உலகம்
இஸ்ரேலுடன் நேருக்கு நேர் போருக்கு தயார் : ஹிஸ்புல்லாவின் அறிவிப்பால் போர் பதற்றம் !
கடந்த ஆண்டு அக்டோபர் 7-ம் தேதி, ஹமாஸ் அமைப்பு இஸ்ரேலை நோக்கி ஏவுகணைகளை அனுப்பி தாக்குதல் நடத்தியது. மேலும், இஸ்ரேலின் பல பகுதியில் நுழைந்து ஹமாஸ் அமைப்பினர் தாக்குதல் நடத்தினர்.இதில் நூற்றுக்கணக்கான இஸ்ரேல் குடிமக்கள் மற்றும் வெளிநாட்டினர் கொல்லப்பட்டனர். அதோடு ஏராளமானோரை ஹமாஸ் அமைப்பு பணயக்கைதிகளாக பிடித்து வைத்தது.
ஹமாஸ் அமைப்பின் இந்த நடவடிக்கைக்கு பதிலடியாக இஸ்ரேல் ராணுவம் காசா பகுதியில் விமானங்கள் மூலமும், ஏவுகணைகளை அனுப்பியும் தாக்குதல் நடத்தி வருகின்றனர்.காசாவில் இஸ்ரேல் மேற்கொண்ட போர் தொடங்கி 6 மாதங்கள் நிறைவடைந்த நிலையில் இந்த தாக்குதலில் 40 ஆயிரத்துக்கும் அதிகமான அப்பாவி பாலஸ்தீன குடிமக்கள் உயிரிழந்துள்ளதாக ஹமாஸ் அமைப்பின் கட்டுப்பாட்டில் உள்ள காசா சுகாதாரத்துறை அறிவித்துள்ளது.
இஸ்ரேல் ஹமாஸ் அமைப்புக்கு எதிராக போரினை அறிவித்ததும் ஹமாஸின் கூட்டாளியும், லெபனானில் செயல்படும் அமைப்புமான ஹிஸ்புல்லா இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்தியது. இதனால் இஸ்ரேல் லெபனானில் செயல்படும் ஹிஸ்புல்லா அமைப்பினர் மீது தாக்குதல் நடத்தி வருகிறது.அதற்கு பதிலடி கொடுக்கும் வகையில், இஸ்ரேலின் முக்கிய இலக்குகள் மீது ஹிஸ்புல்லாவும் தாக்குதல் நடத்தி வருகிறது.
சில நாட்களுக்கு முன்னர் ஹிஸ்புல்லா உள்ளிட்ட லெபனான் நாட்டில் ஆயுதக் குழுவினர் தகவல் தொடர்புக்காக பயன்படுத்தும் ஆயிரக்கணக்கான பேஜர்கள் ஒரே நேரத்தில் வெடித்து சிதறியதில் 8 பேர் உயிரிழந்துள்ளனர். இந்த தாக்குதலை இஸ்ரேல் நடத்தியதாக ஹிஸ்புல்லா குற்றம் சாட்டியது.
அதனைத் தொடர்ந்து ஹிஸ்புல்லா அமைப்பினரை குறிவைத்து இஸ்ரேல் நடத்திய வான்வெளி தாக்குதலில் ஹிஸ்புல்லாவின் முக்கிய படை தளபதி இப்ராஹிம் அகில் கொல்லப்பட்டதாக அறிவிக்கப்பட்டது. இந்த நிலையில், இஸ்ரேலுடன் இனி நேருக்கு நேர் போரிட முடிவு செய்துள்ளதாக ஹிஸ்புல்லா அமைப்பு அறிவித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இது குறித்துப் பேசிய ஹிஸ்புல்லா அமைப்பின் துணைப் பொதுச் செயலாளர் நைம் காசிம், “இஸ்ரேலின் தாக்குதலுகு நாங்கள் நிச்சயம் பதிலடி கொடுப்போம். அதற்கான ஏற்பாடுகள் நடந்து வருகிறது. இஸ்ரேல் படைகளுடன் நேருக்கு நேர் போரிடவும் முடிவு செய்யப்பட்டுள்ளது” என்று கூறியுள்ளார். ஆனால் இஸ்ரேலுடன் முழு நீளப் போர் தேவையில்லை என்று லெபனானின் முக்கிய அரசியல் கட்சித் தலைவர்கள் கூறியுள்ளதாகவ் செய்திகள் வெளியாகியுள்ளது.
Also Read
-
தேனியை உலுக்கிய சிறுமி வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்த வழக்கு.. இளைஞருக்கு நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு !
-
மகாராஷ்டிரா சட்டப்பேரவைத் தேர்தல்! : காங்கிரஸ், சிவசேனா (UBT), NCP (சரத்) கட்சிகளுக்கு தலா 85 தொகுதிகள்!
-
ரூ.13 கோடி லாபத்தில் இயங்கும் கோ-ஆப்டெக்ஸ் நிறுவனம்... அமைச்சர் ஆர்.காந்தி பெருமிதம் !
-
இர்பான் குழந்தைக்கு தொப்புள் கொடி வெட்டிய விவகாரம் : மருத்துவமனைக்கு அபராதம்; 10 நாட்கள் தடை - பின்னணி?
-
2ஆம் கட்ட மெட்ரோ ரயில் திட்டத்தில் தானியங்கி மெட்ரோ! : அக்டோபர் 26ஆம் நாள் சோதனை ஓட்டம்!