்றது.

கால்நடை பராமரிப்பு, பால்வளம், மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை மானியக் கோரிக்கை மீதான விவாதத்தில் அமைச்சர் அனிதா ஆர்.ராதாகிருஷ்ணன் வெளியிட்டுள்ள அறிவிப்புகள் வருமாறு:-

1.ரூ.6.45 கோடியில் 50% மானியத்தில் நாட்டின கோழிக்குஞ்சுகள் வழங்கப்படும். கணவனால் கைவிடப்பட்ட மற்றும் ஆதரவற்ற 38,700 பெண் பயனாளிகளுக்கு தலா 40 கோழிக்குஞ்சுகள் வழங்கப்படும்.

2.ரூ.10 கோடியில் நடுவூர் (தஞ்சாவூர்] & புதுக்கோட்டை மாவட்ட கால்நடைப் பண்ணைகள் மேம்படுத்தப்படும்.

3.ரூ.5 கோடியில் பசுந்தீவனப் பயிர்கள் பயிரிடப்பட்டு தீவன உற்பத்தி பெருக்கப்பட்டு விவசாயிகளுக்கு நியாயமான விலையில் கிடைக்க வழிவகை செய்யப்படும்.

4.தீவன விரயத்தைக் குறைப்பதற்காக, மின்சாரம் மூலம் இயங்கும் புல் நறுக்கும் கருவிகள் 3000 பயனாளிகளுக்கு 50 % மானியத்தில் வழங்கப்படும்.

5.தீவன உற்பத்தியை அதிகரிப்பதற்காக ரூ.1.55 கோடியில் தீவன சோளம் மற்றும் தட்டைப்பயறு விதைகள் விவசாயிகளுக்கு வழங்கப்படும்.

6. 5 இலட்சம் செல்லப் பிராணிகளுக்கு 50% மானியத்தில் வெறிநாய்க்கடி நோய் தடுப்பூசி போடப்படும்.

7.ரூ.25 கோடியில் கால்நடை மருத்துவ கல்லூரி விடுதி வளாகத்தில் மாணவியர் விடுதிக் கட்டடம் கட்டப்படும்.

8.ரூ.12 கோடியில், சென்னை மாவட்டம், பாரதியார் நகரில் புதிய மீன் இறங்குதளமும் & திருவள்ளூர் மாவட்டம் பழவேற்காட்டில் மீன் இறங்குதள மேம்பாட்டு பணிகளும் மேற்கொள்ளப்படும்

9.ரூ.25 கோடியில், இராமநாதபுரம் மாவட்டம், சின்ன ஏர்வாடி மீனவ கிராமத்தில் தூண்டில் வளைவு & வலைபின்னும் கூடம் அமைக்கப்படும்.

10.ரூ.30 கோடியில், கடலூர் மாவட்டம், சாமியார் பேட்டை மீன் இறங்குதளத்தில், தூண்டில் வளைவுடன் கூடுதல் வசதிகள் & முதுநகர் மீன்பிடி துறைமுகத்தில் தூர்வாரும் பணிகள் மேற்கொள்ளப்படும்.

11.தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள 11 மீனவ கிராமங்களில் ரூ.8.50 கோடியில் வடிகால் கால்வாய்களில் தூர்வாரும் பணிகள் மேற்கொள்ளப்படும்.

12.ரூ.39.88 இலட்சத்தில் கடலோர கிராமங்களில் வசிக்கும் 222 மீனவ மகளிர் மாற்று வாழ்வாதார தொழிலாக கடற்பாசி வளர்ப்பினை மேற்கொள்ள திட்டம்.

13.ரூ.38 கோடியில் தூத்துக்குடி மாவட்டம் விவேகானந்தர் நகரில் மீன் இறங்குதளம் அமைத்தல் & பெரியதாழை மீன் இறங்குதளத்தில் தூண்டில் வளைவு நீட்டிக்கும் பணிகள் மேற்கொள்ளப்படும்.

14.தஞ்சாவூர் மாவட்டம், ஏரிப்புறக்கரை கிராமத்தில் மீன் இறங்கு தளம் அமைத்தும் & கீழத்தோட்டம் மீனவ கிராமத்தில் தடுப்பு சுவர் அமைத்து மீன் இறங்கு தளத்தில் கூடுதல் வசதிகளும் ஏற்படுத்தப்படும்.

15.ரூ.15 கோடியில் மயிலாடுதுறை மாவட்டம், கீழமூவர்கரை மீனவ கிராமம் மற்றும் தரங்கம்பாடி மீன்பிடி துறைமுகத்தில் கரையோர உட்கட்டமைப்பு வசதிகள் ஏற்படுத்தப்படும்.

16.ரூ.37 கோடியில் தூத்துக்குடி மாவட்டம் பழையகாயல் மீனவ கிராமத்தில் படகு அணையும் தளம் அமைக்கப்படும்.

17.ரூ.14.20 கோடியில் மீன்களைத் தரமாகவும், சுகாதாரமாகவும் வேறு இடங்களுக்கு எடுத்துச்செல்ல ஏதுவாக குளிர்காப்பிடப்பட்ட வாகனங்கள் வாங்கப்படும்.

18.ரூ.5 கோடியில் ஆழ்கடல் மீன்பிடி படகுகளுக்கு 200 செயற்கைகோள் தொலைபேசிகள் வாங்கிட 40% மானியம் வழங்கப்படும்.

19.ரூ.52 கோடியில், கன்னியாகுமரி மாவட்டம், பெரியநாயகி தெரு & பள்ளம்துறை மீன் இறங்குதளங்களில் தூண்டில் வளைவு நீட்டிப்பு பணிகள் மேற்கொள்ளப்படும்.

20.ரூ.32 கோடியில் மயிலாடுதுறை மாவட்டம், சந்திரபாடி மீன் இறங்குதளத்தில் படகுகளை பாதுகாப்பாக நிறுத்துவதற்கு நண்டலார் ஆற்றின் முக துவாரத்தினை தூர்வாரி தடுப்பு சுவர் அமைக்கப்படும்.

banner

Related Stories

Related Stories