Tamilnadu
கிராம நிர்வாக அதிகாரிக்கு கொலை மிரட்டல் : பா.ஜ.க மாவட்ட நிர்வாகி கைது!
கள்ளக்குறிச்சி மாவட்டம், உளுந்தூர்பேட்டை அருகே குச்சிப்பாளையம் என்ற கிராமம் உள்ளது. இங்கு ஏரி மண் எடுப்பது தொடர்பாக கிராம நிர்வாக அலுவலர் அசோக்குமார் என்பவருக்கு புகார் வந்துள்ளது.
இந்த புகாரை அடுத்து அசோக்குமார், ஊராட்சி மன்ற துணைத் தலைவர் முருகன் என்பவரிடம் கேட்டுள்ளார். அப்போது அவர் முறையாக பதில் எதுவும் சொல்லாமல் கிராம நிர்வாக அலுவலரை தகாத வார்த்தைகளால் திட்டியுள்ளார். மேலும் அவருக்கு கொலை மிரட்டல் விடுத்துள்ளார்.
இதனைத் தொடர்ந்து, முருகன் மீது கிராம நிர்வாக அலுவலர் அசோக்குமார் காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார். இந்த புகாரை அடுத்து போலிஸார் வழக்கு பதிவு செய்து முருகனை கைது செய்தனர். கைது செய்யப்பட்ட முருகன் பா.ஜ.க கள்ளக்குறிச்சி மாவட்ட ஓபிசி அணி மாவட்ட துணை தலைவராக இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
Also Read
-
காலையில் ஜாமீன்.. மீண்டும் கைது.. தொடர் சிக்கலில் பாஜக MLA: பெண் அளித்த பாலியல் புகாரால் அதிரடி -பின்னணி?
-
மோடி பிறந்தநாளிலும் மோசடி... அம்பலமான உ.பி. பாஜக மேயர் செய்த தில்லாலங்கடி வேலை - வீடியோ !
-
4 ஆவதாகவும் பெண் குழந்தை : தந்தை செய்த கொடூர செயல் - உ.பி.யில் அதிர்ச்சி!
-
மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கு உதவித் தொகையை இருமடங்காக உயர்வு - தமிழ்நாடு அரசு அதிரடி ஆணை !
-
”ஒரே நாடு ஒரே தேர்தலை இந்திய நாடு ஏற்றுக்கொள்ளாது" : கனிமொழி எம்.பி பேட்டி!