Tamilnadu
சென்னை பட்டினப்பாக்கம் நவீன மீன் அங்காடி : விரைவில் செயல்படத் தொடங்கும்!
சென்னை பட்டினப்பாக்கம் மெரினா லூப் சாலையில் 9.97 கோடி ரூபாய் செலவில் கட்டப்பட்ட நவீன மீன் அங்காடியை கடந்த ஆகஸ்ட் 12ம் நாள் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்.
366 கடைகள் கொண்ட மீன் அங்காடியில் கடைகள் ஒதுக்கீடு செய்வதற்கு ஏற்பட்ட தாமதம் காரணமாக மீன் அங்காடி செயல்படுவதில் தாமதம் ஏற்பட்ட நிலையில், தற்போது கடைகள் ஒதுக்கீடு செய்யும் பணிகள் முடிவடைந்துள்ளது.
இந்நிலையில், சென்னை விமான சாகசம் நிறைவடைந்த பின் திங்கள் முதல் பட்டினப்பாக்கம் லூப் சாலையில் புதிதாக கட்டப்பட்ட நவீன மீன் அங்காடியில் கடைகள் மாற்றப்படும் என சென்னை மாநகராட்சி ஆணையர் குமரகுருபரன் தெரிவித்துள்ளார்.
மேலும், பட்டினப்பாக்கம் லூப் சாலையில் நடைபாதை வியாபாரம் மேற்கொள்ள தடை செய்யப்பட்ட பகுதியாக அறிவிக்கப்பட்டுள்ளது. சென்னை உயர்நீதிமன்ற உத்தரவுப்படி லூப் சாலையோரங்களில் மீன் கடை மற்று. ஆக்கிரமிப்புகளுக்கு அனுமதியில்லை என்றும், மீறினால் காவல்துறை நடவடிக்கை எடுக்கப்படும் என சென்னை மாநகராட்சி சார்பில் எச்சரிக்கை பலகை அமைக்கப்பட்டுள்ளது.
Also Read
-
பாலியல் வழக்கு : முன்னாள் MP பிரஜ்வல் ரேவண்ணா ஜாமின் மனு தள்ளுபடி : கர்நாடக உயர்நீதிமன்றம் அதிரடி !
-
"சல்மான் கானுக்கு மிரட்டல் விடுத்தது தவறுதான், மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன்" - காவல்துறைக்கு வந்த மெசேஜ்!
-
சூடானில் சுட்டு வீழ்த்தப்பட்ட ரஷ்யாவை சேர்ந்த ராணுவ விமானம் : முழு விவரம் என்ன ?
-
ஜார்க்கண்ட் : JMM கட்சியில் இணைந்த முக்கிய தலைவர்கள்... பாஜகவுக்கு பெரும் பின்னடைவு !
-
செம்மொழி தமிழாய்வு மத்திய நிறுவனத்தை மூடப்பார்த்ததுதான் பாஜக அரசு - அம்பலப்படுத்திய முரசொலி !