தமிழ்நாடு

பெண் தொண்டரிடம் ரூ.2.5 லட்சம் மோசடி : பாஜக மாவட்டச் செயலாளர் மீது பரபரப்பு புகார்!

பெண் தொண்டரிடம் பா.ஜ.க மாவட்டச் செயலாளர் பண மோசடியில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பெண் தொண்டரிடம் ரூ.2.5 லட்சம் மோசடி : பாஜக மாவட்டச் செயலாளர் மீது பரபரப்பு புகார்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

சென்னை தண்டையார்பேட்டை நேதாஜி நகர் பகுதியைச் சேர்ந்தவர் நவமணி. இவர் பா.ஜ.க கட்சியில் உறுப்பினராக இருக்கிறார்.இவரிடம் கடந்த 2022 ஆம் ஆண்டு, பா.ஜ.க வட சென்னை மாவட்ட செயலாளர் செந்தில் என்பவர்,ரயில் நிலைய நடைமேடையில் கடை வைக்க ஏற்பாடு செய்து தருவதாக கூறி ரூ.2.5 லட்சம் பணம் கொடுத்துள்ளார்.

மேலும் இந்த பணத்தை நவமணி வட்டிக்கு வங்கி கொடுத்துள்ளார். ஆனால் சொன்னபடி கடைவைக்க செந்தில் ஏற்பாடு செய்யவில்லை. இதனால் வட்டி கட்ட முடியாமல் நவமணி திணறியுள்ளார்.

இதனால் கொடுத்த பணத்தை செந்திலிடம் திரும்ப கேட்டுள்ளார். அப்போது பணத்தை திருப்பி தர முடியாது என ஆணவமாக கூறியுள்ளார். பின்னர் இது குறித்து காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளர்.

இதனால் ஆத்திரமடைந்த செந்தில், பா.ஜ.க வக்கீல்களை வைத்து நவமணியை மிரட்டி உள்ளார்.இந்நிலையில் வட்டி பணம் கட்ட முடியாத நிலையில் நவமணி தூக்க மாத்திரைகள் உட்கொண்டு தற்கொலைக்கு முயற்சி செய்துள்ளார்.

இதைப்பார்த்த வீட்டில் இருந்தவர்கள் அவரை மீட்டு அரசு ஸ்டான்லி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ள நிலையில் நவமணிக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.இந்த சம்பத்தை குறித்து நவமணி கணவர் கூறுகையில்தன் மனைவி தற்கொலை முயற்சி செய்ததற்கு பாஜக மாவட்ட செயளாலர் செந்தில் தான் காரணம் என தெரிவித்துள்ளார்.

banner

Related Stories

Related Stories