உலகம்

1 ஆண்டை தொட்ட இஸ்ரேல் - ஹமாஸ் போர்... 42 ஆயிரம் பேரை பலிவாங்கிய கொடூர யுத்தம் !

1 ஆண்டை தொட்ட இஸ்ரேல் - ஹமாஸ் போர்... 42 ஆயிரம் பேரை பலிவாங்கிய கொடூர யுத்தம் !
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Praveen
Updated on

இஸ்ரேல் -பாலஸ்தீனம் இடையே கடந்த பல ஆண்டுகளாக பிரச்சனை இருந்து வருகிறது. பாலஸ்தீன பகுதியில் இஸ்ரேல் தொடர்ந்து மேற்கொண்டு வந்த குடியேற்றம் மற்றும் அல்- அக்ஸா மசூதி பகுதியில் இஸ்ரேல் மேற்கொண்ட ஆக்கிரமிப்பு போன்றவற்றால் அங்கு பரபரப்பு ஏற்பட்டு வந்தது.

இந்த சூழலில் கடந்த ஆண்டு அக்டோபர் 7-ம் தேதி, இஸ்ரேலின் இந்த நடவடிக்கைக்கு பதிலடி கொடுக்கும் வகையில் ஹமாஸ் அமைப்பு இஸ்ரேலை நோக்கி ஏவுகணைகளை அனுப்பி தாக்குதல் நடத்தியது. மேலும், இஸ்ரேலின் பல பகுதியில் நுழைந்து ஹமாஸ் அமைப்பினர் தாக்குதல் நடத்தினர்.இதில் நூற்றுக்கணக்கான இஸ்ரேல் குடிமக்கள் மற்றும் வெளிநாட்டினர் கொல்லப்பட்டனர்.

அதோடு ஏராளமானோரை ஹமாஸ் அமைப்பு பணயக்கைதிகளாக பிடித்து வைத்தது.ஹமாஸ் அமைப்பின் இந்த நடவடிக்கைக்கு பதிலடியாக இஸ்ரேல் ராணுவம் காசா பகுதியில் விமானங்கள் மூலமும், ஏவுகணைகளை அனுப்பியும் தாக்குதல் நடத்தி வருகின்றனர். காசாவில் இஸ்ரேல் மேற்கொண்ட போர் தொடங்கி 6 மாதங்கள் நிறைவடைந்த நிலையில் இந்த தாக்குதலில் 41 ஆயிரத்துக்கும் அதிகமான அப்பாவி பாலஸ்தீன குடிமக்கள் உயிரிழந்துள்ளதாக ஹமாஸ் அமைப்பின் கட்டுப்பாட்டில் உள்ள காசா சுகாதாரத்துறை அறிவித்துள்ளது.

1 ஆண்டை தொட்ட இஸ்ரேல் - ஹமாஸ் போர்... 42 ஆயிரம் பேரை பலிவாங்கிய கொடூர யுத்தம் !

நேற்று இஸ்ரேல் மீது ஹமாஸ் நடத்திய தாக்குதலில் முதலாம் ஆண்டு நினைவு நாள் அனுசரிக்கப்பட்டது. அதனை ஒட்டி 350க்கும் அதிகமானோர் கொல்லப்பட்ட இசை விழா நடைபெற்ற இடத்தில் ஏராளமானோர் கூடி தங்கள் குடும்பத்தினருக்கு அஞ்சலி செலுத்தினர்.

இதனிடையே ஹமாஸால் பிணைக்கைதியாக பிடிக்கப்பட்டு விடுவிக்கப்படாமல் உள்ளவர்களின் குடும்பத்தினர் டெல் அவிவ் நகரில் கூடி இஸ்ரேல் அரசுக்கு எதிரான முழக்கங்களை எழுப்பினர். மேலும் இஸ்ரேல் அதிபர் ஐசாக் ஹெர்ஸொக்கும் இசை விழா நடைபெற்ற இடத்தில் அஞ்சலி செலுத்தினார்.

banner

Related Stories

Related Stories