Tamilnadu
சந்தன மரங்களுக்கான விலை நிர்ணயம்! : அரசாணை வெளியிட்டது தமிழ்நாடு அரசு!
சந்தன மரங்களுக்கான விலையை, ஆண்டுகளின் அடிப்படையில் நிர்ணயித்து அரசாணை வெளியிட்டுள்ளது தமிழ்நாடு அரசு. அதன் படி, கடந்த 4 ஆண்டுகளுக்கான மரங்களுக்கு புதிய விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
சுமார் 15 வகையான சந்தன மரங்களுக்கு, மரங்களின் வகைகளுக்கேற்ப விலை நிர்ணயித்து, நியாய விலை மற்றும் சில்லறை விலை இரண்டையும் வெளியிட்டுள்ளது தமிழ்நாடு அரசு.
2020-21ஆம் ஆண்டு முதல் 2023-24ஆம் ஆண்டுக்கான மரங்களுக்கு, அவற்றின் தரம், வகைகளுக்கேற்ப விலை என்ற வகையில் சோட்லா வகை சந்தன மரத்துக்கு நியாய விலையாக மெட்ரிக் டன் ஒன்றுக்கு, ரூ.1 கோடியே 64 லட்சத்து 35.2 ஆயிரம் விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
அதே வகை மரத்துக்கு சில்லறை விலையாக 2020-21ஆம் ஆண்டு மரத்துக்கு மெட்ரிக் டன் ஒன்றுக்கு ரூ.1 கோடியே 91 லட்சத்து 63,443 ஆகவும், 2021-22-ம் ஆண்டு மரத்துக்கு 6% விலை உயர்வுடன், ரூ.2 கோடியே 3 லட்சத்து 13,250 ஆகவும், 2022-23-ம் ஆண்டுக்கு, ரூ.2 கோடியே 15 லட்சத்து 32,045 ஆகவும், 2023-24-ம் ஆண்டுக்கு ரூ.2 கோடியே 28 லட்சத்து 23,967 ஆகவும் விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
நியாய விலையை விட, சில்லறை விலைக்கு ஒவ்வோர் ஆண்டுக்கு 6% விலை அதிகரித்து நிர்ணயம் செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.
இதேபோல், கட்பெல்லா, ரூட்ஸ், ஜஜ்போகல், எய்ன்பகர், செரியா, ஐன்சிட்லா, மில்வாசிட்லா, பசோலா புக்னி, தீயால் பாதிக்கப்பட்ட மரங்கள் மற்றும் சா டஸ்ட் என்று ஒவ்வோர் வகை மரங்களுக்கும் 6% வித்தியாசத்தில் விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
Also Read
-
’இந்திய வரலாறு தெற்கில் இருந்து எழுதப்பட வேண்டும்' : சிந்து சமவெளி ஆய்வு மூலம் நிரூபித்த ஜான் மார்ஷல் !
-
சங் பரிவாரங்களின் வரலாற்றுப்புளுகுகளை ஆட்டம் காணச் செய்த சிந்துவெளி நாகரிகம்: எழுத்தாளர் ச.தமிழ்ச்செல்வன்
-
கிராம நிர்வாக அதிகாரிக்கு கொலை மிரட்டல் : பா.ஜ.க மாவட்ட நிர்வாகி கைது!
-
ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு : 25 குற்றவாளிகளுக்கு குண்டாஸ் - காவல் ஆணையர் அதிரடி!
-
”GSTயை முறைப்படுத்தி ஒரே மாதிரி பில் போட வசதி செய்யுங்கள்” : வானதி சீனிவாசனுக்கு சு.வெங்கடேசன் பதிலடி!