அரசியல்

பிரதமரும், உள்துறை அமைச்சரும் மிகவும் ஆபத்தானவர்கள்! : பிரியங்கா காந்தி கண்டனம்!

பா.ஜ.க.வின் மூத்த தலைவர் தர்வீந்தர் சிங் என்பவர், பொது மேடையில், “ராகுல் காந்தியின் மூதாட்டிக்கு (முன்னாள் பிரதமர் இந்திரா காந்தி) நடந்தது தான், ராகுல் காந்திக்கும் நடக்கும்” என மிரட்டல்.

பிரதமரும், உள்துறை அமைச்சரும் மிகவும் ஆபத்தானவர்கள்! : பிரியங்கா காந்தி கண்டனம்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Chennamani
Updated on

ஆர்.எஸ்.எஸ் - பா.ஜ.க கருத்தியலை பின்பற்றுகிறவர்களுக்கு, கடவுள் மீதும் பயமில்லை, எவர் மீதும் பயமில்லை என்பது பா.ஜ.க ஆட்சியில் தெளிவடைந்துள்ளது.

கடவுள்களை தாழ்த்தி, மோடியை கடவுளாக்கும் பா.ஜ.க.வினர் தான், 140 கோடி மக்கள் வாழும் இந்தியாவின் எதிர்க்கட்சி தலைவருக்கே கொலை மிரட்டல் விடுபவர்களாகவும் இருக்கின்றனர்.

அவ்வகையில், கடந்த வாரம் டெல்லி பா.ஜ.க.வின் மூத்த தலைவர் தர்வீந்தர் சிங் என்பவர், பொது மேடையில், “ராகுல் காந்தியின் மூதாட்டிக்கு (முன்னாள் பிரதமர் இந்திரா காந்தி) நடந்தது தான், ராகுல் காந்திக்கும் நடக்கும்” என மிரட்டல் விடுத்த சம்பவம் அமைந்துள்ளது.

பிரதமரும், உள்துறை அமைச்சரும் மிகவும் ஆபத்தானவர்கள்! : பிரியங்கா காந்தி கண்டனம்!

இந்திரா காந்தி படுகொலை செய்யப்பட்டது போல, ராகுல் காந்தியும் கொல்லப்படுவார் என பா.ஜ.க மூத்த தலைவர் பொதுமேடையில் பேசுவதற்கு, பா.ஜ.க தலைமை அனுமதிப்பதோடு நிறுத்தாமல், அதனை ஊக்குவிக்கும் விதமாகவும் செயல்படுவது, தேசிய அளவில் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

இது குறித்து, காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி, “பட்டியலின, பிற்படுத்தப்பட்ட, பழங்குடி மற்றும் ஏழை மக்களுக்காக குரல் கொடுக்கும் எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்திக்கு எதிரான வன்முறை கருத்துகள் அதிகரித்து வருகின்றன. குறிப்பாக, பா.ஜ.க.வினர் விடுக்கிற மிரட்டல்கள், அக்கட்சி எவ்வளவு ஆபத்தானது என்பதையும், இந்த ஆபத்தான நடவடிக்கைகளை ஊக்குவிக்கும் பிரதமர், உள்துறை அமைச்சர் மற்றும் ஆர்.எஸ்.எஸ் - பா.ஜ.க தலைமை பொறுப்பாளர்கள், கட்சியை விட மிகவும் ஆபத்தானவர்கள் என்பதையும் உணர்த்துகிறது” என கண்டனம் தெரிவித்துள்ளார்.

banner

Related Stories

Related Stories