Tamilnadu

I Phone-ஐ தொடர்ந்து I Pad : தமிழ்நாட்டில் தயாரிக்க Foxconn நிறுவனம் முடிவு!

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான தி.மு.க அரசு ஆட்சிக்கு வந்ததில் இருந்து தமிழ்நாட்டின் தொழிற்துறையை முன்னேற்ற பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அதன் ஒரு பகுதியாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளிநாடுகளில் நடந்த தொழிற்துறை கூட்டங்களில் கலந்துகொண்டு தமிழ்நாட்டில் தொழில்களை தொடங்க அழைப்பு விடுத்தார்.

அதன்படி தமிழ்நாட்டில் கடந்த இரண்டு ஆண்டுகளில் ஏராளமான நிறுவனங்கள் தங்கள் தொழிற்சாலைகளை அமைத்துள்ளன. இதன் மூலம் ஏராளமான தமிழக இளைஞர்கள் வேலைவாய்ப்பை பெற்றுள்ளனர்.

அதன்படி சென்னையை அடுத்துள்ள ஸ்ரீபெரும்புதூரில் உள்ள Foxconn தொழிற்சாலையில் ஆப்பில் நிறுவனத்தின் I Phone தயாரிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், I Phone-களுடன், வரும் காலத்தில் I Pad-களையும் தயாரிக்க பாக்ஸ்கான் நிறுவனம் முடிவு செய்துள்ளது.

மேலும் ஆப்பிள் நிறுவனத்தின் இதர தயாரிப்புகளையும் தமிழ்நாட்டிலேயே உற்பத்தி செய்ய Foxconn நிறுவனம் முடிவு செய்துள்ளது.இந்த முடிவுகளை அடுத்து Foxconn நிறுவனத்தில் வேலை வாய்ப்புகள் கணிசமாக அதிகரிக்கக்கூடும்.

Also Read: தமிழ்நாட்டில் ரூ.16000 கோடிக்கு VinFast நிறுவனம் முதலீடு: தொழில் வளர்ச்சியில் பெரும் பாய்ச்சல்- முதல்வர்!