தமிழ்நாடு

விலங்கு பட பாணியில் தொடர் கொலை.. தனியாக இருக்கும் மூதாட்டிகளை கொலை செய்யும் கொள்ளையன் : சிக்கியது எப்படி?

எளிதாக பணம் கிடைக்க தொடர்ச்சியாக மூதாட்டியை கொலை செய்து லட்சக்கணக்கில் நகை மற்றும் பணத்தை கொள்ளையடித்த கொள்ளையனை போலிஸார் கைது செய்துள்ளனர்.

விலங்கு பட பாணியில் தொடர் கொலை.. தனியாக இருக்கும் மூதாட்டிகளை கொலை செய்யும் கொள்ளையன் : சிக்கியது எப்படி?
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Prem Kumar
Updated on

சென்னை ஆதம்பாக்கம் தில்லை கங்கா நகர் 12வது தெருவை சேர்ந்தவர் சிவகாமி சுந்தரி (81). இவர் தனது மகன் ஸ்ரீராம் வீட்டில் வசித்து வந்தார். இந்த நிலையில் கடந்த 22ஆம் தேதி அனைவரும் வேலைக்கு சென்ற நிலையில், மூதாட்டி சிவகாமி சுந்தரி மட்டும் வீட்டில் தனியாக இருந்துள்ளார். பின்னர் அன்றிரவு வேலை முடித்து வீட்டிற்கு வந்த அவரது மகன் பார்த்த போது, வீட்டிலிருந்த பீரோ உடைக்கப்பட்டு 2.5லட்சம் பணம் திருடப்பட்டிருந்தது.

அதிர்ச்சியடைந்த அவரது மகன், தாய் சிவகாமி சுந்தரியை எழுப்ப சென்ற போது அவரது அணிந்திருந்த 15 சவரன் நகைகள் பறிக்கப்பட்டு இறந்த நிலையில் கிடந்தார். இந்த கொலை சம்பவம் தொடர்பாக ஆதம்பாக்கம் காவல் நிலையத்திற்கு அளித்த தகவலின் பேரில், போலிஸார் சம்பவ இடத்திலிருந்த சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்தனர்.

விலங்கு பட பாணியில் தொடர் கொலை.. தனியாக இருக்கும் மூதாட்டிகளை கொலை செய்யும் கொள்ளையன் : சிக்கியது எப்படி?

அதில் சிசிடியில் முகம் பதியாதபடி மழை குடையுடன் வந்த நபர் ஒருவர் மூதாட்டியை கொலை செய்துவிட்டு பணம் மற்றும் நகைகள் கொள்ளையடித்து சென்றதை போலிஸார் கண்டுபிடித்தனர். சிசிடிவி எங்கே உள்ளது என சரியாக கணித்து குடையை வைத்து கொள்ளையன் மறைத்து வந்ததால் ஏற்கனவே வீட்டை நோட்டமிட்டு பின்னர் கொள்ளையடித்திருப்பதை போலிஸார் கண்டுபிடித்து, அதே தெருக்களில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி காட்சிகளை போலிஸார் ஆய்வு செய்துள்ளனர்.

குறிப்பாக குடையுடன் அந்த நபர் சென்ற வழித்தடங்களில் இருந்த சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்த போது, திருவல்லிக்கேணி பகுதிக்கு ஆட்டோவில் சென்றது தெரியவந்தது. பின்னர் அந்த ஆட்டோவில் பதிவான எண்ணை வைத்து ஆட்டோ ஓட்டுனரை பிடித்து விசாரணை செய்து, அவர் இறக்கி விட்ட இடத்தை கண்டுபிடித்து ஒரு கட்டத்தில் அந்த நபரின் வீட்டை கண்டறிந்து அவரை போலிஸார் கைது செய்தனர்.

விலங்கு பட பாணியில் தொடர் கொலை.. தனியாக இருக்கும் மூதாட்டிகளை கொலை செய்யும் கொள்ளையன் : சிக்கியது எப்படி?

பின்னர் கைது செய்யப்பட்ட அந்த நபரிடம் நடத்திய விசாரணையில், மூதாட்டியை கொலை செய்த நபர் கே.கே நகரை சேர்ந்த சக்திவேல் என்பதும் திருமணமாகி 2 பிள்ளைகளுடன் வாடகை வீட்டில் வசித்து கொண்டு கட்டிட உள்கட்டமைப்பு பணிபுரிந்து வருவதும் விசாரணையில் தெரியவந்தது. மேலும் சக்திவேலிடம் போலிஸார் விசாரணை நடத்திய போது, விலங்கு பட பாணியில் ஒரு கொலை செய்யவில்லை இரண்டு கொலை செய்துள்ளேன் என அடுக்கடுக்காக சக்திவேல் கொலை பட்டியலிட்டதால் போலிஸார் அதிர்ச்சியடைந்தனர்.

குறிப்பாக மூதாட்டியை மட்டுமே குறிவைத்து கடந்த இரண்டு வருடங்களில் 2 கொலை செய்திருப்பதாக விசாரணையில் திடுக்கிடும் தகவல்களை சக்திவேல் தெரிவித்துள்ளார். கடந்த 2021ஆம் ஆண்டு கொரோனா காலக்கட்டத்தின் போது வேலை இல்லாததால் பணம் தட்டுப்பாடு ஏற்பட்டு குடும்பத்தை கவனிக்க முடியாத நிலை ஏற்பட்டதால், பணத்திற்காக கே.கே நகரை சேர்ந்த மூதாட்டி சீதாலட்சுமியை வீட்டில் யாருமில்லாத போது சக்திவேல் கொலை செய்து 16 சவரன் தங்க நகைகளை பறித்து சென்றதாக விசாரணையில் தெரிவித்துள்ளார்.

விலங்கு பட பாணியில் தொடர் கொலை.. தனியாக இருக்கும் மூதாட்டிகளை கொலை செய்யும் கொள்ளையன் : சிக்கியது எப்படி?

குறிப்பாக, கொலை செய்வதற்கு முன்னதாகவே சக்திவேல் மூதாட்டிகளின் வீட்டிற்கு சென்று தண்ணீர் குடிப்பது போல நோட்டமிட்டு, பின்னர் மூன்று நாட்கள் கழித்து வீடு புகுந்து தலையணை வைத்து அமுக்கி மூதாட்டியை கொலை செய்து நகை மற்றும் பணத்தை பறிப்பதையே வாடிக்கையாக வைத்துள்ளதும் விசாரணையில் தெரியவந்துள்ளது. இதனால் கட்டிட வேலையில் பணம் கிடைப்பதை விட கொள்ளையில் ஈடுபட்டால் போலிஸாரிடம் சிக்காமல் எளிதாக பணம் கிடைப்பதாக சக்திவேல் வாக்குமூலம் அளித்துள்ளார்.

சமீபத்தில் மீண்டும் சக்திவேலுக்கு பணம் தட்டுப்பாடு ஏற்பட்டு கடந்த மூன்று மாதங்களாக வீட்டு வாடகை கொடுக்க முடியாமல் திணறியதால், மீண்டும் தனது பாணியில் மூதாட்டியை கொலை செய்து கொள்ளையில் ஈடுபட திட்டமிட்டு, ஆதம்பாக்கத்தில் உள்ள சிவகாமி சுந்தரி வீட்டில் புகுந்து மூதாட்டியின் முகத்தில் தலையணை வைத்து அமுக்கி கொலை செய்துவிட்டு 2.5 லட்சம் பணம் மற்றும் 46 சவரன் நகைகளை கொள்ளையடித்ததாக சக்திவேல் வாக்குமூலம் அளித்துள்ளார்.

விலங்கு பட பாணியில் தொடர் கொலை.. தனியாக இருக்கும் மூதாட்டிகளை கொலை செய்யும் கொள்ளையன் : சிக்கியது எப்படி?

கொள்ளையடித்த பணத்தை எடுத்து சென்று திருவல்லிக்கேணியில் உள்ள உரிமையாளரிடம் வீடு வாடகை கொடுக்க சென்ற போது சிசிடிவி காட்சிகளில் சக்திவேல் சிக்கி கொண்டதாக விசாரணையில் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து கூடுதல் ஆணையர் பிரேம் ஆனந்த் சின்ஹா கூறுகையில், “கைது செய்யப்பட்டுள்ள சக்திவேலிடம் 61சவரன் தங்க நகைகள் மற்றும் 1 லட்சம் பணம் பறிமுதல் செய்த போலிஸார், மீதமுள்ள நகை, பணத்தை மீட்கும் பணியில் போலிஸார் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் இதே போல வேறு மூதாட்டியை ஏதும் சக்திவேல் கொலை செய்துள்ளாரா என்ற கோணங்களில் , சக்திவேலை காவலில் எடுத்து போலிஸார் விசாரணை நடத்த திட்டமிட்டுள்ளனர்” எனத் தெரிவித்துள்ளார்.

banner

Related Stories

Related Stories