Tamilnadu
ரூ. 4 கோடி பறிமுதல் செய்யப்பட்ட வழக்கு : நயினார் நாகேந்திரனிடம் 7 மணிநேரங்களுக்கு மேல் நடந்த விசாரணை!
நாடாளுமன்ற மக்களவை தேர்தல் பிரச்சார நேரத்தின் போது, தேர்தல் நடத்தை விதிகள் அமலில் இருந்த வேளையில், நெல்லையிலிருந்து தாம்பரம் தொடர்வண்டி நிலையம் கொண்டுவரப்பட்ட ரூ. 4 கோடியை, தாம்பரம் காவல்துறை பறிமுதல் செய்தது.
இதனையடுத்து மேற்கொள்ளப்பட்ட விசாரணையில், இவ்வழக்கு சி.பி.சி.ஐ.டி.க்கு மாற்றப்பட்டு, அதில் பா.ஜ.க நிர்வாகிகள் பலர் தொடர்பிருந்தது தெரியவந்தது.
இந்நிலையில், ரூ. 4 கோடி பறிமுதல் செய்யப்பட்ட வழக்கில், நேற்றைய நாள் (15.7.24) தமிழ்நாடு பா.ஜ.க அமைப்புச் செயலாளர் கேசவ விநாயத்திற்கு உச்சநீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியது.
அதனையடுத்து, இன்று (16.7.24) சென்னை சி.பி.சி.ஐ.டி அலுவலகத்தில் ஆஜரான பா.ஜ.க சட்டமன்ற உறுப்பினர் நயினார் நாகேந்திரனிடம் காலை முதல் மாலை வரை தீவிர விசாரணை நடத்தப்பட்டது.
இவ்விசாரணை சுமார் 7 மணிநேரங்கள் நடத்தப்பட்ட பின், நயினார் நாகேந்திரன் சி.பி.சி.ஐ.டி அலுவலகத்தில் இருந்து வெளிவந்தார்.
Also Read
-
“மூடநம்பிக்கைகளால் கட்டுப்படுத்தப்பட்டவர்களுக்கு போராட அதிகாரம் அளித்தது திமுக” - கனிமொழி MP நெகிழ்ச்சி!
-
“நாக்கை அறுப்பவருக்கு ரூ.11 லட்சம்” - ராகுல் குறித்து பாஜக கூட்டணி MLA சர்ச்சை பேச்சு - குவியும் கண்டனம்!
-
மீண்டும் மஞ்சப்பை பிரசாரம் : சுற்றுச்சூழலுக்கு உகந்த மாற்றுகளில் புதுமைகளை உருவாக்குவோம் -தமிழ்நாடு அரசு!
-
”அமெரிக்க பயணம் வெற்றிப்பயணம் மட்டுமல்ல சாதனை பயணம்” : தினத்தந்தி நாளேடு புகழாரம்!
-
பிரபல நடனக் கலைஞர் ஜானி மாஸ்டர் மீது இளம் பெண் நடனக் கலைஞர் பாலியல் புகார் !