Tamilnadu
குளிக்கச் சென்ற நண்பர்கள் : 10 ஆம் வகுப்பு மாணவனுக்கு நடந்த துயரம்!
திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அடுத்த புதூர் பகுதியைச் சேர்ந்தவர் சரவணன். இவரது மகன் தமிழ்ச்செல்வன். சிறுவன் அருகே உள்ள பள்ளியில் 10 ஆம் வகுப்பு படித்து வந்தான்.
இந்நிலையில் இன்று பள்ளி விடுமுறை என்பதால் நண்பர்களுடன் சேர்ந்த வேப்பமரத்து சாலை பகுதியில் உள்ள கிணற்றில் குளிக்கச் சென்றுள்ளான்.
அப்போது தமிழ்ச்செல்வன் நீரில் மூழ்கியுள்ளார். இதுபற்றி அறிந்த அப்பகுதி மக்கள் உடனே போலிஸாருக்கும், தீயணைப்பு துறைக்கும் தகவல் கொடுத்துள்ளனர்.
பின்னர் விரைந்து வந்த தீயணைப்புத் துறையினர் ஒரு மணி நேரம் போராடி தமிழ்செல்வனை சடலமாக மீட்டனர். இந்த சம்பவம் குறித்து போலிஸார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
நண்பருடன் குளிக்கச் சென்ற 10 ஆம் வகுப்பு மாணவன் நீரில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
Also Read
-
“மூடநம்பிக்கைகளால் கட்டுப்படுத்தப்பட்டவர்களுக்கு போராட அதிகாரம் அளித்தது திமுக” - கனிமொழி MP நெகிழ்ச்சி!
-
“நாக்கை அறுப்பவருக்கு ரூ.11 லட்சம்” - ராகுல் குறித்து பாஜக கூட்டணி MLA சர்ச்சை பேச்சு - குவியும் கண்டனம்!
-
மீண்டும் மஞ்சப்பை பிரசாரம் : சுற்றுச்சூழலுக்கு உகந்த மாற்றுகளில் புதுமைகளை உருவாக்குவோம் -தமிழ்நாடு அரசு!
-
”அமெரிக்க பயணம் வெற்றிப்பயணம் மட்டுமல்ல சாதனை பயணம்” : தினத்தந்தி நாளேடு புகழாரம்!
-
பிரபல நடனக் கலைஞர் ஜானி மாஸ்டர் மீது இளம் பெண் நடனக் கலைஞர் பாலியல் புகார் !