Tamilnadu

கொழுந்துவிட்டு எரிந்த சொகுசு பேருந்து : உயிர் தப்பிய 30 பேர் - நடந்தது என்ன?

திருவண்ணாமலையில் இருந்து 30 பயணிகளுடன் கோவை நோக்கி தனியார் சொகுசு பேருந்து ஒன்று சென்று கொண்டிருந்தது. இப்பேருந்து இன்று அதிகாலை கோவை அருகே வந்து கொண்டிருந்தது.

அப்போது பேருந்தில் இருந்து திடீரென புகை வருவதை பார்த்த ஓட்டுநர் உடனே சாலை ஓரமாக பேருந்தை நிறுத்தினார். பின்னர் பயணிகள் கீழே இறங்கிய சில நிமிடத்திலேயே பேருந்து முழுவதும் தீப்பிடித்து எரிந்தது.

பின்னர் இது குறித்து பீளமேடு காவல்துறை மற்றும் தீயணைப்புத் துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்புத் துறையினர் தீயை அணைப்பதற்குள் பேருந்து முழுவதுமாக எரிந்து நாசமானது.

இது குறித்து பீளமேடு காவல் துறையினர் டீசல் கசிவு அல்லது குளிர்சாதன பெட்டியில் இருந்து தீ விபத்து ஏற்பட்டதா? என வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Also Read: உயிருடன் புதைக்கப்பட்ட 2 பெண்கள் : பா.ஜ.க ஆட்சி செய்யும் மத்திய பிரதேசத்தில் கொடூரம்!