முரசொலி தலையங்கம்

முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் அர­சி­யல் வெற்­றி­யும் கொள்கை வெற்­றி­யும் : முரசொலி தலையங்கம்!

கொள்­கை­யில் வெற்றி பெற்­றால், அர­சி­யல் வெற்றி தானாக வரும். கொள்கை வெற்­றி­யின் மூல­மா­கப் பெறும் அர­சி­யல் வெற்றி, நிலையானது.

முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் அர­சி­யல் வெற்­றி­யும் கொள்கை வெற்­றி­யும் : முரசொலி தலையங்கம்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

முரசொலி தலையங்கம் (02-07-2024)

அர­சி­யல் வெற்­றி­யும் கொள்கை வெற்­றி­யும்!

“எங்­க­ளது இலக்கு மிகப்­பெ­ரி­யது. எங்­க­ளது கொள்கை மிக­மி­கப் பெரியது. எனவே, எங்­க­ளது பயண­மும் மிக­மிக நீண்­டது. நூற்றாண்டு காலத் திரா­விட இயக்­கத்­தின் கன­வு­களை நிறைவேற்ற வேண்­டிய கட­மை­யும் பொறுப்­பும் எங்­க­ளுக்கு உள்ளது. பகுத்­த­றி­வுப் பக­ல­வன் தந்தை பெரி­யா­ரின் சிந்தனைகளை -பேர­றி­ஞர் அண்­ணா­வில் பாணி­யில் -தமி­ழி­னத் தலை­வர் கலை­ஞர் அவர்­க­ளின் செயல்­வே­கத்­தோடு கொண்டு செலுத்தி வரு­கி­றேன். எங்­க­ளது இலக்­கில் நாங்­கள் வெல்­வோம். நாங்­கள் வென்று கொண்டே இருப்­போம். நாங்­கள் வென்று கொண்டே இருப்­போம்” என்ற மாபெ­ரும் கொள்­கைப் பிரகடனத்தை ‘திரா­விட மாடல்’ ஆட்­சி­யின் முத­ல­மைச்­சர் மு.க.ஸ்டாலின் அவர்­கள் தலை­நி­மிர்ந்து முழங்கி இருக்கிறார்கள்.

‘இது ஒரு கட்­சி­யின் ஆட்­சி­யல்ல, ஒரு இனத்­தின் ஆட்சி, ஒரு கொள்கை­யின் ஆட்சி’ என்று பத­வி­யேற்ற போதே முத­ல­மைச்­சர் அவர்­கள் சொன்­னார்­கள். அதே அடிப்­ப­டை­யில்­தான் அனைத்­துத் திட்­டங்­க­ளை­யும் தீட்டி வரு­கி­றார்­கள்.

“நான் ஆட்­சிப் பொறுப்­பேற்ற காலம் முதல் ஒவ்­வொரு நாளும் –ஒவ்­வொரு மணி­நே­ர­மும் - நாட்டு மக்­க­ளுக்கு நல்ல பல திட்டங்களைத் தீட்டி வந்­துள்­ளேன் என்­பதை தமிழ்­நாட்டு மக்­கள் உணர்ந்­த­தன் அடை­யா­ளம்­தான் 100 விழுக்­காடு வெற்றி” என்று சொல்லி இருக்­கி­றார் மாண்­பு­மிகு முத­ல­மைச்­சர் அவர்­கள். 2026 ஆம் ஆண்டு சட்­ட­மன்­றத் தேர்­த­லி­லும் மகத்­தான வெற்­றியை நாங்­கள் பெறு­வோம் என்­ப­தில் எந்­தச் சந்­தே­க­மு­மில்லை என்­றும் உறு­தி­பட முத­ல­மைச்­சர் சொன்­னார்.

“நடந்து முடிந்த நாடா­ளு­மன்­றத் தேர்­த­லில் தி.மு.க. கூட்­டணி பெற்ற வாக்­கு­களை சட்­ட­மன்­றத் தொகு­தி­கள் வாரி­யாக ஆய்வு செய்­தால் தி.மு.க. கூட்­டணி 221 தொகு­தி­க­ளைக் கைப்­பற்றி வெற்றி பெற்­றுள்­ளது” என்­ப­தை­யும் பெரு­மை­யு­டன் சொன்­னார் முத­ல­மைச்­சர்.

முத­ல­மைச்­சர் அவர்­க­ளின் உரை­யில் இரண்டு வித­மான வெற்றிகள் பேசப்­பட்­டுள்­ளது. ஒன்று அர­சி­யல் வெற்றி, இன்னொன்று கொள்கை வெற்றி. அர­சி­யல் வெற்­றியை அவர் தலை­மைப் பொறுப்­புக்கு வந்­தது முதல் தலை­வர் மு.க.ஸ்டாலின் அவர்­கள் பெற்று வரு­கி­றார்­கள்.

‘நின்ற தேர்­தல் முதல் வென்ற தலை­வர் கலை­ஞர்’ என்­றால் – ‘தலை­வ­ராக வந்த காலம் முதல் எதிர்­கொண்ட அனைத்­துத் தேர்தலி­லும் வென்ற தலை­வ­ராக’ மு.க.ஸ்டாலின் அவர்­கள் உயர்ந்து நிற்­கி­றார்­கள். திட்­டங்­கள் -சாத­னை­கள் மூல­மாக அரசியல் வெற்­றி­யைத் தொடர்ந்து முத­ல­மைச்­சர் அவர்­கள் பெற்று வரு­கி­றார்­கள்.

திரா­விட முன்­னேற்­றக் கழ­கம் சாதா­ரண அர­சி­யல் கட்­சி­யாக இருந்­தால் – முத­ல­மைச்­சர் மு.க.ஸ்டாலின் அவர்­க­ளும் சாதா­ரண தலை­வ­ராக இருந்­தி­ருந்­தால் இந்த அர­சி­யல் வெற்­றியே போதுமானது என்று நிறை­வ­டைந்து இருக்­க­லாம். நீதிக்­கட்­சி­யின் தொடர்ச்­சி­யாக திரா­விட முன்­னேற்­றக் கழ­கம் இருப்­ப­தால் - பெரி­யா­ரின், அண்­ணா­வின், கலை­ஞ­ரின் கொள்கை வாரி­சாக மாண்­பு­மிகு மு.க.ஸ்டாலின் அவர்­கள் இருப்­ப­தால் கொள்­கைப் பூர்­வ­மான வெற்­றி­யையே தனது முழு­மை­யான வெற்­றி­யாக நினைக்­கி­றார். அதற்­கான பய­ணத்­தையே அவர் நடத்தி வருகிறார்.

நாற்­ப­துக்கு நாற்­பது என்ற வெற்­றியே போதும் என அவர் கொண்டா­ட­வில்லை. அடுத்த தேர்­த­லில் வெற்றி பெறு­வ­தோடு தனது கடமை முடிந்து விடு­வ­தாக அவர் நினைக்­க­வு­மில்லை. ‘எங்க­ளது இலக்கு மிகப்­பெ­ரி­யது. எங்­க­ளது கொள்கை மிக­மி­கப் பெரி­யது. எனவே, எங்­க­ளது பய­ண­மும் மிக­மிக நீண்­டது.’ என்று சொல்­வ­தன் மூல­மாக நூற்­றாண்­டின் தொடர்ச்­சி­யாக தன்­னைக் கரு­து­கி­றார் முத­ல­மைச்­சர் அவர்­கள்.

திரா­விட முன்­னேற்­றக் கழ­கம் 1967 ஆம் ஆண்டு ஆட்­சிக்கு வந்த போது, ‘முதன் முறை ஆட்­சிக்கு வந்­துள்­ளது தி.மு.க.’ என்று பத்திரிகை­கள் எழு­தி­யது. பேர­றி­ஞர் அண்ணா அவர்­கள்­தான் திருத்­தம் சொன்­னார். ‘தி.மு.க. முதல் முறை­யாக ஆட்­சிக்கு வரவில்லை. நீதிக்­கட்சி ஆட்­சி­யின் தொடர்ச்­சி­தான் நாங்­கள்’ என்று வரலாற்றை பின் நோக்­கிப் பார்த்­துச் சொன்­னார்­கள்.

முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் அர­சி­யல் வெற்­றி­யும் கொள்கை வெற்­றி­யும் : முரசொலி தலையங்கம்!

‘தி.மு.க.வுக்கு நீதிக்­கட்சி திரா­வி­டர் கழ­க­மும் தாய் தந்தை போன்ற­வர்­கள்’ என்று முத்­த­மிழ்க் காவ­லர் கி.ஆ.பெ.விசு­வ­நா­தம் அவர்­கள் சொன்­னார்­கள். பேர­றி­ஞர் அண்­ணா­வுக்கு முன்­ன­தாக நீதிக் கட்­சி­யின் செய­லா­ள­ராக இருந்­த­வர்­தான் கி.ஆ.பெ. அவர்கள். அந்த வர­லாற்­றுப் பின்­பு­லத்தை உணர்ந்து செயல்படுப­வ­ராக மட்­டு­மல்ல, இன்­றைய திரா­விட முன்­னேற்­றக் கழ­கத் தொண்­டர்­க­ளுக்கு உணர்த்­து­ப­வ­ராக மு.க.ஸ்டாலின் அவர்­கள் இருக்­கி­றார்­கள்.

ஏன் இங்கே திரா­விட முன்­னேற்­றக் கழ­கம் தொடர்ந்து வெற்றி பெறு­கி­றது, ஏன் பா.ஜ.க. போன்ற பிள­வு­வாத சக்­தி­கள் வெற்றி பெறத் திண­று­கின்­றன என்­பதை அர­சி­யல் ரீதி­யாக மட்­டு­மல்ல, வர­லாற்­றுப் பின்­பு­லத்­து­டன் இப்­போ­து­தான் அகில இந்­தி­யக் கட்சி­கள் ஆய்வு செய்து கொண்­டி­ருக்­கின்­றன. பிற மாநி­லக் கட்சிகள் உண­ரத் தொடங்கி இருக்­கின்­றன. இதன் அடை­யா­ளம் கடந்த நாடா­ளு­மன்­றத் தேர்­தல் பரப்­பு­ரை­க­ளில் தெரிந்­தது. பா.ஜ.க.வை ஒரு அர­சி­யல் கட்­சி­யாக மட்­டு­மல்­லா­மல் கொள்கை எதி­ரி­யாக இந்த முறை தான் பிற கட்­சி­கள் விமர்­சித்­தது. இது­தான் பா.ஜ.க.வின் முகத்­தி­ரை­யைக் கிழிக்­கும் என்­பதை அக்­கட்­சி­கள் உணர்ந்­தன. 2019 ஆம் ஆண்டு பா.ஜ.க.வை எதிர்த்து பேசியதையும் 2024 ஆம் ஆண்டு தேர்­த­லில் பேசி­ய­தை­யும் ஒப்பிட்­டுப் பார்த்­தால் உணர முடி­யும். ஆர்.எஸ்.எஸ். அமைப்பை கொள்கை ரீதி­யாக கடு­மை­யாக விமர்­சித்து ராகுல் பேசி­யது இதற்கு மிக முக்­கி­ய­மான எடுத்­துக்­காட்டு ஆகும்.

கொள்­கை­யில் வெற்றி பெற்­றால், அர­சி­யல் வெற்றி தானாக வரும். கொள்கை வெற்­றி­யின் மூல­மா­கப் பெறும் அர­சி­யல் வெற்றி, நிலை­யா­னது. ஒரு கட்சி ஆட்சி முடிந்து, இன்­னொரு கட்சி ஆட்சி வரு­வது மாற்­ற­மல்ல. ஒரு தத்­து­வத்­துக்கு முற்­றுப்­புள்ளி வைத்து, இன்­னொரு தத்­து­வம் ஆட்­சிக்கு வரு­வதே சரி­யான மாற்றம் ஆகும். ஐம்­பது ஆண்டு கால அர­சி­யல் பய­ணத்­தைத் தொய்­வில்­லா­மல் தொடர்ந்து நடத்­திய மாண்­பு­மிகு மு.க.ஸ்டாலின் அவர்­கள், தனது இயக்­கத்­துக்கு மட்­டு­மல்ல அனைத்து இயக்­கங்­க­ளுக்­கும் சேர்த்து வழி­காட்­டும் வழி­மு­ற­யாக இது அமைந்­துள்­ளது.

‘எங்­க­ளது இலக்கு மிகப்­பெ­ரி­யது. எங்­க­ளது கொள்கை மிக­மி­கப் பெரி­யது. எனவே, எங்­க­ளது பய­ண­மும் மிக­மிக நீண்­டது.’ என்ற கொள்கை வெற்­றி­யை­யும் மாண்­பு­மிகு முத­ல­மைச்­சர் அடை­வார் என்­பது உறுதி.

banner

Related Stories

Related Stories