இந்தியா

தமிழ்நாட்டை பின்பற்றும் கர்நாடகா : நீட் தேர்வுக்கு எதிராக தீர்மானம் - அமைச்சரவை கூட்டத்தில் ஒப்புதல்!

தமிழ்நாட்டை தொடர்ந்து நீட் தேர்வுக்கு எதிராக கர்நாடக அமைச்சரவையிலும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

தமிழ்நாட்டை பின்பற்றும் கர்நாடகா : நீட் தேர்வுக்கு எதிராக தீர்மானம் - அமைச்சரவை கூட்டத்தில் ஒப்புதல்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

ஒன்றியத்தில் பா.ஜ.க ஆட்சிக்கு வந்தை அடுத்து மருத்துவம் மற்றும் பல்மருத்துவ படிப்புகளில் சேருவதற்காக தேசிய தகுதி மற்றும் நுழைவு தேர்வு (NEET) நடத்தப்பட்டு வருகிறது. நடப்பு கல்வியாண்டில் மாணவர் சேர்க்கைகாக நடத்தப்பட்ட தேர்தவில் பெரியளவில் முறைகேடு நடந்துள்ளது கண்டுப்பிடிக்கப்பட்டுள்ளது. இதில் பாதிக்கப்பட்ட மாணவர்கள் உச்சநீதிமன்றத்தில் தொடர்ந்துள்ள வழக்கு தலைமை நீதிபதி தலைமையிலான அமர்வில் நடந்து வருகிறது.

இதனிடையில் நீட் தேர்வு அறிமுகம் செய்த காலம் முதல் இத்தேர்வில் இருந்து தமிழ்நாட்டிற்கு விலக்கு அளிக்க வேண்டும் என்ற கோரிக்கையை ஒட்டு மொத்தமாக அரசுடன் இணைந்து அரசியல் கட்சிகள், கல்வியாளர்கள், தன்னார்வ தொண்டு அமைப்பினர் உள்பட பல தரப்பினரும் எதிர்த்து வருகிறார்கள். தற்போது நீட் தேர்வு முழுமையாக ரத்து செய்ய வேண்டும் என்ற குரலும் தமிழ்நாட்டில் இருந்து வருகிறது.

இந்நிலையில் நீட் தேர்வு முறைகேடு காரணமாக தற்போது விழித்து கொண்டுள்ள கேரளா, கர்நாடகா, மேற்குவங்கம் உள்ளிட்ட மாநிலங்களிலும் நீட் தேர்வுக்கு எதிராக குரல் எழுப்பி வருகிறது. தமிழ்நாட்டை போல், கர்நாடக மாநில அரசும் நீட் தேர்வுக்கு எதிரான தனது நிலைப்பாட்டை உறுதி செய்து வருகிறது. நீட் தேர்வு ஏழை குடும்பங்களை சேர்ந்த மாணவர்களின் மருத்துவ கல்வி கனவை சிதைத்து வருவதாக முதல்வர் சித்தராமையா வெளிப்படையாக கருத்து தெரிவித்து வருகிறார்.

இதை உறுதிப்படுத்தும் வகையில் தற்போது நடந்து வரும் சட்டப்பேரவை மழைக்கால கூட்டத்தொடரில் நீட் தேர்வுக்கு எதிரான தீர்மானம் கொண்டுவர முடிவு செய்யப்பட்டுள்ளது.

தமிழ்நாடு சட்டப்பேரவையில் கொண்டுவந்து நிறைவேற்றியது போல், நீட் தேர்வு ரத்து செய்ய வேண்டும், இரண்டாமாண்டு பியூசி தேர்வில் எடுத்த மதிப்பெண் அடிப்படையில் மாணவர் சேர்க்கை நடத்த வேண்டும் என்ற கருத்தை தீர்மானமாக கர்நாடக சட்டப்பேரவை மற்றும் மேலவையில் கொண்டுவந்து நிறைவேற்ற முடிவு செய்துள்ளது. சட்டப்பேரவையில் நிறைவேற்றப்படும் தீர்மானத்தை ஒன்றிய அரசுக்கு அனுப்பி வைக்க முடிவு செய்துள்ளது.

banner

Related Stories

Related Stories