அரசியல்

சரத்பவார் அணிக்கு திரும்பிய கவுன்சிலர்கள்... பாஜகவை நம்பி சென்று சீரழிந்த அஜித் பவார் !

மஹாராஷ்டிராவில் அஜித் பவார் பிரிவை சேர்ந்த 16 கவுன்சிலர்கள் சரத்பவார் அணிக்கு திரும்பியுள்ளனர்.

சரத்பவார் அணிக்கு திரும்பிய கவுன்சிலர்கள்... பாஜகவை நம்பி சென்று சீரழிந்த அஜித் பவார் !
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Praveen
Updated on

மகாராஷ்டிராவில் 2019ம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் எந்த கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்கவில்லை. அதைத் தொடர்ந்து இரண்டரை ஆண்டுகள் சிவசேனாவை சேர்ந்தவர் முதல்வராக இருக்க ஒப்புதல் கொடுத்தால் பாஜகவுடன் கூட்டணி ஆட்சி அமைக்க தயார் என சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரே அறிவித்தார்.

ஆனால் இதற்கு உடன்படாத பாஜக தேசியவாத காங்கிரஸுடன் கூட்டணி வைத்தது.அதைத் தொடர்ந்து பாஜக சார்பில் தேவேந்திர பட்னாவிஸ் முதல்வராக பொறுப்பேற்றார்.ஆனால் இந்த அரசு சில நாட்களில் கவிழ்ந்தது. அதன்பின்னர் காங்கிரஸ்,தேசியவாத காங்கிரஸுடன் சிவசேனா கூட்டணி வைத்த நிலையில் உத்தவ் தாக்கரே முதல்வராக பொறுப்பேற்றார்.

சுமார் 3 ஆண்டுகள் நீடித்த இந்த அரசு சிவசேனாவை சேர்ந்த ஏக்நாத் ஷிண்டேவுக்கு ஆதரவான எம்.எல்.ஏக்கள் மூலம் கவிழ்ந்தது. அதைத் தொடர்ந்து, ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான அதிருப்தி எம்.எல்.ஏக்களை வைத்து பாஜக ஆட்சிக்கு வரும் என எதிர்பார்த்த நிலையில் ஏக்நாத் ஷிண்டேவே முதல்வராக பொறுப்பேற்றார். துணை முதல்வர் பதவி பாஜகவை சேர்ந்த தேவேந்திர பட்னாவிஸ்க்கு வழங்கப்பட்டது.

சரத்பவார் அணிக்கு திரும்பிய கவுன்சிலர்கள்... பாஜகவை நம்பி சென்று சீரழிந்த அஜித் பவார் !

அதனைத் தொடர்ந்து சிவசேனா பணியில் தேசியவாத காங்கிரஸ் கட்சியை பாஜக உடைத்ததில், அக்கட்சியின் மூத்த தலைவர் அஜித் பவார் தலைமையில் 29 எம்.எல்.ஏக்கள் பாஜக கூட்டணி அரசுக்கு ஆதரவு தெரிவித்தனர். அதில் 8 பேருக்கு உடனடியாக ஆளுநர் அமைச்சராக பதவியேற்பு நடத்திய நிலையில், அஜித் பவாருக்கு துணை முதல்வர் பதவி ஒதுக்கப்பட்டுள்ளது.

அதனைத் தொடர்ந்து சமீபத்தில் நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தலில் அஜித் பவாரின் தேசியவாத காங்கிரஸ் கட்சி படுதோல்வியை சந்தித்தது. அதே நேரம் சரத் பவாரின் கட்சி பெரும் வெற்றியை பதிவு செய்தது. அதைத் தொடர்ந்து அஜித் பவார் அணியை சேர்ந்த 18 முதல் 19 எம்.எல்.ஏ.க்கள் சரத் பவார் தலைமையிலான தேசியவாத காங்கிரஸ் கட்சியில் சேர இருப்பதாக கூறப்பட்டது.

சரத்பவார் அணிக்கு திரும்பிய கவுன்சிலர்கள்... பாஜகவை நம்பி சென்று சீரழிந்த அஜித் பவார் !

இந்த நிலையில், அஜித் பவார் பிரிவை சேர்ந்த 16 கவுன்சிலர்கள் சரத்பவார் அணிக்கு திரும்பியுள்ளனர். பிம்ப்ரி-சிஞ்ச்வாட் பகுதியில் தேசியவாத காங்கிரஸ் கட்சிக்கு 38 கவுன்சிலர்கள் இருந்தனர். பின்னர் அஜித் பவார் தனியே பிரிந்து சென்றபோது அவருடன் 36 கவுன்சிலர்கள் சென்றதாகவும், வெறும் இரண்டு கவுன்சிலர்கள் மட்டுமே சரத் பவாருடன் இருந்ததாகவும் கூறப்பட்டது.

தற்போது நாடாளுமன்ற தேர்தலில் அதிக இடங்களில் வென்று சரத் பவார் தனக்குத்தான் மக்கள் ஆதரவு இருக்கிறது என்பதை நிரூபித்த நிலையில், பிரிந்து சென்ற 38 கவுன்சிலர்களில் 16 பேர் சரத்பவாரை சந்தித்து மீண்டும் தங்களை கட்சியில் இணைத்துக்கொள்ளவேண்டும் என்று கூறி அவர் பக்கம் சாய்ந்துள்ளனர். மஹாராஷ்டிராவில் விரைவில் சட்டமன்ற தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், மேலும் சில எம்.எல்.ஏக்களும் சரத்பவார் பக்கம் திரும்புவார்கள் என்று கூறப்படுகிறது.

banner

Related Stories

Related Stories