Tamilnadu

”குஷ்புவை முதலில் எனது பதிவை பார்க்க சொல்லுங்கள்” : கனிமொழி MP பதிலடி!

மேற்குவங்க மாநிலம் கொல்கத்தாவில் உள்ள ஆர்.ஜி.கர் மருத்துவமனையில் பெண் மருத்துவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவம் நாட்டையே அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.

இந்த சம்பவத்தில் தொடர்புடைய குற்றவாளிகளை கைது செய்ய வலியுறுத்தி நாடு முழுவதும் மருத்துவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். தமிழ்நாட்டில் கூட இன்று மருத்துவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

இதற்கு முன்னதாக இந்த கொடூர சம்பவத்திற்கு தி.மு.க நாடாளுமன்றக்குழு தலைவர் கனிமொழி MP கண்டனம் தெரிவித்து இருந்தார். அதில் ”பெண் மருத்துவர் வன்கொடுமை செய்து கொலை செய்யப்பட்டுள்ள கொடூர சம்பவம் நாட்டையே ஆதிர்ச்சியடைய வைத்துள்ளது.இந்தியாவில் இருக்கும் பெண்கள் பாதுகாப்பாக இருக்கிறார்களா என்று நினைக்க வேண்டிய கட்டாயத்தில் நாம் இருக்கிறோம்” என தெரிவித்துள்ளார்.

ஆனால் இவரது கண்டனத்தை பார்க்காமலும், தெரிந்துகொள்ளாமலும் பா.ஜ.க நிர்வாகி குஷ்பு கனிமொழி எம்.பியை விமர்சித்துள்ளார். இதற்கு கனிமொழி எம்.பி, மருத்துவ மாணவி வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட கொடூர சம்பவத்திற்கு சமூகவலைதளத்தில் எனது கண்டனத்தை பதிவு செய்து இருக்கிறேன். குஷ்புவை முதலில் எனது பதிவை பார்க்க சொல்லுங்கள். பிறகு பேச சொல்லுங்கள்.” என தெரிவித்துள்ளார்.

Also Read: "காங்கிரஸ் அறிவிக்கும் முதல்வர் வேட்பாளருக்கு ஆதரவு கொடுக்க தயார்"- உத்தவ் தாக்கரே அறிவிப்பு !