தமிழ்நாடு

குளிர்பானம் குடித்து சிறுமி இறந்த விவகாரம் : தவறு இருந்தால் நிச்சயம் நடவடிக்கை - அமைச்சர் மா.சு. உறுதி !

குளிர்பானத்தில் நச்சுத்தன்மையை இருப்பது கண்டுபிடிக்கப்பட்டால் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று திருவண்ணாமலையில் குளிர்பானம் குடித்து குழந்தை இறந்த விவகாரத்தில் அமைச்சர் மா.சு. உறுதி

குளிர்பானம் குடித்து சிறுமி இறந்த விவகாரம் : தவறு இருந்தால் நிச்சயம் நடவடிக்கை - அமைச்சர் மா.சு. உறுதி !
  • Twitter
  • Facebook
  • WhatsApp
KL Reshma
Updated on

உலக வங்கிக் குழுவுடன் தமிழ்நாடு சுகாதார சீரமைப்பு திட்டம் இணைந்து நடத்தும் தொற்று அல்லாத நோய்கள் மற்றும் அவசர சிகிச்சையின் பராமரிப்பு மற்றும் மேலாண்மையின் தரத்தை சீர்திருத்தம் பற்றிய அறிவு பரிமாற்ற தொடர்பான மாநாடு சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள தனியார் நட்சத்திர விடுதியில் நடைபெற்றது. அதன் நிறைவு விழாவில் தமிழ்நாடு மக்கள் நல்வாழ்வு அமைச்சர் மா.சுப்பிரமணியன், மக்கள் நல்வாழ்வுத்துறை செயலாளர் சுப்ரியா சாக உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

இதைத்தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் மா சுப்பிரமணியன், “பல்வேறு மிக முக்கியமான இலக்குகளை முன்வைத்து தமிழக அரசும் உலக வங்கியும் ஒன்றிணைந்து ஒரு சுகாதார சீரமைப்பு திட்டத்தை தொடர்ந்து செயல்படுத்தி வருகிறது. திட்டத்திற்கான ஒட்டுமொத்த மதிப்பீடு 2854.74 கோடி இந்த திட்டத்திற்காக உலக வங்கியில் பங்களிப்பு என்பது 1998.32 கோடியே 70% ஆகும் தமிழ்நாடு அரசின் பங்களிப்பு 856.40 கோடி 30 சதவீதம் கடந்த ஐந்து ஆண்டுகளாக 2019 தொடங்கி 2024 வரை இந்த திட்டம் என்பது செயல்பட்டு வந்தது தமிழ்நாடு அரசு ஐக்கிய நாடுகளில் நீடித்த நிலையான வளர்ச்சி இலக்கான எஸ் டி ஜி 3 அதாவது அனைவருக்கும் அனைத்து வாய்ந்திருக்கும் ஆரோக்கியம் மற்றும் நலம் என்கிற குறிக்கோளை அடைவதற்கு இந்த நிதி மூலம் பல்வேறு திட்டங்கள் தமிழகத்தில் செயல்படுத்தப்பட்டு வந்தது.

குளிர்பானம் குடித்து சிறுமி இறந்த விவகாரம் : தவறு இருந்தால் நிச்சயம் நடவடிக்கை - அமைச்சர் மா.சு. உறுதி !

அந்த வகையில் தர மேம்பாடு தொற்றா நோய்கள் விபத்து மற்றும் அவசர சிகிச்சை தாய் நலம் சுகாதார பேரவை என்று பல்வேறு சிறப்பு கூறிய தொடர்ந்து செயல்படுத்தப்பட்டு தமிழகம் இந்தியாவுக்கு மட்டுமல்ல ஒட்டுமொத்த உலகுக்கு முன்மாதிரியான மாநிலமாக விளங்கிக் கொண்டிருக்கிறது. மக்களை தேடி மருத்துவம் ,இன்னுயிர் காப்போம் ,நம் உயிர் காப்போம் 48 ,கலைஞரின் வருமுன் காப்போம் ,இதயம் காப்போம் ,பாதம் காப்போம் ,மக்களை தேடி மருத்துவ ஆய்வகத் திட்டம், தொழிலாளர்களை தேடி மருத்துவ திட்டம் பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

இன்று தமிழ்நாட்டில் செயல்படுத்தப்படுகிற திட்டங்கள் குறித்தான விளக்கங்கள் இந்தியாவின் 12 மாநிலங்களில் இருந்தும் தாய்லாந்து மற்றும் இலங்கை போன்ற வெளிநாடுகளில் இருந்தும் பிரதிநிதிகள் பங்கேற்ற ஒரு சிறப்பான நிகழ்வு இங்கு நடைபெற்றது தமிழ்நாட்டில் செயல்படுத்துகிற அதன் மூலம் கிடைக்கப்பெற்றுள்ள வெற்றி பெற்ற நோய்களினால் ஏற்படுகிற மாற்றங்கள் குறித்த விஷயங்கள் காலையில் இருந்து விவாதிக்கப்பட்டது.

இந்த குழுவினர் நாளை தமிழ்நாட்டில் முகாமிட்டு பல்வேறு மருத்துவ கட்டமைப்புகளை நேரடியாக போய் பார்க்க உள்ளனர். குறிப்பாக ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனை மேடவாக்கத்தில் செயல்படுத்தப்படுகின்ற ஆரம்ப சுகாதார நிலையங்கள் நேரடியாக ஆய்வு செய்து தமிழ்நாட்டில் செயல்படுத்துகிற திட்டங்கள் குறித்து நேரடியாக அறிந்துகொள்ள உள்ளனர்.” என்றார்.

குளிர்பானம் குடித்து சிறுமி இறந்த விவகாரம் : தவறு இருந்தால் நிச்சயம் நடவடிக்கை - அமைச்சர் மா.சு. உறுதி !

தொடர்ந்து திருவண்ணாமலை செய்யாறில் பத்து ரூபாய் குளிர்பானம் குடித்து உயிரிழந்த செய்தி குறித்த கேள்விக்கு, “உணவு பாதுகாப்பு அலுவலர்கள் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறார்கள். யாருக்கும் தெரியாமல் அங்கு ஒன்று இங்கு ஒன்றுமாக யாரும் தெரியாமல் விலை குறைந்த குளிர்பனங்களாக இருந்தாலும் உணவுப் பொருட்களாக இருந்தாலும் அவ்வப்போது கண்டுபிடித்து நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

அந்த வகையில் திருவண்ணாமலை நடந்த சம்பவம் குறித்து அறிந்து திருவண்ணாமலை டிஓவிடம் சொல்லி இருக்கிறோம். அது போல உணவுப் பொருட்களாக இருந்தாலும் குளிர்பானமாக இருந்தாலும் அதில் ஒரு மாதிரியா எடுத்து பகுப்பாய்வு செய்யும் நிலையம் வாகனம் ஒவ்வொரு மாவட்டத்திலும் செயல்பட்டு வருகிறது.

அந்த குளிர்பான மாதிரி எடுத்து ஆய்வு செய்து தர கட்டுப்பாடு இல்லாமல் இருப்பது உறுதி செய்யப்பட்டால் நச்சுத்தன்மை உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டால் உரிய நடவடிக்கை எடுக்கப்படும்” என்றார்.

திருவண்ணாமலை, செய்யாறு அருகே பெட்டிக்கடையில் ரூ.10 குளிர்பானம் வாங்கி குடித்த பிறகு காவியாஸ்ரீ என்ற சிறுமி நேற்றைய முன்தினம் உயிரிழந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

banner

Related Stories

Related Stories