தமிழ்நாடு

“117 ஆண்டுகளுக்கு பிறகு குடமுழுக்கு! - அறநிலையத் துறையின் பொற்காலம் இது!” : அமைச்சர் சேகர்பாபு பெருமிதம்!

”ஆயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்ட திருக்கோயில்களில் திருப்பணிகள் மேற்கொண்டு குடமுழுக்கு நடத்திட ஒவ்வொரு ஆண்டும் தலா ரூ. 100 கோடியை அரசு மானியமாக தந்து வருகிறார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.”

“117 ஆண்டுகளுக்கு பிறகு குடமுழுக்கு! - அறநிலையத் துறையின் பொற்காலம் இது!” : அமைச்சர் சேகர்பாபு பெருமிதம்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Chennamani
Updated on

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழிகாட்டுதலின்படி, இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு, சுமார் 117 ஆண்டுகளுக்கு பின். இன்று (08.09.2024) நடைபெற்ற ஆயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்ட திருக்கோயில்களில் ஒன்றான திருநெல்வேலி மாவட்டம். மானூர், அருள்மிகு அம்பலவாணசுவாமி திருக்கோயில் குடமுழுக்கு பெருவிழாவில் பங்கேற்று சிறப்பித்தார்.

விழாவிற்கு பிறகு, செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் பி.கே. சேகர்பாபு,

“திருநெல்வேலி மாவட்டம், மானூர், அருள்மிகு அம்பலவாணசுவாமி திருக்கோயிலானது ஆயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்ட திருக்கோயில்களில் ஒன்றாகும். இத்திருக்கோயிலுக்கு 117 ஆண்டுகளுக்கு பின் இன்றைய நாள் குடமுழுக்கு நடைபெற்றுள்ளது.

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆட்சிப் பொறுப்பேற்ற பின் 2021 – 2022 ஆம் நிதியாண்டில் இதுபோன்ற நிதிவசதி குறைவாக உள்ள தொன்மையான திருக்கோயில்களை புனரமைக்க ரூ. 6 கோடி நிதி ஒதுக்கீடு செய்து வழங்கியதில் கரூர் சித்தரால் ஆறாவது சபையாக போற்றப்பட்ட இத்திருக்கோயில் குடமுழுக்கு நடைபெற்றுள்ளது பெருமகிழ்ச்சியை தருகின்றது.

மானூர் அருள்மிகு அம்பலவாணசுவாமி திருக்கோயிலுக்கு சொந்தமான 173 ஏக்கர் நன்செய் நிலங்களும், 28 ஏக்கர் புன்செய் நிலங்களும் குத்தகைக்கு விடப்பட்டு, அதன் மூலம் கிடைக்கப்பெறும் வருவாய் இத்திருக்கோயிலின் மேம்பாட்டிற்கு பயன்படுத்தப்படும்.

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், ஆயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்ட திருக்கோயில்களில் திருப்பணிகள் மேற்கொண்டு குடமுழுக்கு நடத்திட 2022-23 ஆம் நிதியாண்டு முதல் ஒவ்வொரு ஆண்டும் தலா ரூ. 100 கோடியை அரசு மானியமாக தந்து இதுவரை ரூ. 300 கோடி வழங்கியுள்ளார்.

இத்துடன் உபயதாரர் நிதி ரூ. 142 கோடியையும் சேர்த்து ஆயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்ட திருக்கோயில்களில் திருப்பணி நடைபெறுகின்றது, அதில் 35 திருக்கோயில்களில் பணி நிறைவுற்று குடமுழுக்கு நடைபெற்றுள்ளது.

“117 ஆண்டுகளுக்கு பிறகு குடமுழுக்கு! - அறநிலையத் துறையின் பொற்காலம் இது!” : அமைச்சர் சேகர்பாபு பெருமிதம்!

இந்த அரசு பொறுப்பேற்றபின், கன்னியாகுமரி மாவட்டம், திருவட்டாறு அருள்மிகு ஆதிகேசவப் பெருமாள் திருக்கோயிலுக்கு 400 ஆண்டுகளுக்கு பிறகும், காஞ்சிபுரம் மாவட்டம், சாத்தனஞ்சேரி, அருள்மிகு கரியமாணிக்க வரதராஜ பெருமாள் திருக்கோயிலுக்கு சுமார் 300 ஆண்டுகளுக்கு பிறகும், திருநெல்வேலி மாவட்டம், அரிகேசவநல்லூர், அருள்மிகு பெரியநாயகி சமேத அரியநாத சுவாமி திருக்கோயிலுக்கு 123 ஆண்டுகளுக்கு பிறகும், 16 திருக்கோயில்களுக்கு 100 ஆண்டுகளுக்கு பிறகும், 60 திருக்கோயில்களுக்கு 100 ஆண்டுகள் முதல் 50 ஆண்டுகளுக்கு பிறகும் குடமுழுக்கு நடத்தப்பட்டுள்ளது.

இன்று நடைபெறும் 55 திருக்கோயில்களின் குடமுழுக்குடன் சேர்த்து இதுவரை 2,098 திருக்கோயில்களுக்கு நடத்தப்பட்டுள்ளது.

முதலமைச்சர் தலைமையிலான ஆட்சிப் பொறுப்பேற்ற பின் 805 திருக்கோயில்களுக்குச் சொந்தமான ரூ.6,703 கோடி மதிப்புள்ள 6,853 ஏக்கர் சொத்துக்கள் ஆக்கிரமிப்பிலிருந்து மீட்கப்பட்டுள்ளன.

1,72,376.95 ஏக்கர் நிலங்கள் அளவீடு செய்யப்பட்டு திருக்கோயில் சொத்துக்கள் பாதுகாக்கப்பட்டுள்ளன. மேலும், ரூ.92.23 கோடி மதிப்பீட்டில் 47 புதிய இராஜகோபுரங்கள் கட்டும் பணிகளும், ரூ.59 கோடி மதிப்பீட்டில் 97 புதிய மரத்தேர்கள், ரூ.11.92 கோடி மதிப்பீட்டில் 53 தேர்கள் மராமத்துப் பணிகளும், ரூ.28.44 கோடி மதிப்பீட்டில் 172 திருத்தேர் கொட்டகைகள் அமைக்கும் பணிகளும் நடைபெற்று வருகின்றன.

குறிப்பாக, இந்த ஆட்சி ஏற்பட்ட பிறகு ரூ.29 கோடி மதிப்பீட்டில் 5 புதிய தங்கத்தேர்களும், ரூ.27.16 கோடி மதிப்பீட்டில் 9 புதிய வெள்ளித்தேர்களும் உருவாக்கும் பணி தொடங்கப்பட்டு, அதில் திருத்தணி வெள்ளித்தேர் பணி முடிவுற்று பக்தர்கள் பயன்பாட்டிலும், பெரியபாளையம் தங்கத்தேர் பணி நிறைவு பெறும் நிலையிலும் உள்ளது.

ரூ.3.07 கோடி மதிப்பீட்டில் 4 புதிய திருக்குளங்கள்,ரூ.120.33 கோடி மதிப்பீட்டில் 220 திருக்குளங்கள் சீரமைக்கும் பணிகளும், ரூ.301.67 கோடி மதிப்பீட்டில் 85 புதிய திருமண மண்டபங்கள், ரூ.86.97 கோடி மதிப்பீட்டில் 121 புதிய அன்னதானக் கூடங்கள், ரூ.187.05 கோடி மதிப்பீட்டில் 28 புதிய பக்தர்கள் தங்கும் விடுதிகள், ரூ.136.66 கோடி மதிப்பீட்டில் 89 குடியிருப்புகள் கட்டும் பணிகளும், பெருந்திட்ட வரைவின் (Master Plan) கீழ், ரூ.1,530.96 கோடி மதிப்பீட்டில் 19 திருக்கோயில்களில் பக்தர்களுக்கான அடிப்படை வசதிகள் மேம்படுத்தும் பணிகளும் நடைபெற்று வருகின்றன.

“117 ஆண்டுகளுக்கு பிறகு குடமுழுக்கு! - அறநிலையத் துறையின் பொற்காலம் இது!” : அமைச்சர் சேகர்பாபு பெருமிதம்!

மலைத் திருக்கோயில்களுக்கு பக்தர்கள், மூத்த குடிமக்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகள் சிரமமின்றி தரிசனம் மேற்கொள்ளும் வகையில் ரூ.20.30 கோடி செலவில் சோளிங்கரிலும், ரூ.9.10 கோடி செலவில் அய்யர்மலை திருக்கோயிலிலும் கம்பிவட ஊர்தி (Rope Car) அமைக்கப்பட்டு பக்தர்கள் பயன்பாட்டில் உள்ளன.

ரூ.26 கோடி மதிப்பீட்டில் திருநீர்மலை மற்றும் திருப்பரங்குன்றம் ஆகிய திருக்கோயில்களுக்கு கம்பிவட ஊர்தி அமைக்க நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதோடு, பழனி – இடும்பன்மலை, அனுவாவி, திருக்கழுகுன்றம் ஆகிய திருக்கோயில்களுக்கு கம்பிவட ஊர்திகள் அமைக்கும் பணிக்கு தேவையான தொடர் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. மேலும், ரூ.3.55 கோடி மதிப்பீட்டில் சுவாமிமலை திருக்கோயிலுக்கும், ரூ.5.20 கோடி மதிப்பீட்டில் மருதமலை திருக்கோயிலுக்கும் மின்தூக்கிகள் அமைக்கப்பட்டுள்ளன.

முதலமைச்சர் தலைமையிலான அரசு பொறுப்பேற்றபின், இந்து சமய அறநிலையத்துறையில் ரூ.5,372.72 கோடி மதிப்பீட்டில் 20,252 பணிகள் நடைபெற்று வருகின்றன. மாநில வல்லுநர் குழுவால் 9,961 திருக்கோயில்களில் திருப்பணிகள் மேற்கொள்ள அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

கிராமப்புற திருக்கோயில்கள் மற்றும் ஆதிதிராவிடர்கள் பழங்குடியினர் வசிக்கின்ற பகுதியில் இருக்கின்ற திருக்கோயில்களுக்கு திருப்பணிகள் மேற்கொள்ள ஆண்டுதோறும் தலா 1,000 என்ற எண்ணிக்கை 1,250 ஆகவும், நிதியுதவி தலா ரூ.1 லட்சம் என்பது ரூ.2 லட்சமாக உயர்த்தப்பட்டு இதுவரை 3,750 கிராமப்புற திருக்கோயில்களுக்கும் 3,750 ஆதிதிராவிடர்கள் பழங்குடியினர் வசிக்கின்ற பகுதியில் இருக்கின்ற திருக்கோயில்களுக்கு ரூ. 150 கோடி திருப்பணி நிதியுதவியாக வழங்கப்பட்டுள்ளது.

இந்த ஆண்டு முதல் இந்நிதியுதவி ரூ. 2.50 இலட்சமாக உயர்த்தி வழங்கப்பட உள்ளது. இந்த திருப்பணிகள் நடைபெறுவதை அலுவர்கள் மற்றும் பொறியாளர்களால் தொடர்ந்து ஆய்வு செய்யப்பட்டு பணிகள் விரைவுபடுத்தப்படும்.

திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் ரூ. 200 கோடி மதிப்பீட்டில் எச். சி.எல். நிறுவனத்தின் மூலம் நடைபெற்று வரும் திருப்பணிகளுக்கு இந்து சமய அறநிலையத்துறை எவ்வித இடையூறும், தடைகளும் விதிக்கவில்லை என்பதனை உறுதியாக தெரிவித்துக் கொண்டு, அந்த நிறுவனத்தினர் வருகின்ற 07.07.2025க்குள் பணிகளை முடித்து தருவதாக கூறியுள்ளனர். அவர்களுக்கு எல்லா வகையிலும் உறுதுணையாக இருப்போம்” என்று தெரிவித்தார்.

banner

Related Stories

Related Stories