இந்தியா

ம.பி.யில் இராணுவ வீரர்கள் மீது தாக்குதல் - பெண் தோழி மீது கூட்டு பாலியல் வன்முறை : ராகுல் காந்தி கண்டனம்!

மத்தியப் பிரதேசம், மணிப்பூர் உள்ளிட்ட மாநிலங்களில் பெண்களுக்கு எதிரான குற்றங்களும், கொலை - கொள்ளைகளும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றன.

ம.பி.யில் இராணுவ வீரர்கள் மீது தாக்குதல் - பெண் தோழி மீது கூட்டு பாலியல் வன்முறை : ராகுல் காந்தி கண்டனம்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Chennamani
Updated on

பா.ஜ.க ஆளும் மாநிலங்களான உத்தரப் பிரதேசம், மத்தியப் பிரதேசம், மணிப்பூர் உள்ளிட்ட மாநிலங்களில் பெண்களுக்கு எதிரான குற்றங்களும், கொலை - கொள்ளைகளும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றன.

எனினும், அதில் பெரும்பாலான சம்பவங்களுக்கு, இன்றளவும் நீதி மீட்டுத்தரப்படாமலேயே இருக்கிறது. அது குறித்து, பா.ஜ.க தலைவர்களும் கவலை கொள்வதில்லை. பல நேரங்களில் குற்றங்களில் ஈடுபடுவர்களுக்கு பின்னணியில் இருப்பவர்களே, பா.ஜ.க.வினராகத்தான் இருக்கிறார்கள்.

அவ்வகையில், பா.ஜ.க ஆளும் மாநிலமான மத்தியப் பிரதேசத்தில் நேற்று (செப்டம்பர் 11) மாலை நடந்த சம்பவம், மிகவும் அதிர்ச்சியூட்டுவதாய் அமைந்துள்ளது.

மத்தியப் பிரதேசத்தின் இந்தூர் பகுதியில் பயிற்சி பெற்று வந்த இரு இராணுவ வீரர்கள், மாலை நேரத்தில் இரு பெண் தோழிகளுடன் சாலையில் சென்று கொண்டிருந்த போது, அடையாளம் தெரியாத 8 நபர்களால் தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளனர்.

ம.பி.யில் இராணுவ வீரர்கள் மீது தாக்குதல் - பெண் தோழி மீது கூட்டு பாலியல் வன்முறை : ராகுல் காந்தி கண்டனம்!

இராணுவ வீரர்களையும், அவர்களது பெண் தோழிகளையும் தாக்கிய அந்த 8 குண்டர்களும், பணத்தை பறித்துக்கொண்டு, இரு பெண்களில் ஒரு பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்தது விசாரணையில் தெரியவந்துள்ளது.

இந்நிலையில், இது குறித்து தனது X தளத்தில் பதிவிட்ட எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி, “மத்தியப் பிரதேசத்தில் இரு இராணுவ வீரர்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டு, அவர்களின் பெண் தோழி கூட்டு பாலியல் வன்முறைக்கு ஆளாகியிருப்பது, தேசத்தையே இழிவுக்குள்ளாக்கிய சம்பவம். பா.ஜ.க ஆளும் மாநிலங்களில் சட்ட ஒழுங்கே இல்லாமல் போய்விட்டது போல் இருக்கிறது. பா.ஜ.க ஆட்சியின் கீழ் ஒவ்வொரு நாளும் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் அதிகரித்து வருகின்றன” என குற்றம் சாட்டியுள்ளார்.

மேலும், “இச்சம்பவத்தால் ஒட்டுமொத்த சமூகமும், அரசும் தலைகுணியும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். இது குறித்த தீவிர சிந்தனை அனைவருக்கும் வேண்டும். இது போன்ற கொடூர நடவடிக்கைகளிலிருந்து மீண்டு வர வேண்டும்” என தெரிவித்துள்ளார்.

banner

Related Stories

Related Stories