அரசியல்

வயநாட்டுக்கு இடைத்தேர்தல் எப்போது : தேர்தல் ஆணையம் அறிவிப்பு... காங்கிரஸ் அறிவித்த வேட்பாளர் யார் ?

வயநாட்டுக்கு இடைத்தேர்தல் எப்போது : தேர்தல் ஆணையம் அறிவிப்பு... காங்கிரஸ் அறிவித்த வேட்பாளர் யார் ?
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Praveen
Updated on

கடந்த 2019-ம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலில் அமேதி மற்றும் வயநாடு தொகுதிகளில் ராகுல்காந்தி போட்டியிட்டார். இதில் அமேதியில் பின்னடைவை சந்தித்திருந்தாலும், வயநாடு தொகுதியில் 4.31 லட்சம் வாக்கு வித்தியாசத்தில் ராகுல் காந்தி அமோக வெற்றியை பெற்றிருந்தார்.

அதனைத் தொடர்ந்து தற்போது நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தலிலும் ராகுல் காந்தி ரேபரேலி மற்றும் வயநாடு தொகுதிகளில் போட்டியிட்டார். இதில் இரண்டு தொகுதிகளிலும் லட்சக்கணக்கான வாக்குகள் வித்தியாசத்தில் ராகுல் காந்தி அபார வெற்றி பெற்றார்.

வயநாட்டுக்கு இடைத்தேர்தல் எப்போது : தேர்தல் ஆணையம் அறிவிப்பு... காங்கிரஸ் அறிவித்த வேட்பாளர் யார் ?

அதனைத் தொடர்ந்து இதில் எந்த தொகுதியின் எம்.பி பதவியை ராகுல் காந்தி ராஜினாமா செய்வார் என்ற கேள்வி எழுந்த நிலையில், "ராகுல் காந்தி வயநாடு எம்.பி பதவியை ராஜினாமா செய்வார். காலியாகும் அந்த தொகுதியில் காங்கிரஸ் சார்பில் பிரியங்கா காந்தி போட்டியிடுவார்" என்று காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே அறிவித்தார்.

எனினும் வயநாடு இடைத்தேர்தல் எப்போது நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் அறிவிக்காத நிலையில், தற்போது வயநாடு இடைத்தேர்தல் நவம்பர் 13-ம் தேதி நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. மேலும் நாடு முழுவதும் காலியாகவுள்ள 48 சட்டமன்ற தொகுதிகளுக்கும், இரு நாடாளுமன்ற தொகுதிக்கும் நவம்பர் 13-ல் இடைத்தேர்தல் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த தேர்தலில் பதிவான வாக்குகள் 23-ம் தேதி அறிவிக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

banner

Related Stories

Related Stories