விளையாட்டு

#ParisOlympics - இந்தியாவுக்கு 3 ஆவது பதக்கம் : எந்த போட்டியில் என்ன பதக்கம் யார் வென்றது?

பிரான்ஸ் ஒலிம்பிக் போட்டயில் இந்தியா இதுவரை 3 வெண்கலப் பதக்கங்களை வென்றுள்ளது.

#ParisOlympics - இந்தியாவுக்கு 3 ஆவது பதக்கம் : எந்த போட்டியில் என்ன பதக்கம் யார் வென்றது?
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

33-வது ஒலிம்பிக் தொடர் பிரான்ஸ் தலைநகர் பாரிஸ் நகரில் கோலாகலமாக தொடங்கி நடைபெற்று வருகிறது. ஆகஸ்ட் 11ஆம் தேதி வரை நடைபெறவுள்ள இந்த ஒலிம்பிக் தொடரில் 206 நாடுகளை சேர்ந்த 10,500 வீரர்கள் கலந்துகொள்கின்றனர்.

இந்த தொடரில் இந்தியாவை சேர்ந்த 117 வீரர், வீராங்கனைகளும் பங்கேற்கவுள்ளனர். இந்த தொடரில் இந்தியாவின் முதல் பதக்கத்தை 22 வயதான இந்திய வீராங்கனை மனு பாக்கர் வென்று அசத்தினார். மகளிர் துப்பாக்கிச்சுடுதல் 10மீட்டர் ஏர் பிஸ்டல் பிரிவில் அவர் வெண்கல பதக்கம் வென்றார்.

மேலும், துப்பாக்கி சுடுதல் போட்டியின் 10 மீட்டர் ஏர் பிஸ்டல் கலப்பு இரட்டையர் பிரிவில், இந்தியாவின் மனு பாக்கர் - சரப்ஜோத் சிங் இணை வெண்கல பதக்கம் வென்றனர். இந்த ஒலிம்பிக் தொடரில் இரண்டு பதக்கங்கள் வென்ற முதல் இந்தியர் என்ற சாதனையை மனு பாக்கர் படைத்துள்ளார்.

இந்நிலையில் 50 மீட்டர் ரைபிள் 3 பொசிஷ்ன்ஸ் பிரிவில் இறுதிபோட்டியில், ஸ்வப்னிஸ் குசலே 451.4 புள்ளிகளை எடுத்து 3 ஆவது இடம் பிடித்து வெண்கலப் பதக்கம் வென்றார்.

இந்த ஒலிம்பிக் தொடரில் 11 தங்கப் பதக்கங்களை வென்று சீனா முதலிடத்தில் உள்ளது. பிரான்ஸ் 8 தங்கப்பதக்கத்துடன் 2 ஆவது இடத்திலும், ஜப்பான் 8 தங்கப்பதக்கத்துடன் 3 ஆவது இடத்திலும் உள்ளது. இந்தியா 3 வெண்கலப் பதக்கத்துடன் 42 ஆவது இடத்தில் உள்ளது.

banner

Related Stories

Related Stories