Tamilnadu
வன்முறையை ஏற்படுத்த முயலும் எச்.ராஜா : கைது செய்ய கோரி காவல் நிலையத்தில் காங்கிரஸ் புகார்!
தமிழ்நாடு பா.ஜ.க ஒருங்கிணைப்புக்குழு தலைவர் எச். ராஜாவை கைது செய்ய கோரி அகில இந்திய காங்கிரஸ் கட்சி சார்பில் திருப்பூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் புகார் மனு அளிக்கப்பட்டுள்ளது.
அந்த மனுவில்,”மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்திக்கு எதிராக பா.ஜ.க தலைவர்கள் அவதூறு கருத்துக்களை பரப்பி வருகிறார்கள். தமிழ்நாட்டு பா.ஜ.க ஒருங்கிணைப்புக்குழு தலைவராக இருக்கும் எச்.ராஜா, ராகுல் காந்தி அவர்களை ஆன்டி இண்டியன் என்றும் தேச துரோகி என்றும் பேசியுள்ளார்.
மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட மக்களவை எதிர்க்கட்சி தலைவரை வெறுப்பு அரசியலை கொண்டு அவதூறு கருத்துக்களை பரப்பி வருகிறார். மேலும் வன்முறையை தூண்ட பார்க்கிறார். எனவே எச்.ராஜா மீது வழக்கு பதிவு செய்து அவரை கைது செய்ய வேண்டும்” என தெரிவிக்கப்பட்டுள்ளது.
காங்கிரஸ் கமிட்டியின் தேசிய செயலாளர் கோபிநாத் பழனியப்பன், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அபிஷேக் குப்தாவிடம் நேரில் புகார் மனு அளித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
Also Read
-
கொடநாடு கொலை, கொள்ளை வழக்கு : தற்கொலை செய்து கொண்ட தினேஷின் செல்போன் குறித்து போலீசார் விசாரணை !
-
இந்தியர்களை மீட்க உடனடி நடவடிக்கை வேண்டும் : தி.மு.க எம்.பி கலாநிதி வீராசாமி, ஒன்றிய அமைச்சருக்கு கடிதம்!
-
ஊழியர்கள் டிஸ்மிஸ் விவகாரம் : பெரியார் பல்கலை. துணைவேந்தர் தொடர்ந்த வழக்கு தள்ளுபடி !
-
10 கோடிப் பார்வைகளைக் கடந்து அருஞ்சாதனை புரிந்துள்ளது ‘தமிழ் மின் நூலகம்!’ : தமிழ்நாடு அரசு தகவல்!
-
"எஸ்.பி. பாலசுப்பிரமணியம் சாலை!" : SPB நினைவு நாளில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு!