தமிழ்நாடு

கள்ளக்குறிச்சி விவகாரம் : 3 பேர் மீது கொலை வழக்கு பதிவு செய்த காவல்துறை !

கள்ளக்குறிச்சி விவகாரத்தில் சாராயத்தில் மெத்தனால் கலந்தவர்கள் என்ற அடிப்படையில் மூன்று பேர் மீது கொலை வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

கள்ளக்குறிச்சி விவகாரம் : 3 பேர் மீது கொலை வழக்கு பதிவு செய்த காவல்துறை !
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Praveen
Updated on

கள்ளக்குறிச்சி மாவட்டம் கருணாபுரம் காலனியில் மெத்தனால் கலந்த சாராயம் அருந்தியவர்கள் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், சிலர் உயிரிழந்துள்ளனர். மீதமுள்ளவர்களுக்கு தொடர்ந்து மருத்துவமனைகளில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இந்த விவகாரத்தில் தீவிர விசாரணை மேற்கொண்டு, குறிப்பாக விஷச்சாராயம் தயாரிக்க மெத்தனாலை வழங்கியவர்களையும் கண்டறிந்து, அவர்கள் மீதும் மிகக் கடுமையான நடவடிக்கை எடுக்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.

மேலும் இஇந்த விவகாரத்தில் சம்பந்தப்பட்ட காவல் துறை அலுவலர்கள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதோடு, மாவட்ட ஆட்சித் தலைவரும் பணியிட மாறுதல் செய்யப்பட்டுள்ளார்.தொடர்ந்து இது குறித்துத் தீர விசாரிக்கவும், உரிய மேல்நடவடிக்கை எடுக்கும் பொருட்டும், இவ்வழக்கு CBCID வசம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

கள்ளக்குறிச்சி விவகாரம் : 3 பேர் மீது கொலை வழக்கு பதிவு செய்த காவல்துறை !

இந்த விவகாரம் குறித்து போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வரும் நிலையில், உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நிவாரணத் தொகையை அறிவித்துள்ளார். இந்த விவகாரத்தில் இதுவரை 8 பேர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், அதில் 3 பேர் மீது கொலை வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

சாராயத்தில் மெத்தனால் கலந்தவர்கள் என்ற அடிப்படையில் ராமர், சின்னதுரை, ஜோசப் ராஜா ஆகிய மூன்று பேர் மீது கொலை வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த விவகாரத்தில் தீவிர நடவடிக்கை எடுக்க முதலமைச்சர் உத்தரவிட்டுள்ள நிலையில், இதில் சம்மந்தப்பட்டுள்ள பலரும் விரைவில் கைது செய்யப்படுவர் என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.

banner

Related Stories

Related Stories