விளையாட்டு

பாரிஸ் ஒலிம்பிக்: இறுதிப்போட்டிக்கு முன்னேறிய நிலையில் வினேஷ் போகத் தகுதிநீக்கம்- பறிபோன பதக்க வாய்ப்பு!

பாரிஸ் ஒலிம்பிக் தொடரில் மகளிர் மல்யுத்தம் 50 கிலோ எடைப்பிரிவில் இறுதிப்போட்டிக்கு முன்னேறிய இந்திய வீராங்கனை வினேஷ் போகத் தகுதிநீக்கம் செய்யப்பட்டதால் அதிர்ச்சி.

பாரிஸ் ஒலிம்பிக்: இறுதிப்போட்டிக்கு முன்னேறிய நிலையில் வினேஷ் போகத் தகுதிநீக்கம்- பறிபோன பதக்க வாய்ப்பு!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Praveen
Updated on

பாரிஸ் ஒலிம்பிக் தொடரின் மல்யுத்த மல்யுத்த போட்டியில் 50 கிலோ மகளிர் எடை பிடியில் இந்திய வீரர் வினேஷ் போகத் கலந்துகொண்டார். அதில் காலிறுதிக்கு முந்தைய போட்டியில் வினேஷ் போகத் சர்வதேச போட்டிகளில் உலகின் நம்பர் 1 வீராங்கனையும், 4 முறை உலக சாம்பியன், நடப்பு ஒலிம்பிக் சாம்பியனுமான ஜப்பானின் யூ சுசாகியை எதிர்கொண்டார்.

இதில் முதலில் பின்னடைவில் இருந்த அவர் கடைசி 20 நொடிகளில் அபாரமாக செயல்பட்டு இதுவரை எந்த போட்டியிலும் தோற்கடிக்கப்படாமல் இருந்த யூ சுசாகியை வீழ்த்தினார்.அதனைத் தொடர்ந்து நடைபெற்ற காலிறுதிப்போட்டியில் உலகின் 7-ம் நம்பர் வீராங்கனையான உக்ரைனின் ஒல்ஸானா லிவாச்சை வீழ்த்தி வினேஷ் போகத் அரையிறுதிக்கு முன்னேறினார்.

பின்னர் நடைபெற்ற அரையிறுதிப் போட்டியில் கியூபாவின் கஸ்மான் லோபசை 5-0 என்ற புள்ளிக்கணக்கில் வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறினார். இதன் மூலம் மல்யுத்தத்தில் இறுதிபோட்டிக்கு தகுதி பெற்ற முதல் இந்திய வீராங்கனை என்ற பெருமையை வினேஷ் போகத் பெற்றார்.

பாரிஸ் ஒலிம்பிக்: இறுதிப்போட்டிக்கு முன்னேறிய நிலையில் வினேஷ் போகத் தகுதிநீக்கம்- பறிபோன பதக்க வாய்ப்பு!

இறுதிப்போட்டிக்கு முன்னேறிய நிலையில் அவர் தங்கம் அல்லது வெள்ளி வெல்வது உறுதியான நிலையில், தற்போது, அவர் தகுதி நீக்கம் செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இன்று காலை 50 கிலோ எடையை விட 100 கிராம் அதிக எடை இருந்ததாக கூறப்பட்டு வினேஷ் போகத் தகுதி நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

இதனை இந்திய ஒலிம்பிக் கமிட்டியும் உறுதிப்படுத்தியுள்ளது. இதனால் இறுதிப்போட்டியில் ஆடாமலேயே அமெரிக்க வீராங்கனை தங்கம் வெல்லும் நிலை ஏற்பட்டுள்ளது. அதே நேரம் வெண்கல பதக்கத்துக்கான போட்டி நடைபெறும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.

banner

Related Stories

Related Stories