உலகம்

ரஷ்யாவுக்குள் முன்னேறிய உக்ரைன் படைகள் மீது சரமாரி தாக்குதல்: ஒரே வாரத்தில் 2500 வீரர்களை இழந்த உக்ரைன்!

ரஷ்யாவின் பதில் தாக்குதலால் முன்னேறிய உக்ரைன் படைகளுக்கு பெரும் பின்னடைவை ஏற்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது.

ரஷ்யாவுக்குள் முன்னேறிய உக்ரைன் படைகள் மீது சரமாரி தாக்குதல்: ஒரே வாரத்தில் 2500 வீரர்களை இழந்த உக்ரைன்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Praveen
Updated on

ரஷ்யா - உக்ரைன் இடையேயான போர் தற்போது இரண்டு வருடத்தை தாண்டியுள்ள நிலையில் தற்போதும் உக்கிரமான நடந்து வருகிறது. வான்வழி, கடல்வழி மற்றும் தரைவழி என மும்முனை தாக்குதலை நடத்துவதால் பெரும் உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளன. உக்ரைன் நாட்டின் ஏராளமான இராணுவ இலக்குகளை ரஷ்யப் படைகள் தாக்கி அழித்துள்ளன.

அதேபோல் உக்ரைன் தங்களைத் தற்காத்துக்கொள்ள, ரஷ்யப் படைகளுக்குப் பதிலடி கொடுத்து வருகிறது. போர் தொடங்கியதிலிருந்து அமெரிக்கா உள்ளிட்ட மேற்கத்திய நாடுகள் உக்ரைனுக்கு ஆதரவாக ஆயுதங்களை வழங்கி வருகின்றன. இந்த போர் இத்தனை மாதம் கடந்தும் இவ்வளவும் நாட்கள் தொடர உக்ரைனுக்கு அமெரிக்கா மற்றும் நேட்டோ நாடுகள் அளித்துவரும் பொருளாதார மற்றும் ஆயுத உதவி முக்கிய காரணமாக இருந்து வருகிறது.

இதனிடையே உக்ரைன் ராணுவம் ரஷ்யாவின் குர்ஸ்க் பிராந்தியத்தில் ஒரு எதிர்பாராத அதிரடி தாக்குதல் நடத்தி ரஷ்யாவுக்குள் நுழைந்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியது. ரஷ்யாவின் படைகள் உக்ரைனின் டோனஸ்க் பகுதியில் குவிக்கப்பட்டிருந்த நிலையில், உக்ரைன் படைகள் ரஷ்யாவின் குர்ஸ்க் பிராந்தியத்தில் ஒரு அதிரடி தாக்குதல் நடத்தி அந்த பகுதியில் முன்னேறியது.

ரஷ்யாவுக்குள் முன்னேறிய உக்ரைன் படைகள் மீது சரமாரி தாக்குதல்: ஒரே வாரத்தில் 2500 வீரர்களை இழந்த உக்ரைன்!

உக்ரைனின் இந்த தாக்குதல் காரணமாக அந்த பிராந்தியத்தில் இருந்து சுமார் 76 ஆயிரம் மக்களை வெளியேற்ற ரஷ்யா உத்தரவிட்டுள்ளது. ரஷ்யாவின் பல கிராமங்களை உக்ரைன் கைப்பற்றியுள்ளதாக கூறப்பட்ட நிலையில், தற்போது ரஷ்யாவின் பதில் தாக்குதலால் முன்னேறிய உக்ரைன் படைகளுக்கு பெரும் பின்னடைவை ஏற்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது.

ரஷ்யாவின் தாக்குதலில் 2500-க்கும் அதிகமான உக்ரைனிய வீரர்கள் கொல்லப்பட்டதாக ஏற்கனவே ரஷ்யா அறிவித்துள்ள நிலையில், தற்போது 24 உக்ரைனிய வீரர்கள் ரஷ்ய படையிடம் சரணடைந்துள்ளதாக ரஷ்ய ஊடகங்கள் தெரிவித்துள்ளன. உக்ரைனின் 22வது படைப்பிரிவில் ஏராளமானோர் கொல்லப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த பகுதியில் மட்டும் 41 டாங்கிகளை உக்ரைன் இழந்துள்ளதாகவும் ரஷ்ய ராணுவம் சார்பில் கூறப்பட்டுள்ளது.

banner

Related Stories

Related Stories