Tamilnadu
கிணற்றில் விழுந்த மான் : துணிச்சலுடன் மீட்ட 9 ஆம் வகுப்பு பள்ளி மாணவன்!
தென்காசி மாவட்டம், பாவூர்சத்திரம் பகுதியில் உள்ள ஒரு தோட்டத்தில் அரியவகை புள்ளி மான்கள் மேய்ந்து கொண்டிருந்தது. அப்போது, மானை பார்த்த தெருநாய்கள் விரட்டியுள்ளது.
இதனால் மான்கள் அங்கிருந்து ஓடியது. அப்போது ஒரு மான் மட்டும் அருகே இருந்த கிணற்றுக்குள் தவறி விழுந்து உயிருக்கு போராடிக் கொண்டிருந்தது.
அதைப் பார்த்த அந்த பகுதியை சேர்ந்த பள்ளி மாணவன் பொன் ஆன்ட்ரூஸ் கிணற்றில் குதித்து கயிறுமூலம் மானை மீட்க முயற்சி செய்துள்ளார். ஆனால் மாணவனால் தனியாக மானை மீட்க முடியவில்லை.
பிறகு மாணவனுடன் சேர்ந்து இளைஞர் ஒருவரும் மீட்பு பணியில் ஈடுபட்டுள்ளார். இது குறித்து தீயணைப்புத் துறைக்கு தகவல் கொடுக்கப்பட்டுள்ளது. பின்னர் அங்கு வந்த தீயணைப்பு வீரர்கள் மானை ஒரு மணி நேர போராட்டத்திற்கு பிறகு வலை மூலமாக மீட்டனர்.
துணிச்சலுடன் தீயணைப்புத்துறையுடன் சேர்ந்து மானை மீட்ட மாணவன் பொன் ஆன்ட்ரூஸ்க்கு அப்பகுதி மக்கள் பாராட்டு தெரிவித்தனர்.
Also Read
-
“புல்டோசர் ஆட்சிக்கு காந்தி ஒப்புதல் அளித்திருப்பாரா?” : முன்னாள் ஒன்றிய அமைச்சர் ப.சிதம்பரம் பதிலடி!
-
ரூ.3,000 கோடி நிவாரணம் கோரிய கேரளாவிற்கு, வெறும் ரூ.145 கோடி நிதி!: தொடரும் ஒன்றிய பா.ஜ.க.வின் பாரபட்சம்!
-
”உத்தமர் காந்தியடிகளின் புகழ் என்றும் நிலைத்திருக்கும்” : துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின்
-
அணிந்து மகிழ்வோம் கதராடைகளை : காந்தியடிகளின் பிறந்த நாளில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வேண்டுகோள்!
-
“அருவருப்பான அரசியலில் பா.ஜ.க - ஆர்.எஸ்.எஸ் இறங்கி உள்ளது!” : செல்வப்பெருந்தகை கண்டனம்!