அரசியல்

நீட் கேள்வித்தாள் கசிவு: பழுதான டிஜிட்டல் பூட்டு வழியாக நடைபெற்ற மோசடி... விசாரணையில் அதிர்ச்சி தகவல்கள்!

ஜார்க்கண்ட் மாநில தேர்வு மையத்துக்கு அனுப்பப்பட்ட கேள்வித்தாள் பெட்டியின் டிஜிட்டல் பூட்டு பழுதான நிலையில் இருந்தது தற்போது தெரியவந்துள்ளது.

நீட் கேள்வித்தாள் கசிவு: பழுதான டிஜிட்டல் பூட்டு வழியாக நடைபெற்ற மோசடி... விசாரணையில் அதிர்ச்சி தகவல்கள்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Praveen
Updated on

நடப்பு ஆண்டில் நடைபெற்ற நீட் தேர்வில் இதுவரை இல்லாத அளவு மோசடி நிகழ்ந்துள்ளது. ஆள் மாறாட்டம், தேர்வு வினாத்தாள் கசிவு, கருணை மதிப்பெண் என பல வழிகளில் முறைகேடு நடந்துள்ளது. தொடர்ந்து நடந்து முடிந்த நீட் தேர்வை ரத்து செய்து மறு தேர்வு நடத்த வேண்டும் என்று பல்வேறு தரப்பில் இருந்து கோரிக்கைகள் வலுத்தது.

இது குறித்து தற்போது வரை 20 பேர் கைது செய்யப்பட்ட நிலையில், இந்த வழக்கில் முக்கிய குற்றவாளியான ரவி அத்ரி என்பவரும் கைது செய்யப்பட்டார். பின்னர் கைது செய்யப்பட்டவர்களிடம் நடைபெற்ற விசாரணையில் கேள்வித்தாள் ஜார்கண்ட் மாநிலத்தில் உள்ள ஒரு பள்ளியில் இருந்து கசிந்தது தெரியவந்துள்ளது.

தொடர்ந்து பிகார் மாநிலத்தில் எரிந்த நிலையில் கைப்பற்றப்பட்ட கேள்வித்தாள்களை தடைய அறிவியல் சோதனைக்கு உட்பட்டதில் 68 கேள்விகள் உண்மையான கேள்வித்தாளுடன் ஒத்துப் போவதாக பிஹார் போலீசார் கண்டறிந்துள்ளனர்.இந்தக் கேள்வித்தாளில் உள்ள வரிசை எண்களை சோதித்த போது ஜார்கண்ட் மாநிலத்தில் உள்ள ஒரு தேர்வு மையத்தின் எண் கிடைத்துள்ளது.

நீட் கேள்வித்தாள் கசிவு: பழுதான டிஜிட்டல் பூட்டு வழியாக நடைபெற்ற மோசடி... விசாரணையில் அதிர்ச்சி தகவல்கள்!

அதன் அடிப்படையில் ஜார்கண்ட் மாநிலம் சென்று பீகார் போலீசார் சோதனை நடத்தினர். அந்த தேர்வு மையத்துக்கு அனுப்பப்பட்ட கேள்வித்தாள் வைத்திருந்த பாக்கெட் பின்புறம் திறக்கப்பட்டு ஒட்டப்பட்டிருந்தது தெரிய வந்துள்ளது. இதன்மூலம் பீகார் மாநிலத்தில் கசிந்த கேள்வித்தாள் ஜார்கண்ட் மாநிலதேர்வு மையத்துக்கு அனுப்பப்பட்ட கேள்வித்தாள் நகல் என்பதை பீஹார் போலீசார் கண்டுபிடித்தனர்.

இந்த நிலையில், ஜார்க்கண்ட் மாநில தேர்வு மையத்துக்கு அனுப்பப்பட்ட கேள்வித்தாள் பெட்டியின் டிஜிட்டல் பூட்டு பழுதான நிலையில் இருந்தது தற்போது தெரியவந்துள்ளது. இது குறித்து வெளியான தகவலில், சம்பந்தப்பட்ட தேர்வு மைய்ய முதல்வர், தங்களுக்கு தரப்பட்ட கேள்வித்தாள் பெட்டியின் டிஜிட்டல் பூட்டு தேர்வுக்கு முன் 1.15 மணிக்கு தானாக திறக்க வேண்டும். அப்படி பூட்டு திறக்கவில்லை. இதனை தொடர்ந்து தேசிய தேர்வுமைய மாவட்ட கண்காணிப்பாளர் ஆலோசனைப்படி அலுமினியம் பெட்டியின் பூட்டை உடைத்து கேள்வித்தாள் எடுக்கப்பட்டுள்ளது.

இந்த தகவல்களை தொடன்ற்து அந்த கேள்வித்தாள் பெட்டிகள் இரண்டையும் கொண்டுசென்ற பிகார் போலீசார் அதனை தடைய அறிவியல் சோதனைக்கு உட்படுத்தியுள்ளனர். அதில் ஜார்கண்ட் தேர்வு மையத்துக்கான அனுப்பப்பட்ட இரண்டு அலுமினியம் பெட்டிகளுக்கும் வேறுபாடு இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. 7 அடுக்கு கொண்ட கேள்வித்தாள் வைத்திருந்த உறையின் கீழ்பகுதி கிழிக்கப்பட்டதும் உறுதியாகியுள்ளது. இதன் காரணமாக தேர்வு மையத்திற்கு கேள்வித்தாள் வருவதற்கு முன்பே திட்டமிட்டு கேள்வித்தாள் திருடப்பட்டிருக்கலாம் என்று போலீசார் சந்தேகம் தெரிவித்துள்ளனர். அதன் அடிப்படையில் விசாரணை தற்போது தொடர்ந்து வருகிறது.

banner

Related Stories

Related Stories