இந்தியா

நீட் முதல் சட்டத் தேர்வு வரை... பாஜக அரசின் அலட்சியம்... கேள்விக்குறியாகும் தேர்வு நடைமுறைகள் !

நீட் முறைகேடுவை தொடர்ந்து தற்போது டெல்லி பல்கலை-யின் சட்ட தேர்வும் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

நீட் முதல் சட்டத் தேர்வு வரை... பாஜக அரசின் அலட்சியம்... கேள்விக்குறியாகும் தேர்வு நடைமுறைகள் !
  • Twitter
  • Facebook
  • WhatsApp
KL Reshma
Updated on

நடப்பாண்டில் நடைபெற்ற நீட் இளநிலை தேர்வில் மிகப்பெரிய மோசடி நடந்துள்ளது அம்பலமாகியுள்ளது. பல கோடி லஞ்சம் கொடுத்து வினாத்தாள்கள் பெற்றதும், வினாத்தாள் கசிந்தது, ஆள் மாறாட்டம், கருணை மதிப்பெண் வழங்குதல் என பல்வேறு முறைகேடுகளில் ஈடுபட்ட பெற்றோர், ஆசிரியர்கள், மாணவர்கள், அரசு அலுவலர்கள் என பலரும் கைது செய்யப்ட்டுள்ளனர்.

இந்த முறைகேடு விவகாரம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியதை தொடர்ந்து, பேராசிரியகர்களுக்கான NET தேர்வின் வினாத்தாள் கசிந்த விவகாரமும் வெளியே வந்தது. இதையடுத்து அந்த தேர்வு முடிந்த மறுநாளே தேர்வு ரத்து செய்யப்படுவதாக தேசிய தேர்வு முகமை அறிவித்தது. இந்த சம்பவத்தை தொடர்ந்து நீட் முதுநிலை தேர்வும் தேர்வுக்கு முந்தைய நாள் இரவு ஒத்திவைக்கப்பட்டது.

நீட் முதல் சட்டத் தேர்வு வரை... பாஜக அரசின் அலட்சியம்... கேள்விக்குறியாகும் தேர்வு நடைமுறைகள் !

தொடர்ந்து SET தேர்வும் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இப்படி தொடர்ந்து தேர்வுகள் ரத்து செய்யப்படுவதும், ஒத்திவைக்கப்படுவதும் அரங்கேறி வரும் நிலையில், பெரும் முறைகேடு நடந்த நீட் இளநிலை தேர்வு மட்டும் ரத்து செய்யப்படாது என்று ஒன்றிய கல்வித்துறை அமைச்சர் தெரிவித்துள்ளதற்கு கண்டனங்கள் எழுந்தது. மேலும் இந்த முறைகேடு விவகாரத்தில் அடுத்தடுத்து என பல தகவல்கள் வெளியாகி வந்த வண்ணமாக இருக்கிறது.

Prashant Bhushan
Prashant Bhushan

இந்த நிலையில் தற்போது இந்த தேர்வுகளை தொடர்ந்து சட்ட தேர்வையும் ஒத்தி வைத்துள்ளது டெல்லி பல்கலைக்கழகம். டெல்லி பல்கலை-யில் நடைபெறும் சட்டப்படிப்பு தொடர்பான 2, 4, 6 ஆகிய தேர்வுகளை ஒத்தி வைத்துள்ளது. இன்று (ஜூலை 4) நடைபெறுவதாக இருந்த அந்த தேர்வுகள், எந்த காரணமும் கூறாமல், ஒத்திவைக்கப்பட்டுள்ளது. மேலும் ஒத்திவைக்கப்பட்டுள்ள தேர்வு தேதி விரைவில் அறிவிக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிகழ்வுக்கு தற்போது கண்டனங்கள் குவிந்து வருகிறது. தேர்வு நடைமுறை குறித்த சந்தேகங்களும் எழுந்து வருகிறது. பலரும் இதுகுறித்து விமர்சித்து வருகின்றனர். அந்த வகையில் மூத்த வழக்கறிஞர் பிரசாந்த் பூஷன் தனது சமூக வலைதள பக்கத்தில், "இப்போது டெல்லி பல்கலைக்கழகமும் சட்டத் தேர்வுகளைக் கூட ஒத்தி வைத்துள்ளது. இந்தியாவில் தேர்வுக் நடைமுறை முற்றிலும் கட்டுப்பாடில்லாமல் போகிறது" என்று குறிப்பிட்டு விமர்சித்துள்ளார்.

banner

Related Stories

Related Stories