சினிமா

பாலியல் புகார் : “எந்த எல்லைக்கும் செல்வேன்” - மறுப்பு தெரிவித்த நிவின் பாலி - நடந்தது என்ன?

பாலியல் புகார் : “எந்த எல்லைக்கும் செல்வேன்” - மறுப்பு தெரிவித்த நிவின் பாலி - நடந்தது என்ன?
  • Twitter
  • Facebook
  • WhatsApp
KL Reshma
Updated on

தென்னிந்திய நடிகர்களில் முக்கியமானவர்தான் நிவின் பாலி. மலையாள நடிகரான இவர், நேரம், ரிச்சி போன்ற தமிழ் மொழி படங்களிலும் நடித்து தமிழ் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார். எல்லாவற்றுக்கும் மேலாக 'பிரேமம்' படத்தின் மூலம் இந்திய திரையுலகில் மேலும் பிரபலமாக அறியப்பட்டார். இவரது அசாதாரண நடிப்பால் ரசிகர்கள் மத்தியில் தற்போது வரை முன்னணி நடிகராக திகழ்ந்து வருகிறார்.

இந்த சூழலில் இவர் மீது பெண் ஒருவர் பாலியல் புகார் அளித்துள்ளார். கேரளாவின் எர்ணாகுளம் பகுதியில் அமைந்துள்ள நேரியமங்கலத்தைச் சேர்ந்த பெண் ஒருவர், கடந்த ஆண்டு பட வாய்ப்பு தருவதாகக் கூறி துபாய் ஹோட்டலில் நிவின் பாலி, தயாரிப்பாளர் ஏ.கே.சுனில் உள்ளிட்ட 6 பேர் தனக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக சிறப்பு புலனாய்வு குழுவிடம் (SIT) புகார் ஒன்றை அளித்தார்.

பாலியல் புகார் : “எந்த எல்லைக்கும் செல்வேன்” - மறுப்பு தெரிவித்த நிவின் பாலி - நடந்தது என்ன?

அந்த பெண் அளித்த புகாரை சிறப்பு புலனாய்வு குழுவினர், அதனை எர்ணாகுளம் மாவட்டத்தில் உள்ள ஊன்னுக்கல் (Oonnukal) காவல் நிலையத்தின் கவனத்துக்கு கொண்டு சென்றனர். இதையடுத்து நிவின் பாலி உள்ளிட்ட 6 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. 6 பேர் மீதும் பிணையில் வர முடியாத பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்த விவகாரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், தன் மீதான குற்றச்சாட்டுக்கு நிவின் மறுப்பு தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் தனது சமூக வலைதள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், "நான் பெண் ஒருவரை பாலியல் ரீதியாக துன்புறுத்தியாக வெளியான புகார் தவறானது. இது முற்றிலும் உண்மைக்கு புறம்பான குற்றச்சாட்டு என்பதை புரிந்துகொள்ளுங்கள்.

என் மீதான இந்தக் குற்றச்சாட்டுகள் ஆதாரமற்றவை என்பதை நிரூபிக்க எந்த எல்லைக்கும் செல்ல தயாராக இருக்கிறேன். அதற்கு தேவையான நடவடிக்கைகளை மேற்கொண்டு உண்மையை வெளிச்சத்துக்கு கொண்டு வருவேன். உங்கள் அக்கறைக்கு நன்றி. மற்ற விஷயங்கள் அனைத்தும் சட்டப்படி எதிர்கொள்ளப்படும்" என்று குறிப்பிட்டுள்ளார்.

பாலியல் புகார் : “எந்த எல்லைக்கும் செல்வேன்” - மறுப்பு தெரிவித்த நிவின் பாலி - நடந்தது என்ன?

மலையாள திரையுலகேயே தற்போது உலுக்கி வரும் நடிகைகள் மீதான திரை பிரபலங்களின் பாலியல் அத்துமீறல் விவகாரம் இந்திய திரையுலகினர் மத்தியிலும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது. ஹேமா கமிட்டி கடந்த சில நாட்களுக்கு முன்னர் வெளியிட்ட அறிக்கையின் மூலம், நடிகைகள் பாலியல் ரீதியாக சுரண்டப்படுவதும், மலையாளத் திரையுலகம் மாஃபியா பிடியில் சிக்கி உள்ளதும் தெரியவந்தது.

பாலியல் புகார் : “எந்த எல்லைக்கும் செல்வேன்” - மறுப்பு தெரிவித்த நிவின் பாலி - நடந்தது என்ன?

இந்த விவகாரத்தை தொடர்ந்து நடிகைகள் சிலர் வெளிப்படையாக புகார்கள் வைத்து வருகின்றனர். இந்த புகார்களின் அடிப்படையில் மலையாள நடிகர்கள் சித்திக், முகேஷ், ஜெயசூரியா, இடவேள பாபு, மணியம் பிள்ளை ராஜு, இயக்குநர் ரஞ்சித் உள்ளிட்ட பலர் மீதும் வழக்குப்பதிவு செய்யப்பட்டு வருகிறது. மேலும் நடிகர் மோகன்லால், மலையாள திரை நடிகர்கள் சங்கத்தில் இருந்து தனது தலைவர் பதவியை ராஜினாமா செய்ததுடன், அவருடன் சேர்ந்து 15 பேர் தங்கள் பதவிகளை ராஜினாமா செய்தனர்.

இதையடுத்து இந்த விவகாரம் குறித்து மோகன்லால், மம்முட்டி என்று ஒரு சில நடிகர்கள் ஹேமா கமிட்டியின் புகாருக்கு நீதிமன்றம் உரிய தண்டனை வழங்கும் என்று கருத்து தெரிவித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

banner

Related Stories

Related Stories