Tamilnadu
தமிழ்நாடு அரசின் பண்ணை பசுமை அங்காடி : பாதி விலையில் தக்காளி விற்பனை!
தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை காரணமாக, அதிகளவில் மழை பெய்து வருவதால், விளைச்சலில் குறைபாடு ஏற்பட்டுள்ளது.
இதன் விளைவாக, தமிழ்நாட்டில் கடந்த சில வாரங்களாகவே, தக்காளி, வெங்காயம் போன்ற அத்தியாவசிய காய்கறிகளின் விலை, உச்சம் தொட்டுள்ளது.
தக்காளி விலை சுமார் ரூ. 60 முதல் ரூ. 80 வரை விற்பனையாகி வருகிறது. இந்நிலையில், விலையேற்றத்தால், மக்கள் அவதியுறுவதை போக்க, தமிழ்நாடு அரசின் சார்பில் துரித நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாடு அரசின் பண்ணை பசுமை அங்காடியில், ஒரு கிலோ தக்காளி, ரூ.32 முதல் ரூ.60 வரை விலை நிர்ணயம் செய்து விற்கப்படுகிறது. ஒரு கிலோ வெங்காயம் விலை ரூ. 40 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
குறிப்பாக, அனைத்து வகை காய்கறிகளுமே தமிழ்நாடு அரசின் பண்ணை பசுமை அங்காடியில், வெளிச்சந்தையை விட குறைவான விலைக்கு விற்பனை செய்யப்படுகிற நிலையில், தக்காளியை பொறுத்தவரையில் வெளிச்சந்தை விற்பனை விட பாதி விலைக்கு விற்பனை செய்யப்படுவது குறிப்பிடத்தக்கது.
Also Read
-
ஜம்மு காஷ்மீருக்கு மாநில அந்தஸ்து வழங்குவது குறித்த வழக்கு விரைவில் விசாரணை - உச்சநீதிமன்றம் உறுதி !
-
HipHop Tamizha-வின் இசை நிகழ்ச்சி: பார்வையாளர்கள் இலவசமாக மெட்ரோ ரயிலில் பயணிக்கலாம்... முழு விவரம் என்ன?
-
”எந்த மழை வந்தாலும் அதை சந்திக்க அரசு தயார்” : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேட்டி!
-
2 நாளில் 14,84,735 பேருக்கு உணவு : பெரும் மழையிலும் மக்கள் பசியாற்றிய அரசு!
-
கள்ளச்சாராயம் குடித்து 20 பேர் உயிரிழப்பு : பா.ஜ.க கூட்டணி ஆட்சி நடக்கும் பீகார் மாநிலத்தில் அவலம்!