தமிழ்நாடு

MBC இட ஒதுக்கீட்டில் பெருமளவில் பயன்பெறும் வன்னியர்கள்... RTI மூலம் வெளிவந்த தகவல் !

MBC இட ஒதுக்கீட்டில் பெருமளவில் பயன்பெறும் வன்னியர்கள்... RTI மூலம் வெளிவந்த தகவல் !
  • Twitter
  • Facebook
  • WhatsApp
KL Reshma
Updated on

தமிழ்நாட்டில் தற்போது 69% இட ஒதுக்கீடு நடைமுறையில் இருந்து வருகிறது. இதில் 20% MBC சமூகத்துக்கு இட ஒதுக்கீடு உள்ளது. இந்த சூழலில் இந்த 20 சதவீதத்தில் பெரும்பாலும் வன்னியர் சமூகத்தினரே பயனடைவதாக தகவல் அறியும் உரிமை சட்டத்தின் வாயிலாக தெரியவந்துள்ளது. 20% சதவீத MBC ஒதுக்கீட்டில் அதிகளவு வன்னிய சமூக மக்கள் அரசுப் பணிகள் மற்றும் கல்விச் சேர்க்கையில் பயன்பெற்று வருகின்றனர்.

பொன்பாண்டியன் என்பவர் தகவல் அறியும் உரிமை சட்டத்தின் மூலம் இதனை வெளிக்கொண்டு வந்துள்ளார். அதன்படி வன்னிய சமூக மக்களே MBC இட ஒதுக்கீட்டில் பெரும்பாலும் பயன்பெற்று வருவது தெரியவந்துள்ளது.

MBC இட ஒதுக்கீட்டில் பெருமளவில் பயன்பெறும் வன்னியர்கள்... RTI மூலம் வெளிவந்த தகவல் !

அதாவது, கடந்த 10 ஆண்டுகளில், மொத்தமுள்ள 20% சதவீத MBC இட ஒதுக்கீட்டில்,

* MBBS மாணவர் சேர்கையில் 11.4% வன்னியர் சமூக மாணவர்களும்,

* மருத்துவத்துறை மேற்படிப்புகளில் 10.2% வன்னியர் சமூகத்தைச் சார்ந்த மாணவர்களும்,

* BDS பல் மருத்துவ படிப்புகளுக்கான மாணவர் சேர்கையில் 9.4% வன்னியர் சமூக மாணவர்களும்

* MDS பல் மருத்துவ படிப்புகளுக்கான மாணவர் சேர்கையில் 9.6% வன்னியர் சமூக மாணவர்களும்

* கால்நடை அறிவியல் படிப்பில் 13% வன்னியர் சமூக மாணவர்களும்,

* ஆயுர்வேத மற்றும் ஹோமியோபதி மருத்துவ படிப்புகளுக்கான மாணவர் சேர்கையில் 7.6% வன்னியர் சமூக மாணவர்களும் சேர்ந்து கல்வி பயின்றுள்ளனர்

* தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வு வாரியம் (TNUSRB) மூலம் சார் ஆய்வாளர் பணியிடங்களில் 17% வன்னியர் சமூகத்தைச் சேர்ந்தவர்கள் பணி கிடைக்கப் பெற்றுள்ளனர்

* மருத்துவப் பணிகள் தேர்வு வாரியத்தின் (MRB) மூலம் உதவி மருத்துவர் பணியிடங்களில் 10.8% வன்னியர் சமூகத்தைச் சேர்ந்தவர்கள் பணி கிடைக்கப் பெற்றுள்ளனர்

* வனச் சீருடை பணியாளர் தேர்வுக் குழு மூலமாக 11.8% வன்னியர் சமூகத்தைச் சேர்ந்தவர்கள் பணி கிடைக்கப் பெற்றுள்ளனர்

MBC இட ஒதுக்கீட்டில் பெருமளவில் பயன்பெறும் வன்னியர்கள்... RTI மூலம் வெளிவந்த தகவல் !

* TNPSC குரூப்-1 பணியிடங்களில் 11.6%,

* TNPSC குரூப்-2 மற்றும் 2A பணியிடங்களில் 11.2%,

* TNPSC குரூப்-3 பணியிடங்களில் 11.4%,

* TNPSC குரூப்-4 பணியிடங்களில் 19.5% வன்னியர் சமூகத்தைச் சேர்ந்தவர்கள் பணி கிடைக்கப் பெற்றுள்ளனர்

* TNPSC ஒருங்கிணைந்த பொறியாளர் பணிகளுக்கான தேர்வில் 10.2% வன்னியர் சமூகத்தைச் சேர்ந்தவர்கள் பணி கிடைக்கப் பெற்றுள்ளனர்

* TNPSC சிவில் நீதிபதிகளுக்கான தேர்வில் 9.9% வன்னியர் சமூகத்தைச் சேர்ந்தவர்கள் பணி கிடைக்கப் பெற்றுள்ளனர்

* ஆசிரியர் தேர்வு வாரியத்தின் மூலம் 2021-ம் ஆண்டு நடத்தப்பட்ட தேர்வில் 10.8% வன்னியர் சமூகத்தைச் சேர்ந்தவர்கள் தேர்ச்சி பெற்றுப் பணி கிடைக்கப் பெற்றுள்ளனர்

* அரசு சட்டக் கல்லூரி படிப்புகளுக்கான மாணவர் சேர்கையில் 8.3% வன்னியர் சமூக மாணவர்களும்,

* டாக்டர் அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழக மாணவர் சேர்கையில் 10.3% வன்னியர் சமூக மாணவர்களும் சேர்ந்து கல்வி பயின்றுள்ளனர்

banner

Related Stories

Related Stories