Tamilnadu
"கலைஞருக்கு ஒரு கோட்டையை கட்டியிருக்கிறார் எ.வ.வேலு" : நூல் வெளியிட்டு விழாவில் அமைச்சர் உதயநிதி புகழாரம்
அமைச்சர் எ.வ.வேலு எழுதிய ’கலைஞர் எனும் தாய்’ நூல் வெளியிட்டு விழா சென்னை கலைவானர் அரங்கில் நடைப்பெற்று வருகிறது. நூலின் முதல் பிரதியை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட நடிகர் ரஜினிகாந்த் பெற்றுக்கொண்டார்.
முன்னதாக வரவேற்புரையாற்றிய அமைச்சர் உயநிதி ஸ்டாலின்,”எ.வ.வேலு என்றால் எதிலும் வல்லவர் என்று தலைவர் கலைஞர், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆகியோரால் பாராட்டுகளை பெற்றவர் இந்த நூலின் மூலம் எழுத்திலும் வல்லவர் என்று நிரூபித்திருக்கிறார்.
திருவண்ணாமலையை தி.மு.க-வின் கோட்டையாக மாற்றிக் காட்டியவர் அமைச்சர் எ.வ.வேலு. திராவிட மாடல் அரசின் பல்வேறு கட்டமைப்புகளை கட்டியெழுப்பியவர் இன்று சொற்களால் கலைஞருக்கு ஒரு கோட்டையை கட்டியிருக்கிறார்.
தலைவர் கலைஞர் பற்றி பல்வேறு நூல்கள் வந்துள்ளது. ஆனால் முதன்முதலாக தலைவர் கலைஞரை தாயோடு ஒப்பிட்டு, “கலைஞர் எனும் தாய்” நூலை எழுதியுள்ளார் அமைச்சர் எ.வ.வேலு. பெண்கள் மட்டும் தாய் அல்ல; வீரமுள்ள ஆண் மகன்களும் தாய்மை அடைவது உண்டு என்ற கலைஞர் சொல்லியிருக்கிறார். அந்தவகையில் தலைவர் முத்தமிழறிஞர் கலைஞரை தாய் என்று சொல்வது மிகவும் பொருத்தமானது” என தெரிவித்துள்ளார்.
Also Read
-
காலையில் ஜாமீன்.. மீண்டும் கைது.. தொடர் சிக்கலில் பாஜக MLA: பெண் அளித்த பாலியல் புகாரால் அதிரடி -பின்னணி?
-
மோடி பிறந்தநாளிலும் மோசடி... அம்பலமான உ.பி. பாஜக மேயர் செய்த தில்லாலங்கடி வேலை - வீடியோ !
-
4 ஆவதாகவும் பெண் குழந்தை : தந்தை செய்த கொடூர செயல் - உ.பி.யில் அதிர்ச்சி!
-
மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கு உதவித் தொகையை இருமடங்காக உயர்வு - தமிழ்நாடு அரசு அதிரடி ஆணை !
-
”ஒரே நாடு ஒரே தேர்தலை இந்திய நாடு ஏற்றுக்கொள்ளாது" : கனிமொழி எம்.பி பேட்டி!