விளையாட்டு

இந்திய அணியில் அஸ்வினை போன்று வேறு யாரும் இப்படி மோசமாக நடத்தப்பட்டிருக்க மாட்டார்கள் -கவாஸ்கர் காட்டம் !

சமீப காலத்தில் அஸ்வினை போன்று வேறு எந்த வீரரும் இந்திய அணியில் இப்படி நடத்தப்பட்டு இருக்க மாட்டார்கள் என கவாஸ்கர் அணி நிர்வாகத்தை காட்டமாக விமர்சித்துள்ளார்.

இந்திய அணியில் அஸ்வினை போன்று வேறு யாரும் இப்படி மோசமாக நடத்தப்பட்டிருக்க மாட்டார்கள் -கவாஸ்கர் காட்டம் !
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Praveen
Updated on

டி20, டி10 என கிரிக்கெட் நினைத்து பார்க்க முடியாத அளவுக்கு பரிணாமம் அடைந்திருக்கிறது. ஆனால், இதற்கெல்லாம் ஆரம்பப்புள்ளி டெஸ்ட் போட்டிகள்தான். கிரிக்கெட்டின் 'ஆன்மா' குலையாமல் காத்து வருபவை டெஸ்ட் போட்டிகள் மட்டுமே. அப்பேற்பட்ட டெஸ்ட் போட்டிகளுக்கென உருவாக்கப்பட்ட 'உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்' ன் இறுதிப்போட்டிக்கு இரண்டாவது முறையாக இந்திய அணி முன்னேறியது.

கடந்த முறை முதல்முறை கடந்த முறை இறுதிப்போட்டியில் நியூஸிலாந்து அணியிடம் தோல்வியடைந்து சாம்பியன் பட்டத்தை இழந்த இந்திய அணி இந்த முறையும் இறுதிப்போட்டிக்கு முன்னேறியதால் இம்முறை இந்திய அணி கோப்பையை வெல்லும் என இந்திய ரசிகர்கள் பெரும் ஆவலோடு காத்திருந்தனர்.

இந்திய அணியில் அஸ்வினை போன்று வேறு யாரும் இப்படி மோசமாக நடத்தப்பட்டிருக்க மாட்டார்கள் -கவாஸ்கர் காட்டம் !

ஆனால் இந்திய ரசிகர்களின் இந்த ஆசைக்கு ஆஸ்திரேலிய அணியின் அபார ஆட்டம் முடிவு கட்டியுள்ளது. முதல் இன்னிங்சில் ஆஸ்திரேலிய அணி 469 ரன்கள் குவிக்க இந்திய அணியோ 296 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. அப்போதே இந்திய அணியின் வெற்றிவாய்ப்பு 50% முடிவுக்கு வந்தது. அதே போல இரண்டாவது இன்னிங்சிலும் ஆஸ்திரேலிய அணி 270 ரன்களுக்கு டிக்ளர் செய்ய இந்திய அணிக்கு 444 ரன்கள் இலக்காக நிர்ணயம் செய்யப்பட்டது.

ஆனால், ஆரம்பத்தில் அபாரமாக தொடங்கிய இந்திய அணி பின்னர் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து 234 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 209 ரன்கள் வித்தியாசத்தில் மோசமான தோல்வியை சந்தித்துள்ளது. இதன் மூலம் இந்திய அணியின் ஐசிசி கோப்பை கனவு 10 ஆண்டுகளுக்கு கானல் நீராகவே நீடிக்கிறது. இந்த போட்டியில் இந்தியாவின் தோல்விக்கு உலகின் நம்பர் 1 பந்துவீச்சாளரான அஸ்வினை அணியில் சேர்க்காதது முக்கிய காரணமாக பார்க்கப்பட்டது. சச்சின் உள்ளிட்ட பல்வேறு முன்னாள் கிரிக்கெட் வீரர்களும் இதனை குறிப்பிட்டு இந்திய அணியை விமர்சித்தனர்.

இந்திய அணியில் அஸ்வினை போன்று வேறு யாரும் இப்படி மோசமாக நடத்தப்பட்டிருக்க மாட்டார்கள் -கவாஸ்கர் காட்டம் !

இந்த நிலையில், சமீப காலத்தில் அஸ்வினை போன்று வேறு எந்த வீரரும் இந்திய அணியில் இப்படி நடத்தப்பட்டு இருக்க மாட்டார்கள் என கவாஸ்கர் அணி நிர்வாகத்தை காட்டமாக விமர்சித்துள்ளார். இது குறித்து பேசிய அவர், "அணியில் ஒரூ நம்பர் 1 பேட்ஸ்மேன் இருந்தால், அவரால் சுழற்பந்துக்கு சாதகமான பிட்ச்சில் ஆட முடியாது, புல் அதிகம் இருக்கும் பிட்ச்சில் ஆட முடியாது என்றெல்லாம் காரணம் கூறி, அவரை ஆடும் 11-ல் சேர்க்காமல் இருப்பார்களா? பேட்டிங் லைனப் கூட மாறாமல் வழக்கமான இடத்தில் அவர் ஆடியிருப்பார்.

ஆனால் இதே காரணத்தை கூறி நம்பர் 1 பந்துவீச்சாளர் அஸ்வினை வெளியே அமர்த்தி இருக்கிறார்கள். இங்கிலாந்து போன்ற மைதானங்களில் அஸ்வின் சேர்க்கப்பட்டிருந்தால், அவர் இந்நேரம் 100 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியிருப்பார். அவரை இந்திய அணியில் அடிக்கடி டிராப் செய்து ரவி சாஸ்திரி, விராட் கோலி தற்பொழுது ரோஹித் ஷர்மா, ராகுல் டிராவிட் என அனைவரும் தவறு செய்து வருகின்றனர்.இந்திய அணியில் அஸ்வினை போன்று வேறு எந்த வீரரும் இப்படி நடத்தப்பட்டு இருக்க மாட்டார்கள். அந்த அளவிற்கு அஸ்வினை அவர்கள் நடத்தியுள்ளனர்" என்று காட்டமாக விமர்சித்துள்ளார்.

banner

Related Stories

Related Stories